மண்ணில் புதைந்ததென?
மாவீரர் இல்லங்கள்
தகர்க்கப்பட்டதென?
துயிலும் இல்லங்களைத்
துடைத்தெறிந்தோம்..
துகிலுரிக்கப்பட்ட உன்
தமிழச்சி போலென
கொக்கரிக்கட்டும்
சிங்களம் செருக்குடன்!
கல்லறைகளில் மட்டுமா
வீரர்கள் உறைந்தனர்!
தமிழீழ மண்ணெங்கும்
காற்றாய் நிறைந்தனர்!
இன்று அவ்வில்லங்கள்
இணையத்தில்..
என்றும் அவ்வில்லங்கள்
இதயத்தில்...!
புரட்டிப் போடட்டும்
வீரம் விதைத்த மண்ணை!
வரலாறு மறக்காது
விதைகளின் எண்ணை!
போயிற்று களம் என
அழுவது வீணடா!
ஒரு போகம் விளைந்ததும்
உழுவது ஏனடா?
உனக்குமா தெரியாது
உழவின் அரிச்சுவடி?
நல்லேரைக் கொண்டுழுது
அடிமண்ணை மேலெழுப்பி
சத்தாக்குவோம்!
நெல் வேரை உரமாக்கி
விளைச்சலுக்கு அதனையே
சொத்தாக்குவோம்!
அன்று நாம் விதைத்தோம்!
அவன் அறுத்தான்!!
முதல் போகம் முடிந்தது!
இன்று..
அறுத்தவன் உழுகிறான்
இனி...
நாம் விதைப்போம்..
நாம் அறுப்போம்!
விதையாக விழுந்தவர்கள்
உரமாக மாறுவர்!
உறுதியாய் நம் தமிழர்
தமிழீழம் காணுவர்!
கருத்துகள்
நம்பிக்கை கொள்ள வைக்கின்றன தங்களின் வார்த்தைகள்... நன்றி தோழர்!