முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இணையத் தமிழை சமஸ்கிருத மயமாக்க முயற்சி! - ஆரிய நரிகள் மீண்டும் வாலாட்டம்

கணினித்துறை, இணையம் இவற்றில் இந்திய மொழிகளிலேயே அதிக அளவில் வளர்ச்சி கண்டு வருவது தமிழ்தான். அதிலும் ஒருங்குறி எனப்படும் யூனிகோட் முறையில் தமிழ் எழுத்துகள் வந்தபிறகு எண்ணற்ற இணையதளங்கள் பழந்தமிழ் இலக்கியங்களையும், புதிய படைப்புகளையும் கொண்டும் அறிவியல் கருத்துகளை எளிய தமிழில் தந்து வருகின்றன. இதை எவ்விதத் தடங்கலுமின்றி, உலகின் எந்த மூலையிலிருந்தும் எழுத்துரு (Font) தடையின்றி படிக்கலாம்; எழுதலாம். கூகிள், விண்டோஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் யூனிகோட் தமிழை அங்கீகரித்து தங்களது மென்பொருள்களிலும் இவற்றை பயன்படுத்திவருகின்றனர்.

ஏற்கெனவே தமிழுக்கென உலக அளவிலான யூனிகோட் ஒதுக்கீட்டில் 128 இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. இதை அதிகப்படுத்தி தமிழ் எழுத்துகள் அனைத்துக்கும் இடம் கிடைத்தால் தான் எளிமையாகவும், வேகமாகவும் பணிகள் நடைபெறும் . இதற்காக யூனிகோட் சேர்த்தியத்திடம் (Unicode Consortium) கணினித் தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே தமிழ் எழுத்துகளுடன், வழக்கத்தில் இருக்கும் கிரந்த எழுத்துகளான ஜ, ஷ, ஸ, ஹ, ஸ்ரீ ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் அறிஞர்களின் வேண்டுகோளுக்கேற்ப தமிழக அரசும் யூனிகோடு முறையை அங்கிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழ் எழுத்துகளுடன் புதிதாக சில கிரந்த எழுத்துகளையும் சேர்க்கும் முயற்சியை தமிழ் அறிஞர்களுக்கும், தமிழக அரசுக்கும் தெரியாமல் பார்ப்பனக் கும்பல் மேற்கொண்டுள்ளது. இவர்கள் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள 26 கிரந்த எழுத்துகளை இதுவரை நாம் பார்த்திருக்க வாய்ப்பேயில்லை. தமிழுக்கு சற்றும் தொடர்பில்லாத, தமிழ் எழுத்துகளுக்கும், தமிழ் எழுத்து முறைக்கும், இலக்கணத்திற்கும் எந்தத் தொடர்புமில்லாத சமஸ்கிருத (கிரந்த) எழுத்துகளைத் தமிழில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருப்பவர் யார் தெரியுமா? ஸ்ரீ ரமண சர்மா என்ற பச்சைப் பார்ப்பனர்.

அதற்கு அவர் எடுத்துக்காட்டியிருக்கும் ஆதாரம் எது தெரியுமா? காமகோடி கோஷாஸ்தனத்திலிருந்து சில வரிகள் மற்றும் டி.எஸ். நாராயண சாஸ்திரியின் போஜ சரிதம்'. இப்போது புரிந்திருக்குமே இந்தச் சூழ்ச்சி வலையின் சூத்திரதாரிகள் யாரென்று! சந்தேகமேயில்லாமல் சங்கரமடத்தின் கைகள் தான் இதன் பின்னால் ஒளிந்திருக்கின்றன. காமகோடி பீடத்தைச் சேர்ந்த ஆயுர்வேதக் கல்லூரியும், சமஸ்கிருதக் கல்லூரியும் ஸ்ரீரமண சர்மாவின் பின்னணியில் இருந்து கிரந்த எழுத்துகளை தமிழ் என்று இணைக்க முயற்சிக்கின்றன.

தமிழ் மொழிக்குடும்பம் வேறு! ஆரிய சமஸ்கிருத மொழிக்குடும்பம் வேறு! இரண்டின் எழுத்துகளும், அதற்கான முறைகளும், ஒலிப்புகளும் வேறானவை. ஆனால் இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சி வெற்றி பெற்றால் இனி வரும் காலத்தில் தமிழுடன் இந்த 26 கிரந்த எழுத்துகளும் இணைந்தே இருக்கும். வளர்ந்துவரும் இணையத் தமிழ் தான் அடுத்துவரும் அத்தனை தலைமுறைக்கும் தமிழின் அடிப்படையாக இருக்கப்போகிறது.

"இது நீண்டகாலச் சதி. இந்த யூனிகோட் சேர்த்தியம் என்பது பன்னாட்டு நிறுவனம். அதன் சட்ட திட்டங்கள் ஓட்டை உடைசல்களைக் கொண்டன. யார் வேண்டுமானாலும் எந்த மொழியிலும் இன்னின்ன மாற்றங்கள் வேண்டும் என்று சொல்லி எழுதிக் கொடுக்கலாம். அதற்கு உள்ளேயும் தொடர்பிலேயும் சற்று வேண்டியவர்கள் இருந்தால் ஒரு மொழிக்கு என்ன கேடுகளை வேண்டுமானாலும் செய்யலாம். இதைப் பயனடுத்தி ஆரிய நரிகள் சமஸ்கிருத எழுத்துகளை உள்நுழைக்கப் பார்க்கின்றனர். இதற்கு தமிழ்ப்பற்றாளர்களும், மிக முக்கியமாக தமிழக அரசும் கடுமையான கண்டனத்தையும், மறுப்பையும் உடனடியாகப் பதிவு செய்யவேண்டும். அக்டோபர் 25-ஆம் தேதி யூனிகோடு சேர்த்தியம் சர்மாவின் முன்வைப்பைப் பரிசீலனைக்கு எடுக்கிறது, கடந்த இரண்டுநாட்களில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இது குறித்து யூனிகோடு நிறுவனத்திற்கு தொடர்ந்து எழுதி முடிவு எடுப்பதை சில நாட்கள் தள்ளிப் போடும்படி செய்துள்ளனர். அதற்குள்ளாக போர்க்கால வேகத்தோடு இதனைக் கவனத்தில் எடுத்து தமிழக அரசு செயல்பட வேண்டும்" என்கிறார் தமிழ் கணினி வல்லுநரும், இப்பிரச்சினையை உலகறியத் தந்துள்ளவருமான நாக.இளங்கோவன்.

இது குறித்து உத்தமம் (INFITT) அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், இப்பிரச்சினை குறித்து அறிந்து செயல்பட்டுவருபவருமான நா.கணேசன் அவர்களின் தொடர்பு கொண்டபோது, "இச்சிக்கலை உத்தமம் சார்பில் எடுத்துவைத்து எங்களது பரிந்துரையையும் அனுப்பியுள்ளோம்" என்றார். தமிழ்க் கணினித்துறையில் முக்கியமானவரும், கணித்தமிழ் சங்கத்தில் பங்காற்றுபவருமான மா.ஆண்டோபீட்டர் அவர்களிடம் கேட்டபோது, "இது கண்டிப்பாக கண்டனத்திற்குரியது" என்று கருத்து தெரிவித்தார். மேலும், சங்கரமடத்தின் இந்தச் சதிக்கு எதிராக தமிழ்க்கணினித் துறை இளைஞர்களும், தமிழார்வலர்களும் கடும் போராட்டங்களில் ஈடுபட எண்ணியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணமிருக்கின்றன.

இப்படி தமிழ் அறிஞர்களின் கடும் எதிர்ப்புக்கிடையில் காஞ்சி காம'கேடி'களும், பார்ப்பனர்களும் தமிழைச் சிதைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருப்பது கவனத்திற்குரியதாகும். இது குறித்து எச்சரிக்கையுடன் இருந்து தமிழைக் காக்க வேண்டியது மிக அவசரமாகும். தமிழை அழிப்பதில் ஆரியம் எவ்வளவு  முனைப்பு காட்டுகிறது என்பதை தமிழர்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. இந்தப் பிரச்சினையை திராவிடர் கழகம் கவனத்துடன் நோக்கி வருகிறது. வடமொழித் திணிப்பிற்கெதிரான மொழிப்போராட்டத்தின் அடுத்த கட்டமாக அது அமையலாம்.
- ஜூனியர் சர்ச்லைட் 
(நன்றி: உண்மை - நவம்பர் 1-15, 2010)


கருத்துகள்

மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
இணைய தமிழை சமஸ்கிருத மயமாக்க முயற்சிக்கும் ஆரிய நாய்களுக்கும் நரிகளுக்கு எனது கண்டனத்தை இங்கு பதிக்கிறேன்.

போராட்டத்திற்கு தயார்!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
porada thevai illai ...
kalaignar kitta sonna
avar thyaga thiruvilaku kitte solli sari pannuvaar
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நாம தூங்கின எலிகளுக்கு கொண்டாட்டம் தான், ஏற்கனவே தமிழ் பேப்பர் என்னும் தளத்தில் ஆரியர்கள் தங்கள் நரித்தனத்தை ஆரம்பித்து விஷம் கக்கி வருகிறார்கள், அதற்குள் இந்த வேலை வேறா, ஏற்கனவே கலைஞ்சர் குடும்பத்தில் ஆரியம் நுழைந்துவிட்டது எடிட்டர் ராமின் சொந்தங்கள் ஊடாக, அதற்கு சாட்சி சண் டிவியில் வரும் இராமாயண தொடர்களும், சாமி நிகழ்ச்சிகள் .. தான்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam