முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"தீராத விளையாட்டுப் பிள்ளை" Part -1


"என்னத்த சொல்றது? கலி முத்திடுத்து... பாருங்கோ இந்தப் புள்ளாண்டானை எல்லாரும் என்னமா நம்பிண்டிருந்தா.... இப்போ என்னடான்னா... இப்படி நடந்திண்டிருக்கானே.. ஹிந்து மதத்துக்கே அவமானம். நம்ம மதத்தையே அசிங்கப்படுத்துற இந்த மாதிரி ஆசாமிகளையெல்லாம் என்ன பண்றதுன்னே தெரியலை... ஈஸ்வரா?" என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை நோக்கி தொழுகிறார்களாம்.


அருணாசலேஸ்வரப் பெருமானின் அருள்பார்வை விழும் திருவண்ணாமலையில் தானே இத்தனையும் நடந்திருக்கிறது. அதைக் கண்டு கொள்ளாதவனிடம் இதைக் கேட்கலாமா? அதெப்படி அவர் கண்டு கொள்வார்? அங்கே நடந்தது சிவலிங்க பூஜைதானே!
இதுவாவது அருணாசலேஸ்வரரின் பேரில் அவரது ஊர்க்காரரால் நடந்தது. கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டது என்று சொல்லலாம்.

இன்னொரு ஈஸ்வரரான மச்சேஸ்வரரின் சன்னதியிலேயே தேவநாத லீலைகள் நடந்தபோதும் அல்லவா அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார். பிறகு அவரிடம் முறையிட்டு என்ன பயன்?

இங்கேயெல்லாம் கடவுளின் கண்கள் வேலை செய்தனவோ இல்லையோ, கேமராவின் கண்கள் ஒழுங்காக வேலை செய்திருக்கின்றன என்பதை நம்மால் தெளிவாகப் (:P) பார்க்க முடிகிறது.

எல்லா படங்களையும் இவர்களே வாங்கி விநியோகிக்கிறார்கள் என்று அங்கலாய்ப்போர் வாய்க்கு அவலாக, நித்தியானந்தாவின் லீலா விநோதக் காட்சிகளும் வந்துசேர, அதையும் தீராத விளையாட்டுப் பிள்ளை விளம்பரத்தை விடவும், அதிக விளம்பரங்களுடன் விநியோகித்தது. அந்த தியான பீட விளையாட்டும் சூப்பர் ஹிட்டாம்!

2-ஆம் தேதி இரவு முதல் நேற்று வரை, ஏன் இன்றும் கூட தொடர்ந்து கலக்கி வருகிறார் நித்தி. ரஞ்சிதாவா? ராகசுதாவா? இல்லை வேறு 'ஆர்' எழுத்து நடிகையா என்றெல்லாம் நேற்று முன்னிரவு இருந்த குழப்பத்தை நக்கீரன் படம் போட்டு தீர்க்க, 'போதாது... சன் டி.வி-யின் ஒரு நாள் சஸ்பென்சை பார்த்துத் தான் தீர்த்துக் கொள்வோம்' என்று விரதமிருந்த பலருக்கு அதையும் சன் குழுமம் சொன்ன பின்னர் தான் ஓய்ந்தது.

நேற்று காலை முதல், பதிவர்கள் மடை திறந்த வெள்ளமென, போட்ட பதிவுகளில் எண்ணற்ற பஞ்ச் டயலாக்குகள்! எதைத் திறந்தால்... எது வரும்? என்ற எல்லா permutation, combination களும் முடிந்து விட்டதாகக் கேள்வி. ஒரு வழியாக நித்தி துவைத்துக் காயப்போடப்பட்டார். இதில் 'சாறு' பிழிந்தவர்கள் பட்டியல் தனி. அண்ணாச்சியை தனது வடிவமைப்பையே மாற்றிக் கொள்ள வைத்துவிட்டார்கள்.

அது சரி, சாரு யாரிடமும் பந்தயம் கட்டியிருந்தாரா என்ன? பாவம், பாதி மீசையோடு காட்சி தருகிறாரே! மீதப் பாதியில் மீசை இருக்கிறதா இல்லையா? அல்லது அது மண் ஒட்டிய பாதியா? என்றெல்லாம் எழும் கேள்விகளுக்கு.... (அட... எனக்கில்லீங்க) விரைவில் பதில் கிடைக்கக்கூடும்.


இப்போதைக்கு, ஒரு நாள் பதில் போடாமைக்கு, தனது மனைவியின் உயிரை மீட்கும் பொறுப்பே காரணம் என்று தெளிவுறுத்தியிருக்கிறார். இருந்தாலும், புற்று நோய் தீர்த்த கதையைப் பின்(நவீன!%*#)வருமாறு நிறுவுகிறார்.

(நாங்கதான் சொல்றோம்ல... மீசைல மண் ஒட்டலை.. மண் ஒட்டலை..ன்னு!
சார் அப்ப அந்த இன்னொரு பக்க மீசை....?
யோவ் விடமாட்டீங்களா?)


இன்னொரு பக்கம், என்ன சொல்வதென்று தெரியாமல், "ஊடக சண்டியர்த்தனம்" என்று சன் டி.வி.-யின் மீது வள்ளென்று விழுந்தவர்களும், மனித உரிமை மீறல் என்று கண்டனம் போட்டவர்களும் "பந்தை உதைக்க முடியாவிட்டாலும், காலையாவது உதைப்போம்" என்று உதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காமெடி பீஸ் ஜெயமோகனோ, " திட்டமிட்ட சிறுமைப்படுத்தல்", "ஊடகப் படையெடுப்பு", "ஊடக மோசடி" என்றெல்லாம் பசப்பி காவி உடைக்கும் இந்து
ஞான மரபுக்கும் இன்னும் மகத்துவம் இருப்பதாக பக்கா 'ஆர்.எஸ்.எஸ். பிராண்டு கதை'த்துக் கொண்டிருக்க, ருத்ர தாண்டவம் எடுத்து பீஸ்பீஸாக்கிவிட்டார் மருத்துவர் ருத்ரன்.

எத்தனை சுட்டிகள் தான் கொடுப்பது...? ஒவ்வொருவரின் பதிவிலும் ஒவ்வொரு பஞ்ச்... வினவு, மாதவராஜ், மதிமாறன், அக்னிப்பார்வை, தமிழ்ஓவியா என்று எத்தனை window-களில் எத்தனை tab-கள் திறந்து வைத்தாலும் பற்றாத அளவுக்கு பதிவுகள்.

சரி, இத்தனைக்கும் பிறகு நாம் என்னதான் எழுதுவது? இப்படிப்பட்ட நேரங்களில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது சாலச் சிறந்தது. ஏனெனில் ஏமாந்தவர்கள் அதை உணர்ந்திருக்கும் நேரத்தில் அவர்களிடம் போய் 'நல்லா ஏமாந்தாயா?' என்று கேட்காமல் சிந்திக்க கொஞ்சம் அவகாசம் தரலாம் என்று தான் முதலில் நினைத்தேன். செய்தி வந்த சில நிமிடங்களில், gmail, facebook என எல்லாவற்றிலும் status message update செய்ததும், அண்ணன் உண்மைத்தமிழன் வந்து, "சான்ஸ் கிடைச்சவுடனே போட்டுத் தாக்குற..?" என்று வேறு கேட்டுவிட்டுப் போய்விட்டார். "உங்களுக்குன்னு வந்து மாட்றாய்ங்க சார்" என்றார் புரோட்டா கடைக்காரர். நாம் சான்ஸ் கிடைத்தால் மட்டுமல்ல.. எப்போதுமே போட்டுத் தாக்குவபவர்கள் என்பதால் வேடிக்கை மட்டும் பார்த்து வந்தேன்.

ஆனால் அந்த அவகாசத்தில், நம்பிக்கையின்மையிலிருந்து விடுபட்டு, அமைதி தேட இன்னொருவனிடம் கிளம்பிவிட்டால் என்ன செய்வது? அப்படி மக்கள் மயங்கிவிடாமல் இருக்கவே பல முனைத் தாக்குதல்கள் நண்பர்களால் நடத்தப்பெற்று, முற்றிலும் அந்த மாயை உடைக்கப்பட்டிருக்கிறது.
அதுவரை மகிழ்ச்சியே!

எனினும் சில கேள்விகளும், கருத்துகளும் இருக்கவே செய்கின்றன.

இந்தப் பதிவு எழுதிக் கொண்டிருக்கும்போது நண்பன் சந்திரசேகர் வந்து
"நண்பா, 2 வத் பாகம் 3 வது பாகம் எல்லாம் இல்லியா? :(" என்று கேட்டான்.
"ஒரு ஹீரோயின் போரடிக்கும் என்பதால், அடுத்தடுத்த பாகங்களில் வெவ்வேறு ஹீரொயின்கள் கூட வரலாம். ஏனெனில், கொழுத்துத் திரிந்தவன் ஒன்றோடு விட்டிருக்க நியாயமில்லை.
மேலும், ஹீரோ மாற வேண்டிய அவசியமில்லை. ஹீரோயின் மாற வேண்டும் என்பதுதானே சினிமா விதி" என்றேன். அதன் படி, அங்கே அடுத்தடுத்த பாகங்கள் வருகின்றனவோ இல்லையோ, எனது கேள்விகளோடு அடுத்த பாகத்தில் வருகிறேன். (தீராத விளையாட்டுப் பிள்ளை - Part 2) இது வேற.....!


கருத்துகள்

chandru / RVC இவ்வாறு கூறியுள்ளார்…
ரெடி... ஸ்டார்ட் ம்யூசிக்... :)
chandru / RVC இவ்வாறு கூறியுள்ளார்…
நித்தியைக் கும்முபவர்கள் யாராக இருந்தாலும் பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் மேடையில் வந்து கும்மும்படி விழாக் கமிட்டியினரால் அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
அதான்... ஏற்கனவே கும்மி காயப்போட்டிருக்காங்களே! அதனால்... 'காய'ப் போட்டதை அடிப்பவர்களும் கூட வரலாம்.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
btw, no double meaning!
அக்னி பார்வை இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன ஓய் நோக்கு விஷ்யமே தெரியாதா, ராமகோபாலன் தெளிவா விளக்கினாரு.அது நித்தியானந்த சுவாமிகளே இல்லையாம், அவரை போலவே இருக்கிற வேறு யாரோவாம், அட சீ யார் முகத்துமேலேயோ க்ராபிக்ஸ் பண்ணிட்டாளாம். எல்லாம் ஹிந்து மதத்த அழிக்க நடக்கற சதியாம்..

ரசித்த ஹரன்பிரசன்னவின் டிவிட்டர்:
நித்தியோடு சேர்ந்து சாரு சாமியார் ஆவர்னு பார்த்தா, சாருவோடு சேர்ந்து நித்தி இப்படியாயிட்டாரே?

குமுதம் உஷார ஒன்னுமே நடக்காத மாதிரி ரியக்ட் பண்றான்..

ஒரே டவுட், இப்ப இவர் ஜெயிலுக்கு போன கத திறந்து வைப்பாங்களா மூடி வைப்பாங்களா? ‍‍‍‍‍
Sukumar இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை..
சுட்டி கொடுத்ததற்கு நன்றி நண்பரே....
Joe இவ்வாறு கூறியுள்ளார்…
படித்தேன், ரசித்தேன்... ;-)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam