முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சரத்குமாருக்கு மட்டுமல்ல... மானமற்ற மடையர்கள் அனைவருக்கும்!

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 )
இது தினமணியில் வந்த செய்தி.

அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்கூடாது." என்று.
இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது;
இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது

இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒருவரும் அகில இந்திய சமத்துவ மக்கள் தலைவருமான முன்னாள் மிஸ்டர் சென்னை, இந்நாள் மிஸ்டர் ராதிகா, அறிவாளி அங்குராசு சரத்குமார் அவர்கள்.
இந்தக் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் தலையிடக்கூடாது என்பதை பற்றியெல்லாம் பின்னால் பேசுவோம்.
அதற்கு முன்னால் "காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே...." இதைப்பற்றி யோசிப்போமா?

அதென்ன 'காலம்காலமாய் கடைபிடிக்கப்பட்டு வந்த மரபுகள்?'
அவர் எந்த ஜாதியை நம்பி 'சமத்துவக்' கட்சியை தொடங்கியுள்ளாரோ, அதையே கருத்தில் கொள்வோமா?

"பறையனைத் தொட்டால் தீட்டு ; சாணானைக் கண்டாலே தீட்டு" என்ற சொலவடை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? காலம்காலமாய் கடைபிடிக்கப்பட்டு வந்த மரபுகளில் ஒன்றுதான் இது.
பனையேறும் தொழில் செய்யும் எங்கள் தமிழனை சாணான் (நாடார்) என்று அடையாளப்படுத்தி, அவர்களைப் பார்ப்பது கூட தீட்டு என்று பார்ப்பனர்கள் வரையறுத்து வைத்திருந்தார்கள். பார்ப்பான் நடந்து வரும்போது, பனைமரத்தின் உச்சியில் இருக்கும் தொழிலாளி, இரண்டு கைகளையும் தட்டி, "சாமி நான் மரத்தில ஏறியிருக்கேன்" என்று கூவ வேண்டுமாம்; அப்போதுதான் கீழே நடந்துபோகும் பார்ப்பான் மேலே பார்க்க மாட்டானாம். அவனது நிழலையொட்டி நடக்க மாட்டானாம்.

இவன் பார்க்கக் கூடாது என்பதற்காக மரத்தில் ஏறியிருப்பவன் கைகளை விட்டுவிட்டு கைதட்டி சொல்ல வேண்டும் என்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?

இதெல்லாம் மரபுவழிப்பட்டது தான் சரத்குமார் அவர்களே! தொடர்ந்திருக்க வேண்டுமா இந்த முறை?

இதோ "இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா" என்ற நூலிலிருந்து சில வரலாற்றுச் செய்திகள் உங்களுக்கு இவையெல்லாம் தெரியுமா என்று பாருங்கள்.
* நாடார் சமூகப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்று 1829 ஆம் ஆண்டு திருவாங்கூர் அரசாங்கமே உத்திரவிட்டது என்ற கொடுமையான வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

* 19 ஆம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், நகைஅணியவோ, மாட்டிடமிருந்து பால் கறக்கவோ, ரவிக்கை அணியவோ , இடுப்பில் தண்ணீர்க்குடம் எடுத்துச்செல்லவோ பார்ப்பனர்கள் தடை போட்டிருந்தார்கள் என்ற கொடுமையான வரலாறு உங்களுக்குத் தெரியுமா?


* சென்ற நூற்றாண்டில் நாகர்கோயில் பகுதியில் குறிப்பிட்ட சில சாதிப்பெண்கள், மார்பை மூடி, ரவிக்கைப் போடக்கூடாது என்ற முறை இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

* 1895 ஆம் ஆண்டுகளில்- நெல்லை மாவட்டம் கழுகுமலை கிராமப்பகுதிகளில் நாடார் சமூகத்தினர் தேரடித் தெருக்கள் வழியே மத ஊர்வலம் போக தடை போடப்பட்டது என்பதும், இதற்குப் பதிலளிக்கும் வகையில் அப்பகுதி நாடார்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவமதத்தில் சேர்ந்துவிட்டார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?


* 1874 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழிபடவந்த நாடார்களை- பார்ப்பனர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதோடு - அது தொடர்பாக நடந்த வழக்கில் - நாடார்கள் கோயிலுக்குள் நுழைய உரிமை கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமா?


* வேலை கேட்டு மனுச் செய்த ஒரு நாடார் சமூகத்தைச் சார்ந்த டாக்டருக்கு தென்னங்கன்றுகளை வாங்கிக் கொடுத்து, குலத்தொழிலை செய்யச் சொன்னவர், திருவாங்கூர் சமஸ்தான திவான் சர்.சி.பி ராமசாமி அய்யர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

* திருத்தங்கல் பகுதியில் உள்ள நாடார் சமூகத்தினர் கோயிலுக்குள் நுழையக் கூடாது தேங்காயும் உடைக்கக் கூடாது என்று 1878ஆம் ஆண்டு திருவில்லிபுத்தூர் மாவட்ட முன்சீப் தீர்ப்பு வழங்கினார் என்ற கொடுமை உங்களுக்குத் தெரியுமா?
இவையெல்லாம் மரபு வழி வழக்கம் என்றும் ஆகமம், கர்ம பலன் என்றும் பல பெயர்களைச் சொல்லி வழக்கத்தில் இருந்ததே தெரியுமா சரத்குமார் உங்களுக்கு?
* திருச்செந்தூர் முருகன் கோவில் வாசலில், பஞ்சமர்களும், சாணார்களும் உள்நுழையக்கூடாது என்று கடந்த 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மரபு இருந்ததே தெரியுமா சரத்குமார்?
இந்த மரபுகளையெல்லாம் கண்டபிறகும் பொறுமை காப்பீர்களா? இதுதான் நீங்கள் சமத்துவம் காக்கும் லட்சணமா? இனி விளம்பரத்துக்காகக் கூட காமராஜர் படத்தையோ, தந்தை பெரியார் படத்தையோ போடாதீர்கள்.
கருப்பு எம்.ஜி.ஆர் என்று ஒருவர் விளம்பரம் செய்துகொள்வதைப் போல, தொப்பியில்லாத எம்.ஜி.ஆர் என்று வேண்டுமானால் விளம்பரம் செய்து கொள்ளுங்கள். ஆனால் அதுவும் மாபெரும் தவறு. ஏனெனில் எம்.ஜி.ஆர் தான் மகராஜன் குழு அமைத்து அனைத்து சதியினர் அர்ச்சகர் உரிமை பற்றி ஆய்வு செய்யச் செய்தவர். மரபு வழி எழுத்துகள் என்றிருந்தவற்றை மாற்றி பெரியாரின் சீர்திருத்த எழுத்துகளை அரசு முறைப்படுத்தியவர்.


உடன்கட்டை ஏறுதல், விதவை முறை, பொட்டுக் கட்டும் முறை, தோளில் சீலை அணியக்கூடாது என்னும் முறை எல்லாமே மரபு, மதம், ஆச்சாரம், சடங்கு, சம்பிரதாயம், சாங்கியம் என்னும் பெயரில் நடந்துகொண்டிருந்தவை தான் சரத்குமார்.


அப்புறம் ஏதோ சொல்லியிருக்கிறீர்களே, என்ன மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது பற்றி ஆகமங்கள் சொல்லி இருக்கின்றன என்று!


தமிழில் தேவாரம், திருவாசகம் பாடினால் ஓடிவிடுவான் என்றால், தமிழில் வேண்டுதலை தெரிவித்தால் கடவுளுக்குக் கேட்காதென்றால்... அவன் இருந்தென்ன? இல்லாமலிருந்தென்ன?

ஹீப்ரூ மொழியில் பேசிய இயேசுவுக்கு இங்கிருக்கும் தமிழ் புரிகிறது என்று 'பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவை' பூலோகத்தில் இருந்த படி மைக்செட் போட்டு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நக்கீரனோடு சங்கத்தில் சத்தம் போட்டவர், தமிழ்க் கடவுள் முருகனை ஈன்றவர், தென்னாடுடைய சிவன் என்றெல்லாம் கூப்பாடு போடுகிறீர்களே, அந்த சிவனுக்கு, தில்லை நடராஜனுக்கு தமிழில் பாடினால் புரியாது... தீட்டு என்றால்... அந்த சுடுகாட்டு வாசியை சுடுகாட்டிலேயே புதைத்துவிடலாமே?

கோயில் வாசலில் கூட அல்ல, கோயில் இருக்கும் தெருக்களில் கூட அனுமதிக்கப்படாத எங்கள் தமிழன், கருப்புத் தோலோடு இன்னும் சில மாதங்களில், தமிழகத்தின் பெரும் கோயில்களின் கர்ப்பகிரகங்களில் மணியாட்டப் போகிறானே.. அதையும் மரபுவழிக்கு எதிரானது என்று எதிர்க்கப் போகிறீர்களா சமத்துவக் கட்சியின் ஹீரோவே? (ஹீரா என்று யாரும் தவறாகப் படித்துவிடவேண்டாம்.)

உங்களுக்குத் தெரியாத மேலே படித்த அடிமை வரலாற்றை உடைத்தெறிந்து, அத்தனையையும் புரட்டிப்போட்டு, இன்று உங்கள் பின்னால் இருப்பதாக நீங்கள் கற்பனை செய்துகொண்டிருக்கும் நாடார் சமூகம் உள்பட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வெற்றி கண்டு, சட்டமியற்றி, உங்கள் வழிபாட்டு உரிமையை மீட்டு, சக மனிதர்களாக கோயிலுக்குள்ளும் நடமாடவிட்டிருப்பதெல்லாம் கடவுள் மறுப்பு பேசும் இயக்கத்தினர் தான்.. கடவுள் மறுப்பாளர்கள் தான்!

சரத் குமாருக்குப் போய் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதா என்று கேட்கும் நண்பர்களுக்கு ஒன்று.
"இது சரத்குமாருக்கு மட்டுமல்ல; நம்மோடு சிங்கங்களாய்ப் பிறந்து இங்கு குரங்குகளாய்க் கூனி நிற்கும் அத்தனை ஈனர்களுக்கும், மானமற்ற மடையர்களுக்கும் கூறுகிறேன். கூறுவதென்ன... முகத்தில் அறைகிறேன் உண்மையை...." (அட, குதர்க்கம் பேசுற எல்லா அரை வேக்காடுகளுக்கும் தான்)

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
sooo pity..still living in stone age...1970s...1960s...why dont u write about stonage time..also...come on budy come to 21st century...where r u..living..
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
அடடா வந்துவிட்டார் அங்குராசுக் கட்சியிலிருந்து அனானி ஒருவர்...
என்ன அக்கறை? 21-ஆம் நூற்றாண்டிற்கு வாப்பா என்று கைநீட்டி அழைக்கிறார்.

பழம் மரபு என்று பேசிக் கொண்டிருப்பவர்கள் நாங்களா? நீங்களா?
சேதுசமுத்திரத் த்ட்டத்திற்கு கற்காலத்துக்கு முன்பே கட்டிய பாலம் என்று 17.50 லட்சம் வருசத்துக் கதையோடு குறுக்கே நிற்பது யாரு?
செத்துப் போன சமஸ்கிருதத்தையும், இத்துப்போன இதிகாசங்களையும் சுமந்து கூனிய முதுகோடு முகம் காட்டாமல் குனிந்திருக்கும் அனானியே யோசித்துப்பார், யார் பழங்கதைகள் பேசுகிறார்கள் என்று?
வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
நெத்தி அடிப்பதிவு ,
இதெல்லாம் புரியும் அளவுக்கு சரத்குமாருக்கு மூளை இருந்தால் ஏன் இப்படி கோமாளியாக இருக்கப்போறார்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தெளிவாக எழுத்தப்பட்ட நல்ல பதிவு! உங்கள் பணி தொடரட்டும்!
பாக்யா... இவ்வாறு கூறியுள்ளார்…
மிக சரியாக சொன்னீர்கள்... சரத்குமார், விஜயகாந்த் போன்ற மன நோயாளிகளுக்கும், பழமை பேசி தமிழ் அழிய நினைபவனுக்கும் செருப்படி..
அருமையான சொல்லாற்றல் வாத திறமை உங்களிடம் காண்கிறேன்.. தொடரட்டும் தமிழ் பணி... வாழ்க வளமுடன்...
களப்பிரர் - jp இவ்வாறு கூறியுள்ளார்…
செல்வி ஜெ ஜெ -க்கு அவர் நடித்த நாட்டமை பட CD யை அவரது தனிப்பட்ட உபயோகத்திற்காக கொடுதாரம். அம்மா அவர்கள் மதிக்காமல் அதை ஜெ ஜெ டி.வி யில் ஒளிபரப்பி விட்டாராம். இத்தகைய நாட்டு மக்களை பாதிக்கும் செயல்களில்னால் பொங்கி எழுது தி.மு.க வில் சேர்ந்தார். அப்புறம் நான் இறந்தாலும் என் மீது தி.மு.க கொடி்யோ கோடியோ போர்த்தப்படும் என்று வசனம் பேசிவிட்டு பெட்டிக்கு பெட்டி பாம்பாக அணி மாறினார்... இப்படியான கொள்கை பற்றுள்ளவர் 2011 வரை முதலமைச்சர் ஆகா பொறுமை காக்க சொல்லுவது ஜனநாயக கொடுமை.
-L-L-D-a-s-u இவ்வாறு கூறியுள்ளார்…
Good Post..

Good Reply to First Anony ..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
செம அறை !

பெரும்பாலும் நடிகர்களிடம் அறிவுக்கு வேலையிருப்பதில்லை.
ஜோ/Joe இவ்வாறு கூறியுள்ளார்…
சரத்குமார் மாதிரி கூமுட்டைகள் பேச்சுக்கெல்லாம் ஒரு விவாதமா ?
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
ஹீப்ரூ மொழியில் பேசிய இயேசுவுக்கு இங்கிருக்கும் தமிழ் புரிகிறது என்று 'பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவை' பூலோகத்தில் இருந்த படி மைக்செட் போட்டு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நக்கீரனோடு சங்கத்தில் சத்தம் போட்டவர், தமிழ்க் கடவுள் முருகனை ஈன்றவர், தென்னாடுடைய சிவன் என்றெல்லாம் கூப்பாடு போடுகிறீர்களே, அந்த சிவனுக்கு, தில்லை நடராஜனுக்கு தமிழில் பாடினால் புரியாது... தீட்டு என்றால்... அந்த சுடுகாட்டு வாசியை சுடுகாட்டிலேயே புதைத்துவிடலாமே?


உண்மை சுடும்... உக்கிரமாக உண்மையை உணர்த்தி உள்ளீர்கள் திரு .சர்மா..
வாழ்த்துக்கள்..
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
பார்ப்பனீயத்தின் இரட்டை நாக்கிற்கு அடிமையாகி விட்டவர்கள் மீளவே
மாட்டார்கள்.மூளைச் சலவை நன்றாகவே இன்னும் வேலை செய்கிறது.

பழமை.பழக்க வழக்கம்.மரபு எல்லாம் அவர்களுக்குப் பயன்படத்தான் என்பது மண்டூகங்களுக்குப் புரிய இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டும்?

உடலும் ,உடையும் மட்டும் 21ஆம்
நூற்றாண்டு ஆனால் மூளை மட்டும்
இன்னும் பழமையிலேயே ஏமாறிக்
கொண்டுதான் இருக்க வேண்டுமா?
வெற்றி இவ்வாறு கூறியுள்ளார்…
தெரிந்திராத, அறிந்திராத பல சங்கதிகளை உங்களின் பதிவு மூலம் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
TBCD இவ்வாறு கூறியுள்ளார்…
பேச ஒரு ஒலிவாங்கி கிடைச்சிட்டா, எல்லாரும் எல்லாம் தெரிஞ்ச ஏகம்பரம் மாதிரி கேட்டுயிருக்கீங்க..

சரத் குமாரின் வலைதள முகவரி கண்டுப்பிடிச்சி. அவருக்கு கண்டிப்பாக இதை அனுப்பனும்..

யாருக்காகப் சண்டைப் போடுறாங்க என்று உணராத மந்திகள்..
தமிழன் இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பருக்கு அருமையான பதிவு, உங்கள் வலைபூ முகவரியை என் வலைப்பூவில் பயன்படுத்தி உள்ளேன். நன்றி

http://dilipan-orupuratchi.blogspot.com
கருப்பன் (A) Sundar இவ்வாறு கூறியுள்ளார்…
காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் நாடர் சமூகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து வந்தார். சரத்குமார் போன்றவர்களிடம் ஆட்சி சிக்கினால் நாடர் சமூகம் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் நாடும் சீரழிந்துவிடும். இந்த ஆளெல்லாம் கட்சிக்கூட்டம் போடும் போதெல்லாம் கல்லால் அடித்து வீட்டுக்கு விரட்டிவிட்டால் தமிழ் நாடு இனிவரும் காலங்களில் முன்னேற வாய்ப்பு இருக்கும்.
நந்தா இவ்வாறு கூறியுள்ளார்…
பிரின்ஸ் இதுகு பேசாம நீங்க அவரை செருப்புலயே அடிச்சிருக்கலாம்.

அவ்வளவு சூடு. இதுக்கெல்லாம் அசருவாருங்கறீங்க ம்ஹூம்...

http://blog.nandhaonline.com
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி வவ்வால், பாக்கியராசன் சேதுராமலிங்கம்,களப்பிரர், l-l-dasu,குமரேசன், பேரரசன், ஜோ, தமிழன், வெற்றி, tbcd, திலீபன்,கருப்பன், நந்தா மற்றும் இரண்டாவது அனானி ஆகியோருக்கு!
தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்த தீபக் அவர்களுக்கும் நன்றி!
சேது சமுத்திரத் திட்டத்திலும் வெண்டைக்காயை விட வளவளா கொழகொழா நிலைப்பாட்டை எடுத்தவர்தான் இந்த சரத்குமார் என்பது கூடுதல் தகவல்.
முகவை மைந்தன் இவ்வாறு கூறியுள்ளார்…
இப்படித் தான் பல்லாக்குத் தூக்கியே கூன் விழுந்து கிடக்கு. விழிப்பூட்டும் பதிவு.

அன்பு கூர்ந்து சாதி வழியாக ஈனமாக குறிக்கும் சொலவடைகளை தவிருங்கள். இல்லையெனில் அவை அடுத்த தலைமுறைக்கும் வடுவாக விளங்கும். என் தலைமுறையில் சாணான் என்ற சொல்லே அழிந்து வரும் வேளையில் இத்தகைய சொலவடைகள் வேண்டாமே!
யோகன் பாரிஸ்(Johan-Paris) இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கென்னமோ!! நீங்கள் இவர் பேச்சை ரொம்ப சீரியசாக எடுத்துட்டீங்க போல படுகிறது. மழை பொய்தால் காளான் முளைக்கும் பின் சுவடே தெரியாமல் போய்விடும். இவர் அரசியல் அப்படிப்பட்டது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்கள் இதை ஒரு வெகு ஜன பத்திரிக்கையில் வெளியிட்டு, சரத் குமாரின் முகத்திரையை கிழித்தெறிந்து சமத்துவ தலைவரின் மற்றொரு முகத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்திருக்க வேண்டும். இருந்தாலும் தங்களுக்கு தமிழ் மக்களின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
மசூதியில் தமிழிலா வழிபாடு நடத்துகிறார்கள்.அது குறித்து பகுத்தறிவு பேசுவோர் என்ன
நினைக்கிறார்கள்.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஜோ.& ஜோகன் பாரீஸ்,
கடைசிப் பாராவையும் தலைப்பையும் படிக்கவில்லையா நீங்கள்? சரத்குமாரை சாக்காக வைத்து மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டியதுதான்.
எப்படி இழிவுபடுத்தப்பட்டோம் என்றுணராமல்தான் அவர்களிடமே தஞ்சம் புகுந்து கொள்கிறார்கள். மற்றபடி உங்கள் கருத்தை நிச்சயம் கவனத்தில் வைக்கிறேன் நன்றி முகவை மைந்தன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மானங்கெட்ட பொம்பளை பொறுக்கி , அரசியல் நடத்தி நமது தமிழ்நாட்டுக்கு முதல்வன் கனவில் தெருவில் வந்தால் கல்லால் அடித்து அவனை வீட்டுக்கும் அனுப்பாமல் (ஒருவர் சேர்ந்து செய்தால் கொலை,கூட்டமாய் சேர்ந்து செய்தால் ??? ) அனுப்பினால் இதுபோன்ற ஈனபிறவிகள் நடமாட்டம் குறையுமே.
நக்மாவிற்கு 15 லட்சத்தில் கார், ஹீராவி்ற்கு 50 லட்சத்தில் வீடு வாங்கி கொடுத்து உல்லாச வாழ்க்கை நடத்தும் இந்த கன்னம் தொங்கிப்போன ஹீரோ(?) விற்கு தமிழ் மக்களை பற்றி என்ன அக்கறை!. பேசாமல் சிட்டுக்குருவி லேகியம் வாங்கி சாப்பிட்டு இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டியதுதானே.
ராகவன் பாண்டியன் இவ்வாறு கூறியுள்ளார்…
princes........
each and every lines are important.....
sarath is only body builder...
but you are easily slapping him by your excellent words.....
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
http://www.rskworld.com/contact-Sarathkumar.html
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
அட்ரஸ் சொல்ல அனானியா வரணுமா?
பரவாயில்லை... ரொம்ப மகிழ்ச்சி அனானி அனுப்பியாச்சு...
இதுக்கு என்ன பதில் சொல்றாரு பார்ப்போம்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சரத்குமார் போல் பொது வாழ்வில் இருப்பவர்கள்
முட்டாள்தனமாகக் கருத்துச் சொல்கிறார்கள். மெயில்
அனுப்பினாலும் படிப்பார்களா என்பது என் யோசனை.
உங்கள் எழுத்து பொது சன ஊடகங்களின் மூலம் பலரைச்
சென்றடைய வேண்டும்! அதற்கு என்ன வழி என்று தெரியவில்லை! சரத்குமார் இ மெயில் அனுப்பிய அனானி!
எதோ ஒரு வேகத்தில் அனுப்பிவிட்டேன்!
ஏகலைவன் இவ்வாறு கூறியுள்ளார்…
தோழர் சாமா அவர்களுக்கும் மட்டும் பிண்ணூட்டமிட்ட அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர வணக்கங்கள்.

இந்தப் 'பெரியார்' என்ற பெயரிலே சமீபகாலமாக அனைத்து வலைதளங்களிலும் பிரசன்னமாகி தமது பார்பனக் கருத்தை முன்வைத்துக் கொண்டுள்ள இந்த 'அம்பி'யை நாம் அம்பலப்படுத்தியே தீரவேண்டும்.


தன்னுடைய பூணூலை மறைக்க அவன் தேர்ந்தெடுத்திருக்கிற புணைப் பெயரைப் பார்த்தீர்களா? இதற்காகவே இவனை நாம் சரியாக கவனிக்கவேண்டும்.

டேய் அம்பி, நீ நானயமானவனாக இருந்தால் உன்னுடைய சொந்தப் பேரில் வந்து எழுது அல்லது 'சோ' மாதிரி 'சோதா' என்று ஏதாவது பெயர்வைத்துக்கொள். இல்லையென்றால் நாங்க‌ளே உன‌க்கு பெய‌ர்சூட்டுவிழா ந‌ட‌த்த‌ நேரிடும்.


ம‌சூதியானாலும் தேவால‌ய‌மானாலும்,
அங்கே சாதீய, தீண்டாமை அடையாள‌த்தை நீ வ‌ந்து காட்டு பிற‌கு பேச‌லாம்.
அத‌ற்கு முன் இந்த‌ 'ஆக‌ம‌ம்' என்று அடிக்க‌டி சொல்றீளே அந்த‌க் க‌ரும‌த்தையும் உங்க‌ளுடைய‌ ச‌க‌ல‌ பார்ப்ப‌ன‌ அடையாள‌த்தையும் அழித்துவிட்டு பிற‌கு வ‌ர‌வும்.

பார்ப்ப‌னீய‌ம் என்ப‌தே இன்னும் 'தீண்டாமை' இந்த‌ ச‌மூக‌த்தில் இருப்ப‌தை அடையாள‌ப்படுத்துவ‌துதான். க‌டைசி பார்ப்பான் மிஞ்சியிருக்கும் வ‌ரை எமது வன்மையான‌ போராட்ட‌ம் தொட‌ரும். நீங்கள் 'இந்து' ம‌த்திற்குள் புகுந்து கொண்டு என்னதான் 'தேச‌ப‌க்தி' பேசிக்கொண்டு இருந்தாலும், அத‌ற்குள்ளிருந்து உங்க‌ளை ரோட்டுக்கு இழுத்துவ‌ந்து அம்ப‌ல‌ப்ப‌டுத்தியே தீருவோம்.

உங்க‌ளுடைய‌ பார்ப‌ன‌ அடையாள‌த்தை இழ‌க்காத‌வ‌ரை உங்க‌ள் மீதான‌ எங்க‌ள் தாக்குத‌ல் தொட‌ரும். நாங்க‌ள், உங்க‌ளால் பாதிக்க‌ப்ப‌ட்டு எத்தனை த‌லைமுறைக‌ளாய் ம‌னித‌ அங்கீகார‌ம் இழ‌ந்து வாழ்கிறோம், அதை நீங்க‌ள் கொஞ்ச‌மேனும் அனுப‌விக்க‌ வேண்டாமா?
தடாகம் இவ்வாறு கூறியுள்ளார்…
பொட்டில் அடித்தாற் போல் இருந்தது.....பொட்டில் அடித்தாற் போல் இருந்தது.....சரியாகச் சொல்லியிருந்தீர்கள்.
அரை பிளேடு இவ்வாறு கூறியுள்ளார்…
சரத்குமார் வகையறாக்கள் புறக்கணிக்கப்படவேண்டியவர்கள்.

நல்ல பதிவு.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
செம அறை !
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Many thanks for the help in this question. I did not know it.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Absolutely with you it agree. It is excellent idea. It is ready to support you.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
dai thevdiya payalea
parbana thevdiya payalea

delete this page or otherwise u will be killed by Rocket raja in thirnelveli.

if u r real prince,send me ur address and phone number

gotha seaththa
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
thaniya oththaikku otha mothi pappoma, na ready vada
singam la

ulaithu unnu da thevdiya payalea
nadar sunniya umbi sapdathada

parpan ellam veetukulla olkka than da layakku

don't come to thirunelveli
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Hey dont talk about nadar community
They r not untouchables. nadars never controlled by any caste at ever.all these laws r created for make nadars also depressed caste but nadars fought against that and won.now they proved that they r royal descendants
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
யப்பா... ராஜ பரம்பர... வரலாற்றைப் படிங்க... யாரும் அடிமையாக இருந்திருக்க வேண்டும், இருக்க வேண்டும் என்றும் நாம் விரும்பவில்லை
ஆனால் வரலாறுஅப்படி இருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam