Tuesday, March 25, 2008

அண்ணா பரிமளம் மறைவு

பேரறிஞர் அண்ணா அவர்களின் வளர்ப்புப் புதல்வரும், பேரறிஞர் அண்ணா இலக்கியப் பேரவைத் தலைவருமான மானமிகு சுயமரியாதைக்காரர் டாக்டர் அண்ணா பரிமளம் அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்ற துயருறும் செய்தியை அறிவிக்க வருந்துகிறோம்.

இறுதி வரை கொள்கையுடன் வாழ்ந்த அந்த கொள்கைக் கோமானுக்கு வீரவணக்கம்!
அவர் தொகுத்தளித்த அறிஞர் அண்ணா பகுத்தறிவுக் களஞ்சியம் நூல் வெளிவரப்போகும் இத்தருணத்திலும், அவர் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு தொடங்க இருக்கும் இத்தருணத்திலும் அவரது மறைவு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவருக்கு நமது வீரவணக்கம்!

அறிஞர் அண்ணாவின் எழுத்துகளை இன்றைய தமிழ் இளைஞர் உலகம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதில் பெரும் ஆர்வம் செலுத்தி அண்ணாவின் படைப்புகளை இணையத்தில் கொண்டுவருவதில் முனைப்பாக இருந்து செயல்பட்டார். அவரது உழைப்பின் பலனாய் http://www.arignaranna.info/ என்ற தளம் உருவாகி செயல்பட்டு வருகிறது.

4 மறுமொழிகள்:

said...

அண்ணாவின் அடக்கம்
அறிவுநிறை ஆற்றல்
கொள்கையிலே குன்றாய்
வாழ்ந்தவ்ரே சென்றீர்!
வாழ்த்திடுவோம் உம்மை!

said...

கண்ணீர் அஞ்சலிகள்! :-(

said...

வாரிசுகளின் ஆர்ப்பாட்டம் வெறியாட்டம் போடும் இக்காலத்தில்
இப்படியும் ஒரு பிள்ளை!
ஒரு நெடிய பாரம்பரியத்தின்
எச்சங்கள் அருகி வருகின்றன...
வேதனை மிகுந்த வீரவணக்கம்........

said...

மிகவும் சோகமான செய்தி.
அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Related Posts with Thumbnails