முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சுருட்டப்படுகிறது சேலம் உருட்டாலை!

நட்டத்தில் இயங்குகிறதென்று சேலம் உருட்டாலை தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறது மோடி அரசால்! இந்தியப் பணத்தையே ஏகபோகமாக தனியார்க் கும்பலுக்குத் தாரைவார்த்துவிட்டவரிடம் இதை எல்லாம் எதிர்பார்க்காமலா இருக்க முடியும்? படம்- நன்றி: தி இந்து பா.ஜ.க. அரசு தான் அரசுப் பங்குகளை விலக்குவதெற்கென்றே தனி அமைச்சகம் போட்டு வேலை பார்த்த அரசாயிற்றே! எங்க ஊருல மேங்கோப்பு பிரிப்பது என்பதே தனித் தொழில்! பழைய வீடுகளை இடித்து, அதில் தேறக்கூடியதை விற்பது. அப்படித் தான் அரசின் நிறுவனங்களையெல்லாம் கூறுகட்டி விற்கத் தொடங்கினார்கள். மேங்கோப்பு பிரிக்கப்படும் வீடுகள் என்பவை, இனி பயன்படுத்த முடியாத நிலையிலிருப்பவை. வீட்டு உரிமையாளருக்கு அதன் இறுதி நிலையும் பயன்படும். ஆனால், இவர்கள் பேய் புகுந்த வீடு என்று பிராடு கிளப்பி, மொத்தமாக சல்லிசாக ஆட்டையைப் போடும் அயோக்கியக் கும்பலைச் சேர்ந்தவர்கள். பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி, நாட்டை நெட்டுக் குத்தலாக்கப்போகும் இந்த பொருளாதாரப் புலிகளும், தனியாருக்கு எல்லாவற்றையும் விற்பதற்கு போட்டிபோடும் இந்த அரசுகளும், அடிப்படையான நம் கேள்விக்கு ப...

கர்நாடகக் கலவரம்: மத்திய உளவுத் துறையின் கைங்கர்யம்

மிக நுணுக்கமாக, ஆழமாக மத்திய அரசின் உளவுத்துறை கர்நாடகத்தில் செயல்பட்டிருக்கிறது. காங்கிரஸ் சித்தராமய்யாவின் ஆட்சியை குலைக்கவும், அடுத்து வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டு மட்டுமல்ல... நீண்ட கால நோக்கில், தமிழக கர்நாடக மக்களின் பகை நெருப்பை ஊதி தக்க வைக்கவும், பல்வேறு மொழிவழி தேசிய இனங்களின் பகைமையை கூர்மைப்படுத்துவதன் மூலம் இந்திய தேசியத்திற்கெதிரான குரலை ஒடுக்கவும், மத்திய அரசின் இந்துத்துவ நடவடிக்கைகளுக்கு எதிராக களமிறங்கும் தமிழகத்திற்கு நெருக்கடி கொடுக்கவும் இத்தகைய பணிகளில் மத்திய உளவுத்துறை ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. நோய் நாடி நோய் முதல் நாட வேண்டும்;  பொய் மோடி கும்பலின் முகத்திரை கிழித்துப் போட வேண்டும்.

டாபர் ஹனியும் கலைவாணரும்

டாபர் ஹனி புதிய விளம்பரம் ஒன்று. தேன் புட்டியைக் கையில் வைத்துக் கொண்டு எதிரிலிருக்கும் பெண்ணைப் பார்த்து வம்பிழுக்க, 'ஹனி' என்கிறார். அவர் முறைத்துவிட்டு, அதுவா ஹனி, இது ஹனி என்று டாபர் ஹனியைக் கையில் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது அவ்விளம்பரம். இந்தக் காட்சியைக் கேட்டதும் உங்களுக்கு இன்னொரு காட்சியும் பாடலும் நினைவுக்கு வருமே! கண்டதும் எனக்கு வந்தது. ஏனெனில் சிறுவயதில் காலை எழுந்ததும் கேட்பது, அல்லது எங்களை எழ வைப்பதே என்.எஸ்.கே பாடல்கள் அல்லது எம்.ஜி.ஆர். இன உணர்வுப் பாடல்கள் போன்ற இசைப் பேழைகள் தான். (நன்றி: சாமி சமதர்மம்) அதில், டி.ஏ.மதுரத்தைப் பார்த்து, கலைவாணர் என்.எஸ்.கே., பாடுவதாக அம்பிகாபதி படத்தில் அமைந்தது அந்தப் பாடல். 'கண்ணே... உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா?' என்று தொடங்கி, தங்கமே, தேனே என்று ஒவ்வொரு சொல்லாக மதுரத்தை விளித்துப் பாடுவார். ஆசையுடன் கூடிய பொய்க் கோபத்தோடு மதுரம் அம்மாவின் முறைப்பும், ஒவ்வொன்றுக்கும் கலைவாணர் சொல்லும் விளக்கமும், அவரின் குரலிலேயே வெளிப்படும் பாவமும் அட்டகாசம். (பாடல் 2:18-ல் தொடங்கும்) ஏனோ இன்றைக்கு இர...

எச்சரிக்கிறான் சரவணன்!

எச்சரிக்கிறான் சரவணன்! இது செய்யத் துணிந்தவர்கள்... எதுவும் செய்யத் துணிவார்கள்! உயர்கல்விக்கு நுழையும் போதே மருத்துவரின் உயிரை உறிஞ்சுகின்றன ஊசிகள்! எச்சரிக்கிறான் சரவணன்! இந்தியாவெங்கும் சென்று பிணமாகத் தயாரானால் எழுதுங்கள் நீட் தேர்வு! முனைவராகும் முன்னே முறிக்கப்படும் ஆய்வு இறக்கைகள்! கேட்காமலே இட ஒதுக்கீடு வேமுலாவுக்கு அடுத்து இடுகாட்டில்! 'என் சாவுக்கு யாரும் காரணமில்லை' என்ற கடைசி வரிகளோடு 'யுவர்ஸ் சின்சியர்லி'க்குப் பிறகு பெயர் சேர்க்க வசதியாய் அய்.அய்.டி.களில் கிடைக்கின்றன கடித நகல்கள்! இழுத்தடிக்கும் பூணூல்களிடமிருந்து விடுபட சென்ட்ரல் யுனிவர்சிட்டி கேம்பஸ் ஸ்டோர்களில் குறைந்த விலையில் தூக்குக் கயிறுகள்! உயர்குடிக்கே உயர்கல்வி ! பிறர் நுழைந்தால் 'உயிர்' குடிக்கும் என்பதறிக! பனியன் தைக்க ஊசியெடுப்பவன் பிள்ளைக்கு உயர் மருத்துவனாகி ஊசியெடுக்க ஆசையா? தூண்டியது நடக்காவிட்டால் தூண்டியவர்களே ஆயுதம் தூக்குவார்கள்! நூலிய சிந்தனை தூக்கத் தொடங்கியிருக்கிறது ஊசிகளை! நூலியம் பதறுகிறது... கடிதத்தில்...

கொடித் திருடர்களை வேரறுப்போம்! தமிழீழ இலச்சினைகளை மீட்டெடுப்போம்!

தமிழீழம் என்னும் கனவைச் சுமந்தும், புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் நேசித்தும் வருவோர்க்கு தமிழீழக் கொடி தரும் உணர்வு எத்தகையது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. ஈழத் தமிழர்க்கென்றொரு நாடு அமைவதை, நாடு கடந்தும் தன் நாடாகப் பார்க்கும் மனம் அது. துப்பாக்கித் தோட்டாக்கள் தெறிக்க, முன்னங்கால் பறக்க கூண்டை விட்டுப் பாயும் புலியின் உருவம் தரும் சிலிர்ப்பும், எழுப்பும் உணர்வலையும் நம் உயிர் அடங்கும் வரை ஓயாதது. அத்தகைய உயர் சின்னத்தை, உயிர்க் கொடியை, உலுத்தர் கூட்டம் பயன்படுத்துவதையும், அதனால் அது கீழ்மையுறுவதையும் காணச் சகிக்கவில்லை. சிந்தை பொறுக்கவில்லை. புலிகள் தங்களை மௌனித்துக் கொண்டபிறகு முளைத்த காளான்களெல்லாம் புதிது புதிதாய் கதையளந்துகொண்டும், புலி வேஷம் கட்டிக் கொண்டும் அலைந்து கொண்டிருப்பதும் காலத்தின் கொடுமை. எத்தனையோ ஈகியர்கள் தங்கள் உயிர் தந்து காத்த சின்னங்கள் இவை. ஆனால், இன்று பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும் பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச் சலியாத வருவாயும் உடைய தாகத் தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம் எலியாக முயலாக இருக்கின் றார்கள்! ஏமாந்த காலத்தில் ஏற்றங்...

இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இடஒதுக்கீடு கேட்பீர்கள்?

"இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இடஒதுக்கீடு கேட்பீர்கள்?"~ என்று கேட்கும் அயோக்கியர்களுக்கும், மடையர்களுக்கும் இது சுத்தமாகத் தெரியாது. நீங்களாவது தெரிந்துகொள்ளுங்கள். இ ந்திய சுதந்திரத்திற்கு 45 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிற்படுத்தப்பட்டோருக்கு முதல்முறையாக (1993) இடஒதுக்கீடு கிடைத்தது. அதற்கு வி.பி.சிங் என்னும் பெருமகன் தன் பிரதமர் பதவியை பலி கொடுக்க வேண்டியிருந்தது. அதுவும் வேலைவாய்ப்பில் மட்டும் தான்! அதற்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு தான், அதாவது 2006-இல் தான் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. அதையும் பிச்சுப் பிச்சுத் தான் போடுவோம் என்று சொல்லியும் இன்னும் முழுமையாகக் கிடைத்தபாடில்லை. * கல்வியில் இட ஒதுக்கீடு இல்லாமல், வேலையில் முதலில் இட ஒதுக்கீடு தருதல் என்பதே கேள்விக்குரியது. முதல் படிக்கே வழி விடாமல், மூன்றாவது படியில் ஏறு என்பதைப் போல. அதையும் கடந்து தான் சிலர் ஏறினார்கள். ஆனால் அங்கேயும் உயர்ஜாதிக் கும்பல் இடத்தை விட்டுவைக்கவில்லை. * முதல்முறையாக இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யும்போதே, காலங்காலமாக பசியில் கிடந்து பந்தியில் அ...

ஆம். அந்த நாள் நாளை தான்! (Back to the Future)

ஆம். அந்த நாள் நாளை தான்! 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த Back to the Future திரைப்படத்தில் கால இயந்திரத்தில் பயணம் செய்து, அவர்கள் வந்து சேரும் நாள் அக்டோபர் 21, 2015. இதோ, கால வெள்ளத்தில் நாமும் வந்துசேர்ந்துவிட்டோம் அந்த நாளுக்கு! 30 ஆண்டுக்கு முன் வருங்காலம் என்று நீண்டு காணப்பட்ட அந்த நாள் இதோ நிகழ்காலம் என்ற நிலையை எட்ட இருக்கிறது. அப்படி என்ன சிறப்பு 2015 அக்டோபர் 21க்கு? 2012-இல் உலகம் அழியும் என்று சொல்லப்பட்டதைப் போல ஏதாவது...? ஒன்றும் கிடையாது. Back to the Future படத்தில் சொல்லப்படும் சாதாரண நாள் தான். ஆனால், இந்த நாளில் உலகம் (அல்லது ஓர் அமெரிக்க நகரம்) எப்படியிருக்கும் என்று கற்பனையில் உருவாக்கியிருந்த நிலை இன்று நடப்பில் இருக்கிறதா? எவ்வெவற்றைக் கடந்து வந்திருக்கிறோம். எவையெல்லாம் எதிர்பார்ப்பைத் தாண்டியிருக்கிறது என்பதையெல்லாம் குறித்துப் பேச, அறிவியல் புனைவுப் படங்களின் மீதான ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ள சரியான ஒரு நாளாக இது இருக்கும் என்பத் தான் இந்நாளின் சிறப்பு எனவே, நாளை Back to the Future படங்களின் திரையிடலுக்கும், மகிழ்ச்சியான ஒரு கலந்துரையாடலுக்கும் ஏ...