முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுருட்டப்படுகிறது சேலம் உருட்டாலை!

நட்டத்தில் இயங்குகிறதென்று சேலம் உருட்டாலை தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறது மோடி அரசால்!
இந்தியப் பணத்தையே ஏகபோகமாக தனியார்க் கும்பலுக்குத் தாரைவார்த்துவிட்டவரிடம் இதை எல்லாம் எதிர்பார்க்காமலா இருக்க முடியும்?
படம்- நன்றி: தி இந்து
பா.ஜ.க. அரசு தான் அரசுப் பங்குகளை விலக்குவதெற்கென்றே தனி அமைச்சகம் போட்டு வேலை பார்த்த அரசாயிற்றே!
எங்க ஊருல மேங்கோப்பு பிரிப்பது என்பதே தனித் தொழில்! பழைய வீடுகளை இடித்து, அதில் தேறக்கூடியதை விற்பது. அப்படித் தான் அரசின் நிறுவனங்களையெல்லாம் கூறுகட்டி விற்கத் தொடங்கினார்கள். மேங்கோப்பு பிரிக்கப்படும் வீடுகள் என்பவை, இனி பயன்படுத்த முடியாத நிலையிலிருப்பவை. வீட்டு உரிமையாளருக்கு அதன் இறுதி நிலையும் பயன்படும்.
ஆனால், இவர்கள் பேய் புகுந்த வீடு என்று பிராடு கிளப்பி, மொத்தமாக சல்லிசாக ஆட்டையைப் போடும் அயோக்கியக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி, நாட்டை நெட்டுக் குத்தலாக்கப்போகும் இந்த பொருளாதாரப் புலிகளும், தனியாருக்கு எல்லாவற்றையும் விற்பதற்கு போட்டிபோடும் இந்த அரசுகளும், அடிப்படையான நம் கேள்விக்கு பதில் சொல்வதே இல்லை.
நட்டத்தில் இயங்குகிற நிறுவனத்தை, அரசுக்கு உதவும் நோக்கிலா தனியார் வாங்கப் போகிறார்கள். இல்லை, நிச்சயம் அதில் லாபம் பார்க்க முடியும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். நட்டத்தில் இயங்குவதாக அரசே கணக்குக் காட்டுவதும், நிர்வாகக் கோளாறுகளை வளர்த்துவிடுவதும், நிறுவனத்தின் திறனைக் குறைப்பதும், அதைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான காரணங்களைக் கொடுக்கும் என்பது தான் அதன் பின்னுள்ள ரகசியம்.
தனியாரால் லாபத்தில் நடத்த முடியும் என்றால், அரசின் கையாலாகத் தனம் தானே அதனை அரசு சாதிக்க முடியாமல் தடுக்கிறது.
ரயில்வே துறை நட்டத்தில் இயங்குகிறது என்றே தான் காலம்காலமாக சொல்லிவந்தார்கள். ஆனால், அவாள்களால் திறமையற்றவர் என்று கேலி செய்யப்பட்டுவந்த லாலு பிரசாத் இரயில்வே அமைச்சரானதும், கோடி கோடியாக லாபம் காட்டினார். அப்போது கோமாதாவின் பின்புறத்தில் கொண்டுபோய் முகத்தை வைத்துக் கொண்டார்கள் அரசு நிறுவனங்களைக் குறி வைத்தோர்.
அடுக்கடுக்காக அரசு நிறுவனங்கள் தனியாருக்கு வாரிக் கொடுக்கப்படுகின்றன. தொழிலாளர் நலன், சமூகநீதி, நாட்டின் பொருளாதாரம், உள்ளூர் வளம் அத்தனையும் பறிக்கப்படுகிறது என்று பொருள் அதற்கு!
முதல் போதவில்லை என்பதற்காக பங்குகளை விற்பதென்றால், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கே பங்குகளை, போனசாகவோ, உரிய விலைக்கோ கொடுக்கலாம். தொழிலாளிகள் பங்காளிகளாகி, தங்களின் நிறுவனம் என்னும் கூடுதல் அக்கறையோடு உழைப்பார்களே என்று முன்பே திராவிடர் கழகத் தலைவர் கி,வீரமணி அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். நடக்குமா?
அரசுகளின் நோக்கம் நிறுவனங்களைக் காப்பதா? தங்களைப் பதவியில் உட்கார வைத்திருக்கும் முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதாயிற்றே!
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு இப்படிக் காரணம் சொன்னவர்கள். முன்பு லாபத்த்தில் இயங்கிக் கொண்டிருந்த அரசு நிறுவனங்களை விற்ற போது என்ன சொன்னார்கள் தெரியுமா?
'லாபத்தில் செயல்படும் நிறுவனத்தை வாங்காமல் நட்டத்தில் செயல்படும் நிறுவனத்தையா முதலாளிகள் வாங்குவார்கள்?' வக்கனை வலித்தார்கள்.
'கூறு ரெண்டு ரூபாய்' என்று பங்குபோட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள் நாட்டை! சே...சே.. மோடி இந்த நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கிறார் என்கிறான் மடக் குடிமகன், உருவப்பட்ட தன் டவுசரை மறந்தபடி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam