பொள்ளாச்சி அவலம் தொடர்பாக நாடே கொந்தளிப்பில் இருக்கிறது. பெண்களைப் பெற்றோர், மனிதநேயம் கொண்டோர், சமூக அக்கறை கொண்டோர் பதறுகிறார்கள். ஆனால், பெரியாரின் பெண்ணுரிமைக் கொள்கைகளும், அதை அடுத்து வழிநடத்திச் செல்லும் ஆசிரியர் வீரமணியும் தான் பொள்ளாச்சி அவலங்களுக்குக் காரணம் - பொம்மனாட்டிகள் கெட்டுப் போறதுக்கு இவா தான் காரணம் என்று ஒரு வன்மமான கட்டுரை வெளியிடுகிறது குறுமதியாளர் குருமூர்த்தியின் துக்ளக் ஏடு!
பெண்ணுரிமை பேசியதும், பெண்கள் மீது திணிக்கப்பட்ட அடிமைத் தளைகளைக் களைந்தெறியப் போராடியதும் தான் பொள்ளாச்சி அவலங்களுக்கு காரணம் என்று பெரியார் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும், உண்மையில் ஆசிபா, நந்தினி, பொள்ளாச்சி கொடுமைகள், கோவை சிறுமி என ஆணாதிக்க வக்கிர வெறி கொண்ட இந்தக் கும்பலின் முகமூடியை கிழித்து எறிந்தும் பெரியார் திடலில் நடக்கிறது அவசர சிறப்புக் கூட்டம். இவையெல்லாம் விளைவுகள் என்றால், இதற்கான நியாயங்களை உறுதி செய்து இந்த மனவோட்டத்தை மக்கள் மத்தியில் காலம் காலமாக தக்க வைத்துக் கொண்டுள்ளவற்றை எடுத்துப் போட்டுத் தோலுரிக்க வேண்டாமா?
“பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள்” என்று பழிக்கும் பகவத் கீதை (அத்தியாயம் 9 - சுலோகம் 12),
“பெண்கள் பெரும்பாலும் விபச்சாரிகள்” என்று சாஸ்திரங்கள் கூறுவதாக எடுத்துக்காட்டும் மனுதர்மம் (அத்யாயம் 9 - சுலோகம் 19),
“பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்டு பிறப்பு எதுவுமில்லை” என்று சொல்லும் பாரதம் (அனுசான்ய பருவம்),
“ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்” என்று அவதூறு செய்யும் பாகவத ஸ்கந்தம் (4-14-42),
“வேலைக்குப் போற பெண்கள் விபச்சாரிகள்” என்று பேட்டி கொடுத்த சங்கராச்சாரியார்,
குளத்தில் குளித்தவர்களின் ஆடையை திருடிவைத்துக் கொண்டு நிர்வாணமாய் கை உயர்த்தி தன்னை வணங்கச் சொன்ன கிருஷ்ணன்,
குரு பத்தினியை பெண்டாள வேடமிட்டுச் சென்ற சந்திரன்,
பார்வதி மேல் மோகங்கொண்டு சிவனால் தலை கிள்ளி எறியப்பட்ட பிரம்மன்,
ரிஷி பத்தினிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து ஆணுறுப்பு அறுந்து விழுந்த சிவன்...
என்று தோண்டத் தோண்ட...
பெண்களின் மீதான வெறுப்பு, குரோதம், வன்முறைகளை கடவுள்களே நடத்தியதாகவும், அது தான் திருவிளையாடல், அவதார மகிமை, தெய்வ வாக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறவர்களை யார் தோலுரிப்பது?
கண்ணனும், ராதையும் போல இது மதுராபாவம் என்று அமெரிக்கப் பெண் இன்ஜினியரிடம் பாலியல் அத்துமீறல் செய்த நித்தியானந்தா,
இது கிருஷ்ணலீலா என்று சொல்லிச் சொல்லி இளம்பெண்களை நாசம் செய்த ஆசாராம் பாபு,
இந்துக் கடவுள்கள் செய்யாததையா நான் செய்துட்டேன் என்று காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்த காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர்,
கோயில் கர்ப்பகிரகத்துக்குள்ளே சல்லாபம் செய்து வீடியோ வெளியிட்ட காஞ்சிபுரம் தேவநாதன்...
என்று இவர்களின் வாழும் தெய்வங்கள், பூணூல் பிண்டங்கள் எல்லாம் பெண்கள் மீது உருவாக்கி வைத்திருக்கிற பிம்பமும், அவர்களின் மோசமான கருத்தும், பாலியல் வன்முறைகளுக்கு கடவுளை துணைக்கு அழைக்கும் போக்கும் இருப்பதை எப்போது எடுத்துக் காட்டுவது?
இந்த நாட்டின் எந்த பிரச்சினைக்கும் வீதிக்கு வராதவர்கள், ஆண்டாள் என்றால் தார்பாச்சையை மடித்துக்கட்டிக் கொண்டு வருவதும், கிருஷ்ணன் என்றதும் கிளம்பிவருவதும் இந்த மக்கள் அறியாததா?
பார்ப்பனர்களைப் பொறுத்தவரை, இது தேர்தல் உத்தி. திராவிடர் கழகத் தலைவருக்கு எதிராக எதையாவது கிளப்பிவிட்டால், அது திமுகவுக்கு ஆபத்தாகப் போய் முடியாதா என்ற அரிப்பு! ஆனால், அவர்கள் நினைவுகொள்ளட்டும்... குருமூர்த்தியின் குருநாதர் சோ அய்யர்வாள் செய்து பார்த்துத் தோற்றுப் போன அரதப் பழசான அதே உத்தி தான் இது என்பதை! தோல்வி என்றால் உங்க தோல்வி எங்க தோல்வி அல்ல... ராமர் படத்தை செருப்பால் அடித்த ஈவெராவை ஆதரிக்கும் கருணாநிதிக்கா உங்கள் ஓட்டு என்று, தமிழ்நாடெங்கும் சுவரொட்டி ஒட்டிய போது, “ஆம், அதே கலைஞருக்குத் தான் எங்கள் ஓட்டு” என்று 1971-இல் 183 தொகுதிகளில் அபார வெற்றியைக் கொடுத்தவர்கள் தமிழர்கள். (அதற்கு முந்தைய தேர்தலில் திமுக 138).
உளுத்துப் போன பார்ப்பனப் புத்தியிலிருந்து உதிர்ந்து விழுந்துள்ள உங்கள் உத்தியை எடுத்து கக்கத்தைச் சொறிய வைத்துக் கொள்ளுங்கள் மாமாக்களே! அடிவருடிகள் ஆங்காங்கே கிடைக்கலாம் வாயாட, காசு கொடுத்தால் கூலிகள் சிலர் கிடைக்கலாம் பெயர் போட்டு போஸ்டர் அடிக்க! சவுண்டிகள் விட்ட கொட்டாவியைக் கூட்டி எழுதி கருமாதி பத்திரிகை முதல்பக்கச் செய்தி வெளியிடலாம்! ஆனால், ஏப்ரல் 18-இல் ஓட்டுப் போட்டு, மே 23-ல் முடிவு வரும்போது, மொத்தமாக இதற்கெல்லாம் அடி கிடைக்கும் - இந்துத்துவா கும்பலுக்கு! நாற்பதுக்கு நாற்பது என்று தமிழகத்தில் மட்டுமல்ல... இந்தியா முழுவதும் பெருவெற்றி பெற்று திமுக-கம்யூனிஸ்ட்-விடுதலைச் சிறுத்தைகள்-ஒடுக்கப்பட்டோர் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும்.
கோவை சிறுமியின் பாலியல் கொலைக்குக் காரணமான சங்பரிவாரத்தின் பாரத் சேனா சந்தோஷ்குமார், பொள்ளாச்சி கொடூரங்களுக்குக் காரணமான திருநாவுக்கரசு கூட்டாளிகள், ஆசிபாவை கோயிலுக்குள்ளேயே வைத்து பாலியல் கொடூரம் நிகழ்த்திய இந்துத்துவ மனநோயாளிகள் அத்தனை பேருக்கும் பாடம் புகட்ட நடக்கும் தேர்தல் இது! நாடெங்கும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி வைத்திருக்கும் கேடுகெட்ட அடிமை அதிமுக - பாசிச பாஜக மோசடிக் கும்பலை ஓட ஓட விரட்டியடிக்கப்போகும் தேர்தல் இது! வரலாற்றுப் பாடத்தை பாசிசக் கும்பலுக்கு மீண்டும் தமிழர்கள் புகட்டப் போகும் தேர்தல் இது!
நீங்கள் எந்தப் பக்கம் திருப்பினாலும், சரியாய் அடையாளம் காட்டி நிற்கும் திசைகாட்டியைப் போல, தேர்தலில் எத்தனை சில்லறை திசை திருப்பல் நாடகங்களை நடத்த முனைந்தாலும், உங்கள் பம்மாத்துகளுக்குத் தமிழகம் பதறாது! பாசிச பாஜகவையும் அதன் அடிமைகளையும் வேரடி மண்ணோடு வீழ்த்தும் நோக்கம் சிதறாது!
பெண்ணுரிமை பேசியதும், பெண்கள் மீது திணிக்கப்பட்ட அடிமைத் தளைகளைக் களைந்தெறியப் போராடியதும் தான் பொள்ளாச்சி அவலங்களுக்கு காரணம் என்று பெரியார் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும், உண்மையில் ஆசிபா, நந்தினி, பொள்ளாச்சி கொடுமைகள், கோவை சிறுமி என ஆணாதிக்க வக்கிர வெறி கொண்ட இந்தக் கும்பலின் முகமூடியை கிழித்து எறிந்தும் பெரியார் திடலில் நடக்கிறது அவசர சிறப்புக் கூட்டம். இவையெல்லாம் விளைவுகள் என்றால், இதற்கான நியாயங்களை உறுதி செய்து இந்த மனவோட்டத்தை மக்கள் மத்தியில் காலம் காலமாக தக்க வைத்துக் கொண்டுள்ளவற்றை எடுத்துப் போட்டுத் தோலுரிக்க வேண்டாமா?
“பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள்” என்று பழிக்கும் பகவத் கீதை (அத்தியாயம் 9 - சுலோகம் 12),
“பெண்கள் பெரும்பாலும் விபச்சாரிகள்” என்று சாஸ்திரங்கள் கூறுவதாக எடுத்துக்காட்டும் மனுதர்மம் (அத்யாயம் 9 - சுலோகம் 19),
“பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்டு பிறப்பு எதுவுமில்லை” என்று சொல்லும் பாரதம் (அனுசான்ய பருவம்),
“ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்” என்று அவதூறு செய்யும் பாகவத ஸ்கந்தம் (4-14-42),
“வேலைக்குப் போற பெண்கள் விபச்சாரிகள்” என்று பேட்டி கொடுத்த சங்கராச்சாரியார்,
குளத்தில் குளித்தவர்களின் ஆடையை திருடிவைத்துக் கொண்டு நிர்வாணமாய் கை உயர்த்தி தன்னை வணங்கச் சொன்ன கிருஷ்ணன்,
குரு பத்தினியை பெண்டாள வேடமிட்டுச் சென்ற சந்திரன்,
பார்வதி மேல் மோகங்கொண்டு சிவனால் தலை கிள்ளி எறியப்பட்ட பிரம்மன்,
ரிஷி பத்தினிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து ஆணுறுப்பு அறுந்து விழுந்த சிவன்...
என்று தோண்டத் தோண்ட...
பெண்களின் மீதான வெறுப்பு, குரோதம், வன்முறைகளை கடவுள்களே நடத்தியதாகவும், அது தான் திருவிளையாடல், அவதார மகிமை, தெய்வ வாக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறவர்களை யார் தோலுரிப்பது?
கண்ணனும், ராதையும் போல இது மதுராபாவம் என்று அமெரிக்கப் பெண் இன்ஜினியரிடம் பாலியல் அத்துமீறல் செய்த நித்தியானந்தா,
இது கிருஷ்ணலீலா என்று சொல்லிச் சொல்லி இளம்பெண்களை நாசம் செய்த ஆசாராம் பாபு,
இந்துக் கடவுள்கள் செய்யாததையா நான் செய்துட்டேன் என்று காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்த காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர்,
கோயில் கர்ப்பகிரகத்துக்குள்ளே சல்லாபம் செய்து வீடியோ வெளியிட்ட காஞ்சிபுரம் தேவநாதன்...
என்று இவர்களின் வாழும் தெய்வங்கள், பூணூல் பிண்டங்கள் எல்லாம் பெண்கள் மீது உருவாக்கி வைத்திருக்கிற பிம்பமும், அவர்களின் மோசமான கருத்தும், பாலியல் வன்முறைகளுக்கு கடவுளை துணைக்கு அழைக்கும் போக்கும் இருப்பதை எப்போது எடுத்துக் காட்டுவது?
இந்த நாட்டின் எந்த பிரச்சினைக்கும் வீதிக்கு வராதவர்கள், ஆண்டாள் என்றால் தார்பாச்சையை மடித்துக்கட்டிக் கொண்டு வருவதும், கிருஷ்ணன் என்றதும் கிளம்பிவருவதும் இந்த மக்கள் அறியாததா?
பார்ப்பனர்களைப் பொறுத்தவரை, இது தேர்தல் உத்தி. திராவிடர் கழகத் தலைவருக்கு எதிராக எதையாவது கிளப்பிவிட்டால், அது திமுகவுக்கு ஆபத்தாகப் போய் முடியாதா என்ற அரிப்பு! ஆனால், அவர்கள் நினைவுகொள்ளட்டும்... குருமூர்த்தியின் குருநாதர் சோ அய்யர்வாள் செய்து பார்த்துத் தோற்றுப் போன அரதப் பழசான அதே உத்தி தான் இது என்பதை! தோல்வி என்றால் உங்க தோல்வி எங்க தோல்வி அல்ல... ராமர் படத்தை செருப்பால் அடித்த ஈவெராவை ஆதரிக்கும் கருணாநிதிக்கா உங்கள் ஓட்டு என்று, தமிழ்நாடெங்கும் சுவரொட்டி ஒட்டிய போது, “ஆம், அதே கலைஞருக்குத் தான் எங்கள் ஓட்டு” என்று 1971-இல் 183 தொகுதிகளில் அபார வெற்றியைக் கொடுத்தவர்கள் தமிழர்கள். (அதற்கு முந்தைய தேர்தலில் திமுக 138).
உளுத்துப் போன பார்ப்பனப் புத்தியிலிருந்து உதிர்ந்து விழுந்துள்ள உங்கள் உத்தியை எடுத்து கக்கத்தைச் சொறிய வைத்துக் கொள்ளுங்கள் மாமாக்களே! அடிவருடிகள் ஆங்காங்கே கிடைக்கலாம் வாயாட, காசு கொடுத்தால் கூலிகள் சிலர் கிடைக்கலாம் பெயர் போட்டு போஸ்டர் அடிக்க! சவுண்டிகள் விட்ட கொட்டாவியைக் கூட்டி எழுதி கருமாதி பத்திரிகை முதல்பக்கச் செய்தி வெளியிடலாம்! ஆனால், ஏப்ரல் 18-இல் ஓட்டுப் போட்டு, மே 23-ல் முடிவு வரும்போது, மொத்தமாக இதற்கெல்லாம் அடி கிடைக்கும் - இந்துத்துவா கும்பலுக்கு! நாற்பதுக்கு நாற்பது என்று தமிழகத்தில் மட்டுமல்ல... இந்தியா முழுவதும் பெருவெற்றி பெற்று திமுக-கம்யூனிஸ்ட்-விடுதலைச் சிறுத்தைகள்-ஒடுக்கப்பட்டோர் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும்.
கோவை சிறுமியின் பாலியல் கொலைக்குக் காரணமான சங்பரிவாரத்தின் பாரத் சேனா சந்தோஷ்குமார், பொள்ளாச்சி கொடூரங்களுக்குக் காரணமான திருநாவுக்கரசு கூட்டாளிகள், ஆசிபாவை கோயிலுக்குள்ளேயே வைத்து பாலியல் கொடூரம் நிகழ்த்திய இந்துத்துவ மனநோயாளிகள் அத்தனை பேருக்கும் பாடம் புகட்ட நடக்கும் தேர்தல் இது! நாடெங்கும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி வைத்திருக்கும் கேடுகெட்ட அடிமை அதிமுக - பாசிச பாஜக மோசடிக் கும்பலை ஓட ஓட விரட்டியடிக்கப்போகும் தேர்தல் இது! வரலாற்றுப் பாடத்தை பாசிசக் கும்பலுக்கு மீண்டும் தமிழர்கள் புகட்டப் போகும் தேர்தல் இது!
நீங்கள் எந்தப் பக்கம் திருப்பினாலும், சரியாய் அடையாளம் காட்டி நிற்கும் திசைகாட்டியைப் போல, தேர்தலில் எத்தனை சில்லறை திசை திருப்பல் நாடகங்களை நடத்த முனைந்தாலும், உங்கள் பம்மாத்துகளுக்குத் தமிழகம் பதறாது! பாசிச பாஜகவையும் அதன் அடிமைகளையும் வேரடி மண்ணோடு வீழ்த்தும் நோக்கம் சிதறாது!
கருத்துகள்