”எருமைக்குப் பிறந்திருக்கும் கன்றும் கூட
இனத்திற்கோர் இடர் வந்தால் எம்பிப் பாயும்
எறும்பொன்றை அறியாமல் நாம் மிதித்தால்
இறப்புக்கும் அஞ்சாமல் அது கடிக்கும் - அந்த
எருமைக்கும் எறும்புக்கும் கூட உள்ள
இனமானம் தன்மானம் உனக்கேன் இல்லை...
தமிழா! இன உணர்வு கொள்!” என்ற நிறைவு வரிகளோடு தன் இரண்டு மணிநேரப் பேச்சை அவர் முடிக்கும் போது, ஒட்டுமொத்தக் கூட்டமும் பெறும் உணர்வு எழுச்சியானது. கரகரப்பான அந்தக் குரல் ‘இனமான நடிகர்’ அய்யா எம்.ஏ.கிரிதரன் அவர்களுடையது!
மேடைப் பேச்சாளராகவும், குடுகுடுப்பைக்காரராகவும், மந்திரமா?தந்திரமா? நிகழ்த்துநராகவும், நாடகக் கலைஞராகவும் இயக்கத்தின் முனைப்பான பரப்புரையாளராக ஆர்வமுடன் பணியாற்றியவர்.
மேடை நாடகங்களைத் தயாரித்தும், நாடகங்களுக்கான போட்டியை நடத்தியும், திராவிடர் கழகக் கலைத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். தன் சொந்தக் காசைப் போட்டு கூட்டம் நடத்துபவர்களைப் பார்த்திருப்போம். ஒரு பிரச்சாகராகவும் வந்து, கூட்டம் நடத்துவதற்கான உதவியையும் செய்து, தற்புகழ்ச்சி இல்லாமல் பிரச்சாரம் செய்தவர் அய்யா கிரிதரன். தமிழர் தலைவர் ஆசிரியர் மீது மாறா பற்றுக் கொண்டவர்.
பேரணிகளில் தந்தை பெரியார் வேடமிட்டு வந்து தோழர்களை உற்சாகப்படுத்துவார். அவரைச் சுற்றி கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். அத்தனைக்கும் பெரியார் பாணியில் பதில் சொன்னபடியே பேரணியில் வலம் வருவார்.
ஈரோட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிடப் பெருமாவீரன் இராவணன் வேடமிட்டு வந்தார் அய்யா கிரிதரன். வழக்கம் போல் கேள்விகள்! இராமாயணத்தைக் கிழித்துத் தொங்கவிட்டபடி நடந்தது அவர் பயணம். பேரணி ஒரு புறம் என்றால், இவரைச் சுற்றி எப்போதும் போல் ஒரு கூட்டம்.
“அய்யா ஒரு தலை இங்கிருக்கு... மீதம் 9 தலை எங்கே அய்யா?” என்று கேட்டார் குறும்புக்காரத் தோழர் ஒருவர். ”அய்யிரண்டு திசை முகத்தும் தன் புகழை வைத்தோன் என்பதைத் தான் பத்துத் தலை ராவணன் என்றான்; எத்திசையிலும் பார்ப்பான் மீது கண் வைத்து ஆரியர்களை அழித்த காரணத்தால் தான் பத்துத் தலை என்றான்! மற்றபடி நான் மனிதனே!” என்று கருத்து ரீதியாகவும், கிண்டலாகவும் அவர் சொன்ன பதில் கைத்தட்டலை அள்ளியது இன்றும் நினைவிருக்கிறது.
நான் சென்னை வந்த புதிதில், கூட்டங்களில் உரையாற்றுகையில் ஊக்கப்படுத்தி மகிழ்ந்தவர். வயதில் குறைந்தவர் என்றெல்லாம் கருதாமல் கழகத் தோழர் என்ற அளவில் மரியாதை காட்டி மகிழும் திராவிடர் இயக்கத் தோழர்களின் இயல்பு தான் அவருடையது! கலைத் துறையையும் கடந்து, பெரியார் சமூகக் காப்பு அணியின் இயக்குநராகவும் இருந்து தோழர்களை உருவாக்கியவர்!
இறுதிக் காலத்தில் உடல் நலிவுற்று நினைவு தவறி இருந்த நிலையிலும், மீண்டும் நினைவு திரும்பியதும் பெரியார் திடலுக்கு வந்து, ஆசிரியர் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்தவர்! இத்தகைய எளிய, கட்டுப்பாடுமிக்க, உறுதியான தோழர்களை ஒருபோதும் திராவிடர் கழகம் மறக்காது.
கிரிதரன் அவர்கள் விட்ட பணியைத் தொடர்வோம்! கலைத் துறையில் கருத்துப் பரப்பலை மேலும் விரிவாக்குவோம்!
இனத்திற்கோர் இடர் வந்தால் எம்பிப் பாயும்
எறும்பொன்றை அறியாமல் நாம் மிதித்தால்
இறப்புக்கும் அஞ்சாமல் அது கடிக்கும் - அந்த
எருமைக்கும் எறும்புக்கும் கூட உள்ள
இனமானம் தன்மானம் உனக்கேன் இல்லை...
தமிழா! இன உணர்வு கொள்!” என்ற நிறைவு வரிகளோடு தன் இரண்டு மணிநேரப் பேச்சை அவர் முடிக்கும் போது, ஒட்டுமொத்தக் கூட்டமும் பெறும் உணர்வு எழுச்சியானது. கரகரப்பான அந்தக் குரல் ‘இனமான நடிகர்’ அய்யா எம்.ஏ.கிரிதரன் அவர்களுடையது!
மேடைப் பேச்சாளராகவும், குடுகுடுப்பைக்காரராகவும், மந்திரமா?தந்திரமா? நிகழ்த்துநராகவும், நாடகக் கலைஞராகவும் இயக்கத்தின் முனைப்பான பரப்புரையாளராக ஆர்வமுடன் பணியாற்றியவர்.
மேடை நாடகங்களைத் தயாரித்தும், நாடகங்களுக்கான போட்டியை நடத்தியும், திராவிடர் கழகக் கலைத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். தன் சொந்தக் காசைப் போட்டு கூட்டம் நடத்துபவர்களைப் பார்த்திருப்போம். ஒரு பிரச்சாகராகவும் வந்து, கூட்டம் நடத்துவதற்கான உதவியையும் செய்து, தற்புகழ்ச்சி இல்லாமல் பிரச்சாரம் செய்தவர் அய்யா கிரிதரன். தமிழர் தலைவர் ஆசிரியர் மீது மாறா பற்றுக் கொண்டவர்.
பேரணிகளில் தந்தை பெரியார் வேடமிட்டு வந்து தோழர்களை உற்சாகப்படுத்துவார். அவரைச் சுற்றி கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். அத்தனைக்கும் பெரியார் பாணியில் பதில் சொன்னபடியே பேரணியில் வலம் வருவார்.
ஈரோட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிடப் பெருமாவீரன் இராவணன் வேடமிட்டு வந்தார் அய்யா கிரிதரன். வழக்கம் போல் கேள்விகள்! இராமாயணத்தைக் கிழித்துத் தொங்கவிட்டபடி நடந்தது அவர் பயணம். பேரணி ஒரு புறம் என்றால், இவரைச் சுற்றி எப்போதும் போல் ஒரு கூட்டம்.
“அய்யா ஒரு தலை இங்கிருக்கு... மீதம் 9 தலை எங்கே அய்யா?” என்று கேட்டார் குறும்புக்காரத் தோழர் ஒருவர். ”அய்யிரண்டு திசை முகத்தும் தன் புகழை வைத்தோன் என்பதைத் தான் பத்துத் தலை ராவணன் என்றான்; எத்திசையிலும் பார்ப்பான் மீது கண் வைத்து ஆரியர்களை அழித்த காரணத்தால் தான் பத்துத் தலை என்றான்! மற்றபடி நான் மனிதனே!” என்று கருத்து ரீதியாகவும், கிண்டலாகவும் அவர் சொன்ன பதில் கைத்தட்டலை அள்ளியது இன்றும் நினைவிருக்கிறது.
நான் சென்னை வந்த புதிதில், கூட்டங்களில் உரையாற்றுகையில் ஊக்கப்படுத்தி மகிழ்ந்தவர். வயதில் குறைந்தவர் என்றெல்லாம் கருதாமல் கழகத் தோழர் என்ற அளவில் மரியாதை காட்டி மகிழும் திராவிடர் இயக்கத் தோழர்களின் இயல்பு தான் அவருடையது! கலைத் துறையையும் கடந்து, பெரியார் சமூகக் காப்பு அணியின் இயக்குநராகவும் இருந்து தோழர்களை உருவாக்கியவர்!
இறுதிக் காலத்தில் உடல் நலிவுற்று நினைவு தவறி இருந்த நிலையிலும், மீண்டும் நினைவு திரும்பியதும் பெரியார் திடலுக்கு வந்து, ஆசிரியர் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்தவர்! இத்தகைய எளிய, கட்டுப்பாடுமிக்க, உறுதியான தோழர்களை ஒருபோதும் திராவிடர் கழகம் மறக்காது.
கிரிதரன் அவர்கள் விட்ட பணியைத் தொடர்வோம்! கலைத் துறையில் கருத்துப் பரப்பலை மேலும் விரிவாக்குவோம்!
கருத்துகள்