முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இனமான நடிகருக்கு வீரவணக்கம்!!

”எருமைக்குப் பிறந்திருக்கும் கன்றும் கூட
இனத்திற்கோர் இடர் வந்தால் எம்பிப் பாயும்
எறும்பொன்றை அறியாமல் நாம் மிதித்தால்
இறப்புக்கும் அஞ்சாமல் அது கடிக்கும் - அந்த
எருமைக்கும் எறும்புக்கும் கூட உள்ள
இனமானம் தன்மானம் உனக்கேன் இல்லை...
தமிழா! இன உணர்வு கொள்!” என்ற நிறைவு வரிகளோடு தன் இரண்டு மணிநேரப் பேச்சை அவர் முடிக்கும் போது, ஒட்டுமொத்தக் கூட்டமும் பெறும் உணர்வு எழுச்சியானது. கரகரப்பான அந்தக் குரல் ‘இனமான நடிகர்’ அய்யா எம்.ஏ.கிரிதரன் அவர்களுடையது!

மேடைப் பேச்சாளராகவும், குடுகுடுப்பைக்காரராகவும், மந்திரமா?தந்திரமா? நிகழ்த்துநராகவும், நாடகக் கலைஞராகவும் இயக்கத்தின் முனைப்பான பரப்புரையாளராக ஆர்வமுடன் பணியாற்றியவர்.


மேடை நாடகங்களைத் தயாரித்தும், நாடகங்களுக்கான போட்டியை நடத்தியும், திராவிடர் கழகக் கலைத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். தன் சொந்தக் காசைப் போட்டு கூட்டம் நடத்துபவர்களைப் பார்த்திருப்போம். ஒரு பிரச்சாகராகவும் வந்து, கூட்டம் நடத்துவதற்கான உதவியையும் செய்து, தற்புகழ்ச்சி இல்லாமல் பிரச்சாரம் செய்தவர் அய்யா கிரிதரன். தமிழர் தலைவர் ஆசிரியர் மீது மாறா பற்றுக் கொண்டவர்.

பேரணிகளில் தந்தை பெரியார் வேடமிட்டு வந்து தோழர்களை உற்சாகப்படுத்துவார். அவரைச் சுற்றி கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். அத்தனைக்கும் பெரியார் பாணியில் பதில் சொன்னபடியே பேரணியில் வலம் வருவார்.

ஈரோட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிடப் பெருமாவீரன் இராவணன் வேடமிட்டு வந்தார் அய்யா கிரிதரன். வழக்கம் போல் கேள்விகள்! இராமாயணத்தைக் கிழித்துத் தொங்கவிட்டபடி நடந்தது அவர் பயணம். பேரணி ஒரு புறம் என்றால், இவரைச் சுற்றி எப்போதும் போல் ஒரு கூட்டம்.
“அய்யா ஒரு தலை இங்கிருக்கு... மீதம் 9 தலை எங்கே அய்யா?” என்று கேட்டார் குறும்புக்காரத் தோழர் ஒருவர். ”அய்யிரண்டு திசை முகத்தும் தன் புகழை வைத்தோன் என்பதைத் தான் பத்துத் தலை ராவணன் என்றான்; எத்திசையிலும் பார்ப்பான் மீது கண் வைத்து ஆரியர்களை அழித்த காரணத்தால் தான் பத்துத் தலை என்றான்! மற்றபடி நான் மனிதனே!” என்று கருத்து ரீதியாகவும், கிண்டலாகவும் அவர் சொன்ன பதில் கைத்தட்டலை அள்ளியது இன்றும் நினைவிருக்கிறது.


நான் சென்னை வந்த புதிதில், கூட்டங்களில் உரையாற்றுகையில் ஊக்கப்படுத்தி மகிழ்ந்தவர். வயதில் குறைந்தவர் என்றெல்லாம் கருதாமல் கழகத் தோழர் என்ற அளவில் மரியாதை காட்டி மகிழும் திராவிடர் இயக்கத் தோழர்களின் இயல்பு தான் அவருடையது! கலைத் துறையையும் கடந்து, பெரியார் சமூகக் காப்பு அணியின் இயக்குநராகவும் இருந்து தோழர்களை உருவாக்கியவர்!


இறுதிக் காலத்தில் உடல் நலிவுற்று நினைவு தவறி இருந்த நிலையிலும், மீண்டும் நினைவு திரும்பியதும் பெரியார் திடலுக்கு வந்து, ஆசிரியர் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்தவர்! இத்தகைய எளிய, கட்டுப்பாடுமிக்க, உறுதியான தோழர்களை ஒருபோதும் திராவிடர் கழகம் மறக்காது.

கிரிதரன் அவர்கள் விட்ட பணியைத் தொடர்வோம்! கலைத் துறையில் கருத்துப் பரப்பலை மேலும் விரிவாக்குவோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam