நீங்கள் காத்த சமூகநீதியின் விளைச்சலில் என்றும் வாழ்வீர்கள்! #சமூகநீதி_காத்த_வீராங்கனை!
:( சோகமாக உணர்கிறார்.
5 டிசம்பர், 05:37 PM
மிகப்பெரிய சிக்கலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் அம்மையாரின் இழப்பு - துணிச்சலான எதிர்க்குரலின் இழப்பாக இருக்கும்!
:( கவலையாக உணர்கிறார்.
5 டிசம்பர், 05:41 PM
அம்மையார் ஜெயலலிதாவின் இறப்பில் காவி கொண்டிருக்கும் ஆர்வம் தான் பாண்டேயின் அவசர அறிவிப்பு!
5 டிசம்பர், 06:06 PM
அம்மையார் ஜெயலலிதாவின் சூழலைப் பயன்படுத்திக் கொண்டும், அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களைப் பயன்படுத்திக் கொண்டும், மிரட்டி, தங்கள் அடியாளை ஆட்சியில் அமர்த்த மத்திய ஆர்.எஸ்.எஸ் பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே கூடாரத்தில் ஒரு சில ஒட்டகங்கள் நுழைந்திருக்கின்றன. அவற்றை சரியாகக் கையாளுவது அவசியம்... இல்லையேல் கட்சியே கையாடப்படும்!
5 டிசம்பர், 08:27 PM
இந்தியா முழுக்க ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசுகின்றன ஊடகங்கள். இதில் செல்லாக்காசு நடவடிக்கைக்கான எதிர்ப்பிலிருந்து சற்று ஓய்வு கொண்டிருக்கிறது மத்திய அரசு! யாகுப் மேமனுக்கு அப்துல் கலாம்... செல்லாக்காசுக்கு ஜெயலலிதாவா என்னும் சந்தேகமும் எழாமல் இல்லை.
5 டிசம்பர், 08:29 PM
இந்த கடுமையான சந்தர்ப்பத்திலும் நடுநிலையைக் கடைபிடித்தது ரெண்டே ரெண்டு டிவிக்கள் தான்.
ஏஞ்சல் டிவி
ஆசிர்வாதம் டிவி
இவனுங்க எந்த கிரகத்துல இருக்கானுங்கன்னே தெரியல...
ஸ்தோத்திரம் ஆண்டவரே...
#as_received
5 டிசம்பர், 11:13 PM
சமூகநீதி காத்த வீராங்கனைக்கு வீரவணக்கம்!
6 டிசம்பர், 01:28 AM
ஆயிரம் ஆணைகள்... பல நூறு 110-கள்! இருக்கலாம்...
ஆனால்...
காலமெல்லாம் உங்களை நெஞ்சில் நிறுத்தப்போவது 69% இட ஒதுக்கீடு உறுதியும், சங்கராச்சாரி கைதும் தான்!
6 டிசம்பர், 04:33 AM
ஏமாற்றங்களையும், தனிமையையும் ஏராளமாய் நீங்கள் சந்தித்ததன் விளைவை பல நேரங்களில் மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். என்றாலும், அவையிரண்டும் சொல்லற்கரிய கொடுமையானவையே! அவற்றிலிருந்தும் விடுதலை பெற்றிருக்கிறீர்கள்.
#ஜெயலலிதா
6 டிசம்பர், 04:34 AM
இத்தனை நாட்களுக்குப் பிறகு அந்த முகம் இப்போது அனைவரும் பார்க்கும் படி!
6 டிசம்பர், 06:18 AM
அம்மையார் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பான செய்திகள் ரகசியம் காக்கப்பட்டது குறித்து வியக்கிறோம். ஆனால், அதையெல்லாம் விட மிகச் சரியாக சில விசயங்களில் கவனமாக இருந்து, வேறெதிலும் கவனம் குவியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிறைய இழுத்துவிடாமல், சரியாக இரண்டு நாளில் அடுத்தடுத்து காட்சிகள்.
மறைந்தவரின் மீதான கவனம் சிதறி, அடுத்து யார் என்ற கேள்விகளெல்லாம் எழுந்து விடாத படியான நடவடிக்கை அதில் மிக முக்கியமானது. இடைக்கால முதலமைச்சர் என்று நியமிக்கப்பட்டிருந்தால், அடுத்து யார் வருவார் என்றே அனைத்து ஊடகங்களும் அலறியிருக்கும். அதற்கு இடம் கொடாதபடி அடுத்தடுத்து காய் நகர்த்தப்பட்டு, இரவோடிரவாக பதவியேற்பை முடித்து, முதல்வரை மாற்றிவிட்டு, முழுக் கவனமும் மறைந்தவரின் புகழ் மீதே குவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்ந்த அணுகுமுறை - பலர் கற்க வேண்டிய பாடம்.
6 டிசம்பர், 06:38 AM
அந்த தலைமைச்செயலகம் நீங்கள் அமர்ந்து ஆட்சி செய்திருக்க வேண்டிய இடம். அந்தச் சாலை நீங்கள் முதலமைச்சராக அடிக்கடி சென்று வந்திருக்க வேண்டிய சாலை.
6 டிசம்பர், 05:23 PM
கருத்துகள்