முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெயலலிதா மறைவையொட்டி...


நீங்கள் காத்த சமூகநீதியின் விளைச்சலில் என்றும் வாழ்வீர்கள்! #சமூகநீதி_காத்த_வீராங்கனை!

:( சோகமாக உணர்கிறார்.
5 டிசம்பர், 05:37 PM


மிகப்பெரிய சிக்கலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் அம்மையாரின் இழப்பு - துணிச்சலான எதிர்க்குரலின் இழப்பாக இருக்கும்!

:( கவலையாக‌ உணர்கிறார்.
5 டிசம்பர், 05:41 PM


அம்மையார் ஜெயலலிதாவின் இறப்பில் காவி கொண்டிருக்கும் ஆர்வம் தான் பாண்டேயின் அவசர அறிவிப்பு!
5 டிசம்பர், 06:06 PM


அம்மையார் ஜெயலலிதாவின் சூழலைப் பயன்படுத்திக் கொண்டும், அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களைப் பயன்படுத்திக் கொண்டும், மிரட்டி, தங்கள் அடியாளை ஆட்சியில் அமர்த்த மத்திய ஆர்.எஸ்.எஸ் பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே கூடாரத்தில் ஒரு சில ஒட்டகங்கள் நுழைந்திருக்கின்றன. அவற்றை சரியாகக் கையாளுவது அவசியம்... இல்லையேல் கட்சியே கையாடப்படும்!
5 டிசம்பர், 08:27 PM


இந்தியா முழுக்க ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசுகின்றன ஊடகங்கள். இதில் செல்லாக்காசு நடவடிக்கைக்கான எதிர்ப்பிலிருந்து சற்று ஓய்வு கொண்டிருக்கிறது மத்திய அரசு! யாகுப் மேமனுக்கு அப்துல் கலாம்... செல்லாக்காசுக்கு ஜெயலலிதாவா என்னும் சந்தேகமும் எழாமல் இல்லை.
5 டிசம்பர், 08:29 PM



இந்த கடுமையான சந்தர்ப்பத்திலும் நடுநிலையைக் கடைபிடித்தது ரெண்டே ரெண்டு டிவிக்கள் தான்.
ஏஞ்சல் டிவி
ஆசிர்வாதம் டிவி
இவனுங்க எந்த கிரகத்துல இருக்கானுங்கன்னே தெரியல...
ஸ்தோத்திரம் ஆண்டவரே...
#as_received
5 டிசம்பர், 11:13 PM



சமூகநீதி காத்த வீராங்கனைக்கு வீரவணக்கம்!
6 டிசம்பர், 01:28 AM



ஆயிரம் ஆணைகள்... பல நூறு 110-கள்! இருக்கலாம்...
ஆனால்...
காலமெல்லாம் உங்களை நெஞ்சில் நிறுத்தப்போவது 69% இட ஒதுக்கீடு உறுதியும், சங்கராச்சாரி கைதும் தான்!
6 டிசம்பர், 04:33 AM


ஏமாற்றங்களையும், தனிமையையும் ஏராளமாய் நீங்கள் சந்தித்ததன் விளைவை பல நேரங்களில் மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். என்றாலும், அவையிரண்டும் சொல்லற்கரிய கொடுமையானவையே! அவற்றிலிருந்தும் விடுதலை பெற்றிருக்கிறீர்கள்.
#ஜெயலலிதா
6 டிசம்பர், 04:34 AM


இத்தனை நாட்களுக்குப் பிறகு அந்த முகம் இப்போது அனைவரும் பார்க்கும் படி!
6 டிசம்பர், 06:18 AM


அம்மையார் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பான செய்திகள் ரகசியம் காக்கப்பட்டது குறித்து வியக்கிறோம். ஆனால், அதையெல்லாம் விட மிகச் சரியாக சில விசயங்களில் கவனமாக இருந்து, வேறெதிலும் கவனம் குவியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிறைய இழுத்துவிடாமல், சரியாக இரண்டு நாளில் அடுத்தடுத்து காட்சிகள்.
மறைந்தவரின் மீதான கவனம் சிதறி, அடுத்து யார் என்ற கேள்விகளெல்லாம் எழுந்து விடாத படியான நடவடிக்கை அதில் மிக முக்கியமானது. இடைக்கால முதலமைச்சர் என்று நியமிக்கப்பட்டிருந்தால், அடுத்து யார் வருவார் என்றே அனைத்து ஊடகங்களும் அலறியிருக்கும். அதற்கு இடம் கொடாதபடி அடுத்தடுத்து காய் நகர்த்தப்பட்டு, இரவோடிரவாக பதவியேற்பை முடித்து, முதல்வரை மாற்றிவிட்டு, முழுக் கவனமும் மறைந்தவரின் புகழ் மீதே குவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்ந்த அணுகுமுறை - பலர் கற்க வேண்டிய பாடம்.
6 டிசம்பர், 06:38 AM


அந்த தலைமைச்செயலகம் நீங்கள் அமர்ந்து ஆட்சி செய்திருக்க வேண்டிய இடம். அந்தச் சாலை நீங்கள் முதலமைச்சராக அடிக்கடி சென்று வந்திருக்க வேண்டிய சாலை.
6 டிசம்பர், 05:23 PM

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam