முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திராவிடத்தை விட்டுவிலகுகிறாரா தளபதி ஸ்டாலின்?

சும்மா ஆரியம், திராவிடம் என்று ஓட்ட முடியாது என்பதால் தளபதி தனது பிறந்தநாளை வேறு (கார்ப்பொரேட்) பாணியில் அய்.நா. மன்றம் அறிவித்துள்ள தேதிகளின்படி ஒரு நாளைக் குறிப்பிட்டு கொண்டாடியுள்ளாராம். சொல்லி சந்தோசப்படுகிறது குமுதம் ரிப்போர்ட்டர்! அதாவது திராவிட இயக்கக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டார்கள் என்பது தான் குமுதம் சொல்ல வருவது!

அட, புத்தியற்ற பார்ப்பனியமே! தளபதி ஸ்டாலின் தன் பிறந்தநாளையொட்டி கொண்டாடியது என்ன தெரியுமா? ”பாகுபாடு ஒழிப்பு நாள் - Zero Discrimination Day”. திராவிட இயக்கத்தின் அடிப்படைத் தத்துவமும், அது தோன்றக் காரணமுமே அது தானே! பாகுபாடுகளை ஒழிக்க வேண்டுமென்பதை உறுதியேற்பாகவே நிகழ்த்திக் காட்டியிருப்பது அதன் செயல்பாட்டின் இன்னொரு பரிமாணம் (Dimension) அல்லவா?

தன்னுடைய உரையிலும் தளபதி ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது என்ன?
”சாதி, மதம், இனம், மொழி இவைகளைப் பொறுத்தவரையிலே யாருக்கும் பாகுபாடு இருக்கக்கூடாது. நம்முடைய தலைவர் கலைஞரின் தொலை நோக்கு தான் நம்மை போன்ற இளைஞர்களை இன்றைக்கு ஓரளவுக்கு பக்குவப்படுத்தி, தொடர்ந்து நாம் ஆற்றக்கூடிய பணிகளுக்கு உரமூட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதை நினைவுபடுத்தக்கூடிய வகையில் இந்த மார்ச் 1-ம் நாள் இருந்திட வேண்டும். பாகுபாடு காட்டாத ஒரு சமுதாயத்தை உருவாக்கிடவேண்டும். பாகுபாடு ஒழிப்பு கொள்கை என்பதை நம்முடைய உடம்பில் ஓடக்கூடிய ரத்தத்தோடு நிச்சயமாக நாம் ஒப்பிட முடியும். நம் அனைவருடைய நரம்புகளில் ஓடுவது ஒரே ரத்தம்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. எனவே, ரத்தத்தை பொறுத்தவரையிலே பாகுபாடு கிடையாது.

மார்ச் 1-ம் தேதியை பாகுபாடு ஒழிப்பு தினமாக ஐ.நா சபை கொண்டாடுகிறது. எனவே, பாகுபாடுகளை ஒழிக்க நாம் சபதம் ஏற்க வேண்டும். பாகுபாடு காட்டாத ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும். எல்லோர் உடலிலும் ஒரே மாதிரியான ரத்தம்தான் ஓடுகிறது. கடவுள் நம்பிக்கையுடையவர்களின் ரத்தம் கடவுள் நம்பிக்கையற்றவர்களை வாழ வைக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் ரத்தம் கடவுள் நம்பிக்கை உடையவர்களை வாழ வைக்கும். எனவேதான் இந்த மாதம் முழுவதும் ரத்த தானம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.” (தினத்தந்தி 02.03.2015)

இதைத் தானே தொடர்ந்து திராவிட இயக்கம் வலியுறுத்தி வருகிறது. அதையே நவீன வடிவத்தில் செய்திருக்கிறார் தளபதி!


உங்கள் ஆசையெல்லாம் நடக்காது பூணூல்களே! பாகுபாடுகளை ஒழிக்கப் புறப்பட்டது தான் திராவிட இயக்கம். வெறும் நேம் பிளேட் மாட்டிக் கொண்டு அலைவதல்ல. செயலில் காட்டவேண்டும். அப்படி செயல்பட்டால் தான் திராவிட இயக்கம். அதைத் தான் தன் பிறந்தநாளில் புது வடிவில் செய்துகாட்டத் தொடங்கியிருக்கிறார் தளபதி ஸ்டாலின். வாழ்த்துகள் தளபதி - தொடர்ந்து எதிரிகளின் கணிப்புகளைத் தவிடுபொடியாக்கி, சமத்துவ சமுதாயத்திற்கான பாதை அமையுங்கள்.

பின்குறிப்பு: நிறம், மதம், மொழி, நம்பிக்கை, விருப்பம் என அனைத்துப் பாகுபாடுகளும் வரிசைப்படுத்தப்பட்ட அந்த விளம்பரத்தில் குறிப்பாக ஜாதி விடுபட்டுள்ளது. அதனைத் தன் உரையில் முதன்மையாகக் குறிப்பிட்டு தளபதி தெளிவுபடுத்தியிருந்தாலும், விளம்பரத்திலும், தொடர்ந்து ஏற்கப்படும் உறுதிமொழியிலும் அதனை இடம்பெறச் செய்வது அவசியமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam