முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

’பிராமணாள் கபே’யும் நாயுடுஹால், கோனார் நோட்சும்!

திருச்சி திருவரங்கத்தில் இருந்த ‘ஹோட்டல் ஸ்ரீ கிருஷ்ணய்யர் என்பதில், கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென ‘பிராமணாள்’ என்ற பெயர் நுழைக்கப்பட்டது. தகவலறிந்த திராவிடர் கழகத் தோழர்கள் நேரில் சென்று ‘பிராமணாள்’ பெயர்ப்பலகையை நீக்குங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். பல முறை வேண்டுகோள் விடுத்தும், அவர் மறுக்கவே பிரச்சினை காவல்துறையிடம் சென்றது. அங்கு பல முறை பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.

காவல்துறையும், அரசு வழக்கறிஞரும் கூட ‘பிராமணா’ளுக்கு ஆதரவாக இருக்கவே, அடுத்தகட்ட நடவடிக்கையாக விளக்கக் கூட்டத்தினை நடத்த திராவிடர் கழகம் அனுமதி கோரியது. தமிழக முதல்வருக்கு (அவருடைய தொகுதி என்பதாலும்) வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார் திராவிடர் கழக்த் தலைவர் கி.வீரமணி. இதற்கிடையில் இன்னும் சில பெரியாரிய அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கின.  (தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் பாசறை போன்ற அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. கைது, சிறை வரை சென்றது. ஒட்டுமொத்த பெரியாரியக் கருத்தாளர்களும் இந்த இழிவு துடைக்கும் பணியில் திரண்டனர்.

விளக்கக் கூட்டம் நடத்துவதற்கு, மூன்று முறை தொடர்ந்து அனுமதி மறுக்கப்படவே, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகி, நவம்பர் 4 அன்று கூட்டம் நடத்த அனுமதி பெற்றுவந்தது திராவிடர் கழகம்.

நவம்பர் 4, 2012:
இன உணர்வுடன் வெள்ளம்போல் திரண்ட தமிழர் கூட்டத்தின் மத்தியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார். “நீ பிராமணாள் என்றால், நான் சூத்திரனா? அதை இனியும் அனுமதிப்போமா?” என்று பொங்கினார். உணர்ச்சிக் கொந்தளிப்பான அந்தச் சமயத்திலும், ”எவ்வித வன்முறைக்கும் இடம் தராமல் அவரவர் அப்படியே வீடு திரும்ப வேண்டும். கிருஷ்ணய்யர் கடைப்பக்கம் யாரும் போகக் கூடாது” என்று கட்டுப்பாடு விதித்தார். பெரியாரின் இயக்கம் இராணுவத்தைவிடக் கட்டுப்பாடு மிக்க இயக்கம் என்பதை நிரூபித்தது. கிருஷ்ணய்யர் கடை தப்பித்தது.

நவம்பர் 6, 2012:
’பிராமணாள் கபே’ பெயருடன் இருந்த கடையைக் காலி செய்யுமாறு கடை உரிமையாளர் கேட்டுக் கொண்டார். கடை காலிசெய்யப்பட்டது. அடுத்து இடம் தர முன்வந்த பார்ப்பனர் ஒருவரும், ‘பிராமணாள்’ பெயர் இல்லாமல் நடத்துவதாக இருந்தால் கடையை நடத்து என்று சொல்லிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதியான தகவல்கள் வரட்டும்.

இந்தப் பிரச்சினை நடந்து கொண்டிருக்கும்போதே பலரும் (சிலர் குழப்பத்தினாலும், சிலர் குதர்க்கத்திற்காகவும்) கேட்ட கேள்வி ஒன்று தான்.

ஏன் பிராமணாளை மட்டும் குறிவைக்கிறீர்கள்? பார்ப்பனர்களை மட்டும் ஏன் சீண்டுகிறீர்கள்?

சென்னையிலேயே ’நாயுடு ஹால்’ இருக்கிறது; பல இடங்களில் ’தேவர் மெஸ்’ இருக்கிறது; ’நாயர் டீக்கடை’ இருக்கிறது; செட்டியார் வட்டிக்கடை இருக்கிறது; முதலியார், வன்னியர், பிள்ளை, லொட்டு, லொசுக்கு, மயிறு, மட்டை என்று ஏகப்பட்ட ஜாதிப் பெயர்களோடு கடைகள் இருக்கின்றன. ஏன் கோனார் என்ற பெயரில் நோட்சு கூட இருக்கிறது. பெயர்களில் பலரும் இன்றும் ஜாதிப் பின்னொட்டு வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் எதிர்க்காமல், பாவம் அப்புராணி பார்ப்பனர்களை மட்டும் ஏன் தாக்குகிறீர்கள்? அவர்கள் சாதுவானவர்கள், மிருதுவானவர்கள், எதையும் தாங்கிக் கொள்வார்கள் என்பதாலா? இத்தியாதி... இத்தியாதி....

இந்தக் கேள்வியில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது என்று தோன்றும். ஏனெனில் இந்தக் கேள்வியை பார்ப்பனர்கள் கேட்டதை விடவும், பார்ப்பனரல்லாதவர்கள் நிறைய கேட்டார்கள்; கேட்கிறார்கள். அதிகம் படித்த மேதாவிகளும் கூட இக்கேள்வியைக் கேட்டார்கள்.


ஆனால், அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ, வசதியாகவோ மறந்துவிடும் செய்தி ஒன்று உண்டு. ‘மாமி மெஸ்’ இன்னும் இருக்கிறது; ’மாமிஸ் மசாலா’ விளம்பரம் வந்துகொண்டுதான் இருக்கிறது. ‘அய்யங்கார் பேக்கரி’ என்று தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் கடைகள் இருக்கின்றன. அங்கெல்லாமும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தவில்லையே!

ஏன், பிரச்சினைக்குரிய கடையே, வெறும் ‘கிருஷ்ணய்யர் ஹோட்டலாக’ இருக்கும்வரை யார் கேட்டார்? ‘பிராமணாள்’ நுழைந்தவுடன் தானே பிரச்சினை தொடங்கியது.

’அப்படின்னா... புரியலையே?’ என்கிறீர்களா?
மேற்சொன்ன நாயுடு, தேவர், நாயர், செட்டியார், முதலியார், வன்னியர், பிள்ளை,  கோனார், அய்யர், அய்யங்கார் - இவையெல்லாம் ஜாதிப் பெயர்கள்!

அப்ப பிராமணர்/ பிராமணாள்? 
அது வர்ணத்தின் பெயர்! நால்வருணத்தின் அடிப்படையில் இருக்கும் இந்துமத ஜாதி அமைப்பில், பிரம்மனின் முகத்தில் பிறந்ததால் உயர்ந்த வர்ணம் என்று சொல்லப்படுவதின் பெயர்! அது ஜாதிப் பெயர் அல்ல. யாரும் சுப்பிரமணிய பிராமணர் என்றோ, ராமசாமி பிராமணர், அனுஜா பிராமணத்தி, ஜனனி பிராமணத்தி என்றோ பெயர் வைத்துக் கொள்வதில்லை.

சரி, வர்ணத்தின் பெயராகவே இருந்துவிட்டுப் போகட்டும். உங்களுக்கென்ன பிரச்சினை?

இருக்கிறது. அங்கே தான் முக்கியப் பிரச்சினையே இருக்கிறது. இந்த வர்ணாசிரமத்தின்படி தான் பிறப்பின் அடிப்படையில் ஜாதி புகுத்தப்படுகிறது. பிறப்பின் அடிப்படையிலேயே இழிவு சுமத்தப்படுகிறது. பிராமணர் என்பதை ஒப்புக் கொண்டால், மற்ற வர்ணங்களையும் ஒப்புக் கொள்ளவேண்டும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்றெல்லாம் பிரிவுகள் கிடையாது. இந்து மதத்தின் படி அனைவரும் சூத்திரர்களே என்பதை சமூகவியலாளர்கள் மட்டுமல்ல... நீதிமன்றமே சுட்டிக் காட்டியுள்ளது.

எனவே, அவாள் பிராமணர் என்று சொன்னால், நான்/நாம் சூத்திரன் என்று ஆகிவிடுவேன்/வோம்.


சூத்திரன் என்றால்...?

மனுதர்ம சாத்திரம் எட்டாவது அத்தியாயம் 415 ஆவது சுலோகத்தின் படி, சூத்திரன் என்பவன்
”யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்,
பக்தியினால் வேலை செய்கிறவன்,
தன்னுடைய தேவடியாள் மகன்,
ஒருவனால் கொடுக்கப்பட்டவன்,
குல வழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன்,
குற்றத்திற்காக வேலை செய்கிறவன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதான் இந்து சட்டத்தின் அடிப்படை. என்னை/ நம்மைத் தேவடியாள் மகன் என்றும், நம் இனப் பெண்களைத் தேவடியாள் என்றும் சொல்லும் இந்த இழிவை நாம் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும். இந்துமதத்தில் இருந்துகொண்டே நான் சூத்திரனல்ல என்றெல்லாம் சொல்லமுடியுமா? முடியாது. எனவே தான் ’சூத்திரன் என்றால் ஆத்திரங் கொள்’ என்றார் பெரியார்.

அவர்கள் எங்கே உங்களைச் சூத்திரர்கள் என்று சொன்னார்கள்? தங்களைத் தானே பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்?
இதோ பெரியார் கேட்கிறார்:


”நானும் 20 வருடமாகச் சொல்கிறேன். பார்ப்பானை ‘பிராமணன்’ என்று சொல்லாதே! அவனைப் பிராமணன் என்று கூறினார், நீ யார்? ஒருத்தி உன் தெருவில் தன் வீட்டில் ‘இது பதிவிரதை வீடு’ என்று போர்டு மாட்டிக் கொண்டால் மற்றவர் வீடு என்ன என்று அர்த்தம்? என்று கத்திக் கத்தி, என் தொண்டையில் ரத்தம் வரச் சொல்கிறேன். உன் கடையில் ‘பிராமணாள்’ என்று போர்டு போட்டுக் கொண்டால் ‘சூத்திரப் பயலே வாடா!’ என்று தானே கூப்பிடுகிறாய்?” 
(விழுப்புரத்தில் தந்தை பெரியார் உரையிலிருந்து - விடுதலை 30.8.1958)


பெரியார் கேட்பதில் உள்ள நியாயம் புரிகிறதா, இல்லையா? ஒரு வீடு மட்டும் பத்தினி வீடு என்றால் மற்றவர் வீடெல்லாம் தேவடியாள் வீடு என்றல்லவா பொருள்.

அதே தானே பிராமணாள் என்றால், மற்றவர் சூத்திரன் என்று தானே பொருள். அதற்கு, மேலே உள்ள விளக்கத்தைத் தவிர வேறென்ன பொருள் இருக்கிறது. பச்சையாக என் இனத்தைத் தேவடியாள் மகன் என்று சொன்னால் நான் எப்படி பொறுத்துக் கொள்வது?

அப்படியானால், மற்ற ஜாதிப் பெயர்கள் இருக்கலாம் என்று சொல்லுகிறீர்களா? பள்ளிகளில் மட்டும் ஜாதி கேட்கிறார்களே?
இந்தக் கேள்வியைக் கேட்பவர்கள் உண்மையிலேயே ஜாதி ஒழிய வேண்டும் என்ற அக்கறையுடன் கேட்ப்தாகக் கருதிக் கொண்டே நாங்கள் இந்த பதிலைத் தருகிறோம். (பலர் குதர்க்கத்திற்காக இக்கேள்வியைக் கேட்டுக் கொண்டே, சமூகத் தளத்தில் ஜாதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நாணயமற்றவர்களாகக் கருதி அவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை -இங்கு!)

இரண்டாவது கேள்விக்கு முதலில் பதில் சொல்லிவிடுகிறேன். பலமுறை சொல்லி இருந்தாலும் கூட. நோய் இருக்கும்வரை அதற்கான மருந்து வேண்டும் என்றால் நோயைச் சொல்லித்தான் மருந்தைக் கோரமுடியும். எதன் அடிப்படையில் ஒடுக்கப்பட்டார்களோ, அதன் அடிப்படையில் தான் தீர்வு தரவேண்டும். இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தற்காலிகமாக சான்றிதழ் கேட்கப்படுகிறது. சான்றிதழ் இருப்பதால் ஜாதி வாழவில்லை. ஜாதிச்சான்றிதழ் இல்லாத காலத்தில் தான் அதன் கொடுமைகள் அதிகம் இருந்தன. ஜாதி - சமூகத்தில் வாழ்கிறதே தவிர, சான்றிதழில் வாழவில்லை. ஜாதிச் சான்றிதழ் மட்டும் தேவையில்லை என்று சொல்லும் பலரின் வீடுகளில், திருமணங்களில், மனங்களில், சமூகத்தில் ஜாதி பெரும்பலத்துடன் கோலோச்சுகிறது. சமூகத்திலிருந்தும், சட்டரீதியாகவும் ஜாதி ஒழிக்கப்படும் போதோ, அல்லது மக்கள் மனங்களில் இருந்து ஜாதி நோய் நீங்கினாலோ ஜாதிச்சான்றிதழுக்கு அவசியமே இல்லாமல் போய்விடும்.

இப்போது முதல் கேள்விக்கு வருகிறேன்.
ஜாதிப் பெயர் மட்டுமல்ல, ஜாதியே இருக்கக் கூடாது என்பது தான் எங்கள் நோக்கம் - கொள்கை. அதற்காகத்தான் பெரியார் அரசியல் சட்டத்தைக் கொளுத்தினார். எல்லா ஜாதிப் பெயர்களும் பொது இடங்களில் பயன்படுத்தப்படக் கூடாது. வீதிகளில் உள்ள ஜாதிப் பெயர்களையே நீக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலேயே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல, அனைத்து பொது நிறுவனங்களிலும் இருக்கும் அனைத்து ஜாதிப் பெயர்களும் நீக்கப்படவேண்டும். அதற்கான கட்டம் வரும்பொழுது அது அய்யர், அய்யங்கார், தேவர், முதலியார், நாயுடு, கோனார் உள்ளிட்ட அனைத்து ஜாதிப்பெயர்களுக்கும் எதிரானதாகவே அது இருக்கும்.

அந்த சமயத்தில், மேற்கண்ட கேள்வியைக் கேட்டவர்களும் ஆர்வமுடன் அதில் பங்கேற்பார்கள். ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம்.

முக்கியக் குறிப்பு: பிராமணாள் கபே பெயர்ப்பலகை நீக்கப்பட்டது என்பது மட்டுமே எங்களுக்கு முழுமையான மகிழ்ச்சியைத் தரவில்லை! அதை அவர் ஏதேனும் நிர்ப்பந்தத்தின் காரணமாகக் கூட நீக்கியிருக்கலாம். அது எங்களுக்கு உண்மை வெற்றியல்ல. தான் செய்ததைத் தவறு என்று உணர்ந்து அவர் நீக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அந்த நாளும் வரும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கருத்துகள்

சிவக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி இது போன்ற காரணங்களை நான் அடிக்கடி மறந்து விடுவதுண்டு.
ராவணன் இவ்வாறு கூறியுள்ளார்…
பிராமணாள் என்றால் இழிவானவர்கள் என்ற கருத்தைப் பரப்புங்கள்.

பின் யாரும் பிராமணாள் என்று வரமாட்டார்.
Rev.LSD.Gladson Deva Premkumar இவ்வாறு கூறியுள்ளார்…
Bharathi Says " Jaathikal Illaiyadi Paappa.....".
மலரின் நினைவுகள் இவ்வாறு கூறியுள்ளார்…
சேவை தொடரட்டும்...
Nalliah இவ்வாறு கூறியுள்ளார்…
வானம் எனக்கொரு போதி மரம்

சாதியின் மதிப்பு அவரவர் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மாறாக ஒருவரின பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உயர்வு தாழ்வை மட்டுமே அறிவிப்பதும் விளம்பரப்படுத்துவதும் கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.

சாதியைச் வெறும் அடையாளத்துக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றது எனக் கருதிவிட முடியாது. பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம். ஏன் என்றால் பிரபாகரன் என பெயர் வைத்துக்கொண்டாலும் பிரபாகரன் அம்பட்டன் என்றோ பிரபாகரன் நளவன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.

தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விரும்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விளம்பரப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் காரணம் . ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.

பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக சில்பா செட்டி, முகேஸ் சர்மா, ரேணுகா ஐயர் போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த சாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.

இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு சென்னையிலோ அல்லது மதுரையிலோ வாடகைக்கு எடுக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் ஐயர் என்றோ, மீரா சர்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குலுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?

அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது?

நல்லையா தயாபரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam