”மணி ஏழரை ஆயிடுச்சு! எட்டு மணிக்குள்ள பில் கட்டியாகணும். இல்லைன்னா எனக்கு கால் பண்றது கஷ்டமாயிடும்” என்று அக்கா புலம்பிய காரணத்தால், கலையை இழுத்துப் போட்டுக் கொண்டு மாண்டியத் சாலையில் இருக்கும் ஒரு தனியார் செல் நிறுவன பணம் உறிஞ்சியகத்திற்கு சென்றேன்.
அதென்ன பணம் உறிஞ்சியகமா? சொல்கிறேன். மாத செல் கட்டணம் கட்ட சென்ற இடத்தில், ’கார்டா? கேஷா?’ என்றார்கள். வழக்கமாக ’கார்டு’ என்றால், அங்கே போய் தேய்த்துக் கொள்ளுங்கள். பணம் என்றால் இங்கே கட்டுங்கள் என்பார்கள். ஆனால் கேஷ்ன்னா அங்க தனியா ஒரு மெஷின் இருக்கும் அதில போய் கட்டிடுங்க என்றார். உண்மையில் முதல் முறையாக இப்போது அந்த இயந்திரத்தைப் பார்த்தேன். ஏ.டி.எம்-இல் பணம் எடுப்பதைப் போல ஒவ்வொரு நோட்டாக வாயில் வைத்தால் மாட்டுக்கு தீனி கொடுப்பதைப் போல சரேலென உறிஞ்சிக் கொள்கிறது. ஒரு 500 நூபாய் நோட்டை வைத்தேன். உறிஞ்சிக் கொண்டு, பெற்றுக் கொண்டதற்கான சிட்டையை நீட்டியது. கிழித்தெடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.
ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கும் போதெல்லாம், ’இதே போல பணம் கட்டுவதற்கு இடம் இல்லையல்லவா? இருந்தால் நன்றாக இருக்குமே.. அவரவர் வங்கியில் காத்திருப்பதும் குறையுமே’ என்று தோன்றும். இன்று அதே போன்றதொரு இயந்திரத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சி! பணத்தை தின்னக் கொடுத்துவிட்டு, கீழிறங்கி வந்தபோது, ஓர் இரு சக்கர வாகனத்தோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த இருவரில் ஒருவர் கேட்டார்.
“சார் பெட்ரோல் எங்க போடுறாங்க தெரியுமா?”
ஒரு கணம் விழித்தேன். இந்தக் கேள்வி எனக்குப் புதிதாயிருந்தது. ‘பெட்ரோல் பங்கில தான் போடுவாங்க’ என்று பதில் சொல்ல வாயெடுக்கும் முன், ’தண்ணியடிச்சிருக்காய்ங்களோ?’ என்று தோன்றியது. பின்னர் தான் நினைவுக்கு வந்தது - ’பெட்ரோல் கிடைப்பது சிரமமாக இருக்கிறது’ என்று தம்பி சொன்னது.
பின்னர் ஊதி ஊதி ஒரு வழியாக வண்டியை ஸ்டார்ட் செய்தவர்களுக்கு, ஆல்பர்ட் எதிரில் போடுவதாக கையைக் காண்பித்து அனுப்பினேன்.
விலையேற்றத்திற்கு முன்புவரை தட்டுப்பாடின்றி கிடைத்தது பெட்ரோல். விலையேறுவது தெரிந்ததும் வழக்கம் போல 2, 3 மணிநேரங்களை அவஸ்தையோடும் மன உளைச்சலோடும் தொலைத்து 3 லிட்டர் பெட்ரோல் போட்டு ரூ.22.50-அய் சேமித்து வந்தார்கள் நமது மத்தியதர வர்க்கத்தினர். அன்றைக்கும் அடுத்த நாளும் பற்றாக்குறை என்றால் கூட, சரி எல்லோரும் போய் போட்டதனால் என்று சொல்லலாம். இன்றும் அதே நிலைமை என்றால் என்ன அர்த்தம்?
அங்கே தான் இருக்கிறது சாமர்த்தியம். ’பெட்ரோல் விலையேறிவிட்டது விலையேறிவிட்டது’ என்ற புலம்பலைத் தடுத்து, அது பெரும் பிரச்சினையாக மக்கள் மத்தியில் எழுவதற்குள், ‘பெட்ரோல் கிடைக்கவில்லை’ என்ற நிலையை உருவாக்கினால், 100 ரூபாய் கூட தந்து ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கிக் கொள்ளும் மனநிலை தானாக உருவாகிவிடும். இப்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் செயற்கைத் தட்டுப்பாட்டிற்கு அதுதான் காரணம்.
பெட்ரோல் விலையுயர்விற்கு, இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி பெரும் காரணமாக அமைந்தது என்பதை இன்னும் மக்கள் பலர் உணர்ந்தபாடில்லை. தடாரென இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? என்பதைப் பற்றி நாம் இன்னும் உணர்ந்தபாடில்லை. ஒரு வேளை அய்.பி.எல் முடிந்துவிட்ட காரணத்தால் நேற்றிலிருந்து யோசிக்கத் தொடங்கியிருக்கலாம்.
ஞாயிறன்று கோழி வாங்கச் சென்ற தம்பி ஒரு கிலோ ரூ.180 என்று சொன்னபோது பகீரென்றது. ஏனென்றால் சென்னை வந்த பிறகு கோழியை வறுவலாகவும், மசாலாவாகவும் தட்டில் வாங்கியே பழக்கமாகிவிட்டது. கடைசியாக எனக்கு நினைவிலிருப்பது ’உரித்த கோழி’ கிலோ ரூ.54 என்ற அளவில் வாங்கியது. எப்படியும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பிருக்கலாம். 8 ஆண்டுகளுக்குள் 3 மடங்கு விலையேற்றம்! எனக்கு உறைக்கும் விலையேற்றமெல்லாம் சென்னையில் 3 ரூபாயாக இருந்த புரோட்டா இன்று அதே கடையில் 7 அல்லது 8 ரூபாயை நெருங்கியிருப்பதுதான்.
விலையேற்றமும், பொருளாதார வீழ்ச்சியும் அடுத்தடுத்த குழப்பங்களுக்கு இட்டுச் செல்லலாம். இத்தகைய நெருக்கடியைத் தான் தனது இறுதிக் காலத்தில் சோவியத் சந்தித்தது என்கிறார்கள். ஏற்கெனவே ’லைட்’டா எட்டிப் பார்க்கும் தொப்பை விழுவதற்கான சாத்தியக்கூறுகளை அலசி ஆராய்ந்ததில், மீண்டும் சைக்கிளுக்குத் தாவும் மனநிலைக்கு வந்திருக்கிறேன். அதை பெட்ரோல் விலையுயர்வு அமுலுக்குக் கொண்டுவரும் என்று கருதுகிறேன்.
நேற்று நண்பர் ஒருவர் முகநூலில் எழுதியிருந்தார். “பெட்ரோல் போடாமல், ஒரு வாரம் வண்டிகளை வீட்டில் வைத்துவிட்டு, பேருந்து, மின்சார ரயில் என்று ஏறுங்கள். பிறகு தானாக வந்து, சார் பெட்ரோல் போடலையா? என்று கூவிக் கூவி விற்பார்கள்” என்று! உண்மைதான்.
மிதிவண்டியைத் தட்டிக் கொட்டி, தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.
அதென்ன பணம் உறிஞ்சியகமா? சொல்கிறேன். மாத செல் கட்டணம் கட்ட சென்ற இடத்தில், ’கார்டா? கேஷா?’ என்றார்கள். வழக்கமாக ’கார்டு’ என்றால், அங்கே போய் தேய்த்துக் கொள்ளுங்கள். பணம் என்றால் இங்கே கட்டுங்கள் என்பார்கள். ஆனால் கேஷ்ன்னா அங்க தனியா ஒரு மெஷின் இருக்கும் அதில போய் கட்டிடுங்க என்றார். உண்மையில் முதல் முறையாக இப்போது அந்த இயந்திரத்தைப் பார்த்தேன். ஏ.டி.எம்-இல் பணம் எடுப்பதைப் போல ஒவ்வொரு நோட்டாக வாயில் வைத்தால் மாட்டுக்கு தீனி கொடுப்பதைப் போல சரேலென உறிஞ்சிக் கொள்கிறது. ஒரு 500 நூபாய் நோட்டை வைத்தேன். உறிஞ்சிக் கொண்டு, பெற்றுக் கொண்டதற்கான சிட்டையை நீட்டியது. கிழித்தெடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.
ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கும் போதெல்லாம், ’இதே போல பணம் கட்டுவதற்கு இடம் இல்லையல்லவா? இருந்தால் நன்றாக இருக்குமே.. அவரவர் வங்கியில் காத்திருப்பதும் குறையுமே’ என்று தோன்றும். இன்று அதே போன்றதொரு இயந்திரத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சி! பணத்தை தின்னக் கொடுத்துவிட்டு, கீழிறங்கி வந்தபோது, ஓர் இரு சக்கர வாகனத்தோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த இருவரில் ஒருவர் கேட்டார்.
“சார் பெட்ரோல் எங்க போடுறாங்க தெரியுமா?”
ஒரு கணம் விழித்தேன். இந்தக் கேள்வி எனக்குப் புதிதாயிருந்தது. ‘பெட்ரோல் பங்கில தான் போடுவாங்க’ என்று பதில் சொல்ல வாயெடுக்கும் முன், ’தண்ணியடிச்சிருக்காய்ங்களோ?’ என்று தோன்றியது. பின்னர் தான் நினைவுக்கு வந்தது - ’பெட்ரோல் கிடைப்பது சிரமமாக இருக்கிறது’ என்று தம்பி சொன்னது.
பின்னர் ஊதி ஊதி ஒரு வழியாக வண்டியை ஸ்டார்ட் செய்தவர்களுக்கு, ஆல்பர்ட் எதிரில் போடுவதாக கையைக் காண்பித்து அனுப்பினேன்.
விலையேற்றத்திற்கு முன்புவரை தட்டுப்பாடின்றி கிடைத்தது பெட்ரோல். விலையேறுவது தெரிந்ததும் வழக்கம் போல 2, 3 மணிநேரங்களை அவஸ்தையோடும் மன உளைச்சலோடும் தொலைத்து 3 லிட்டர் பெட்ரோல் போட்டு ரூ.22.50-அய் சேமித்து வந்தார்கள் நமது மத்தியதர வர்க்கத்தினர். அன்றைக்கும் அடுத்த நாளும் பற்றாக்குறை என்றால் கூட, சரி எல்லோரும் போய் போட்டதனால் என்று சொல்லலாம். இன்றும் அதே நிலைமை என்றால் என்ன அர்த்தம்?
அங்கே தான் இருக்கிறது சாமர்த்தியம். ’பெட்ரோல் விலையேறிவிட்டது விலையேறிவிட்டது’ என்ற புலம்பலைத் தடுத்து, அது பெரும் பிரச்சினையாக மக்கள் மத்தியில் எழுவதற்குள், ‘பெட்ரோல் கிடைக்கவில்லை’ என்ற நிலையை உருவாக்கினால், 100 ரூபாய் கூட தந்து ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கிக் கொள்ளும் மனநிலை தானாக உருவாகிவிடும். இப்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் செயற்கைத் தட்டுப்பாட்டிற்கு அதுதான் காரணம்.
பெட்ரோல் விலையுயர்விற்கு, இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி பெரும் காரணமாக அமைந்தது என்பதை இன்னும் மக்கள் பலர் உணர்ந்தபாடில்லை. தடாரென இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? என்பதைப் பற்றி நாம் இன்னும் உணர்ந்தபாடில்லை. ஒரு வேளை அய்.பி.எல் முடிந்துவிட்ட காரணத்தால் நேற்றிலிருந்து யோசிக்கத் தொடங்கியிருக்கலாம்.
ஞாயிறன்று கோழி வாங்கச் சென்ற தம்பி ஒரு கிலோ ரூ.180 என்று சொன்னபோது பகீரென்றது. ஏனென்றால் சென்னை வந்த பிறகு கோழியை வறுவலாகவும், மசாலாவாகவும் தட்டில் வாங்கியே பழக்கமாகிவிட்டது. கடைசியாக எனக்கு நினைவிலிருப்பது ’உரித்த கோழி’ கிலோ ரூ.54 என்ற அளவில் வாங்கியது. எப்படியும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பிருக்கலாம். 8 ஆண்டுகளுக்குள் 3 மடங்கு விலையேற்றம்! எனக்கு உறைக்கும் விலையேற்றமெல்லாம் சென்னையில் 3 ரூபாயாக இருந்த புரோட்டா இன்று அதே கடையில் 7 அல்லது 8 ரூபாயை நெருங்கியிருப்பதுதான்.
விலையேற்றமும், பொருளாதார வீழ்ச்சியும் அடுத்தடுத்த குழப்பங்களுக்கு இட்டுச் செல்லலாம். இத்தகைய நெருக்கடியைத் தான் தனது இறுதிக் காலத்தில் சோவியத் சந்தித்தது என்கிறார்கள். ஏற்கெனவே ’லைட்’டா எட்டிப் பார்க்கும் தொப்பை விழுவதற்கான சாத்தியக்கூறுகளை அலசி ஆராய்ந்ததில், மீண்டும் சைக்கிளுக்குத் தாவும் மனநிலைக்கு வந்திருக்கிறேன். அதை பெட்ரோல் விலையுயர்வு அமுலுக்குக் கொண்டுவரும் என்று கருதுகிறேன்.
நேற்று நண்பர் ஒருவர் முகநூலில் எழுதியிருந்தார். “பெட்ரோல் போடாமல், ஒரு வாரம் வண்டிகளை வீட்டில் வைத்துவிட்டு, பேருந்து, மின்சார ரயில் என்று ஏறுங்கள். பிறகு தானாக வந்து, சார் பெட்ரோல் போடலையா? என்று கூவிக் கூவி விற்பார்கள்” என்று! உண்மைதான்.
மிதிவண்டியைத் தட்டிக் கொட்டி, தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.
கருத்துகள்