முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சார் பெட்ரோல் எங்க போடுறாங்க தெரியுமா?

”மணி ஏழரை ஆயிடுச்சு! எட்டு மணிக்குள்ள பில் கட்டியாகணும். இல்லைன்னா எனக்கு கால் பண்றது கஷ்டமாயிடும்” என்று அக்கா புலம்பிய காரணத்தால், கலையை இழுத்துப் போட்டுக் கொண்டு மாண்டியத் சாலையில் இருக்கும் ஒரு தனியார் செல் நிறுவன பணம் உறிஞ்சியகத்திற்கு சென்றேன்.

அதென்ன பணம் உறிஞ்சியகமா? சொல்கிறேன். மாத செல் கட்டணம் கட்ட சென்ற இடத்தில், ’கார்டா? கேஷா?’ என்றார்கள். வழக்கமாக ’கார்டு’ என்றால், அங்கே போய் தேய்த்துக் கொள்ளுங்கள். பணம் என்றால் இங்கே கட்டுங்கள் என்பார்கள். ஆனால் கேஷ்ன்னா அங்க தனியா ஒரு மெஷின் இருக்கும் அதில போய் கட்டிடுங்க என்றார். உண்மையில் முதல் முறையாக இப்போது அந்த இயந்திரத்தைப் பார்த்தேன். ஏ.டி.எம்-இல் பணம் எடுப்பதைப் போல ஒவ்வொரு நோட்டாக வாயில் வைத்தால் மாட்டுக்கு தீனி கொடுப்பதைப் போல சரேலென உறிஞ்சிக் கொள்கிறது. ஒரு 500 நூபாய் நோட்டை வைத்தேன். உறிஞ்சிக் கொண்டு, பெற்றுக் கொண்டதற்கான சிட்டையை நீட்டியது. கிழித்தெடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கும் போதெல்லாம், ’இதே போல பணம் கட்டுவதற்கு இடம் இல்லையல்லவா? இருந்தால் நன்றாக இருக்குமே.. அவரவர் வங்கியில் காத்திருப்பதும் குறையுமே’ என்று தோன்றும். இன்று அதே போன்றதொரு இயந்திரத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சி! பணத்தை தின்னக் கொடுத்துவிட்டு, கீழிறங்கி வந்தபோது, ஓர் இரு சக்கர வாகனத்தோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த இருவரில் ஒருவர் கேட்டார்.

“சார் பெட்ரோல் எங்க போடுறாங்க தெரியுமா?”

ஒரு கணம் விழித்தேன். இந்தக் கேள்வி எனக்குப் புதிதாயிருந்தது. ‘பெட்ரோல் பங்கில தான் போடுவாங்க’ என்று பதில் சொல்ல வாயெடுக்கும் முன், ’தண்ணியடிச்சிருக்காய்ங்களோ?’ என்று தோன்றியது. பின்னர் தான் நினைவுக்கு வந்தது - ’பெட்ரோல் கிடைப்பது சிரமமாக இருக்கிறது’ என்று தம்பி சொன்னது.

பின்னர் ஊதி ஊதி ஒரு வழியாக வண்டியை ஸ்டார்ட் செய்தவர்களுக்கு, ஆல்பர்ட் எதிரில் போடுவதாக கையைக் காண்பித்து அனுப்பினேன்.

விலையேற்றத்திற்கு முன்புவரை தட்டுப்பாடின்றி கிடைத்தது பெட்ரோல். விலையேறுவது தெரிந்ததும் வழக்கம் போல 2, 3 மணிநேரங்களை அவஸ்தையோடும் மன உளைச்சலோடும் தொலைத்து 3 லிட்டர் பெட்ரோல் போட்டு ரூ.22.50-அய் சேமித்து வந்தார்கள் நமது மத்தியதர வர்க்கத்தினர். அன்றைக்கும் அடுத்த நாளும் பற்றாக்குறை என்றால் கூட, சரி எல்லோரும் போய் போட்டதனால் என்று சொல்லலாம். இன்றும் அதே நிலைமை என்றால் என்ன அர்த்தம்?

அங்கே தான் இருக்கிறது சாமர்த்தியம். ’பெட்ரோல் விலையேறிவிட்டது விலையேறிவிட்டது’ என்ற புலம்பலைத் தடுத்து, அது பெரும் பிரச்சினையாக மக்கள் மத்தியில் எழுவதற்குள், ‘பெட்ரோல் கிடைக்கவில்லை’ என்ற நிலையை உருவாக்கினால், 100 ரூபாய் கூட தந்து ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கிக் கொள்ளும் மனநிலை தானாக உருவாகிவிடும். இப்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் செயற்கைத் தட்டுப்பாட்டிற்கு அதுதான் காரணம்.

பெட்ரோல் விலையுயர்விற்கு, இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி பெரும் காரணமாக அமைந்தது என்பதை இன்னும் மக்கள் பலர் உணர்ந்தபாடில்லை. தடாரென இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? என்பதைப் பற்றி நாம் இன்னும் உணர்ந்தபாடில்லை. ஒரு வேளை அய்.பி.எல் முடிந்துவிட்ட காரணத்தால் நேற்றிலிருந்து யோசிக்கத் தொடங்கியிருக்கலாம்.

ஞாயிறன்று கோழி வாங்கச் சென்ற தம்பி ஒரு கிலோ ரூ.180 என்று சொன்னபோது பகீரென்றது. ஏனென்றால் சென்னை வந்த பிறகு கோழியை வறுவலாகவும், மசாலாவாகவும் தட்டில் வாங்கியே பழக்கமாகிவிட்டது. கடைசியாக எனக்கு நினைவிலிருப்பது ’உரித்த கோழி’ கிலோ ரூ.54 என்ற அளவில் வாங்கியது. எப்படியும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பிருக்கலாம். 8 ஆண்டுகளுக்குள் 3 மடங்கு விலையேற்றம்! எனக்கு உறைக்கும் விலையேற்றமெல்லாம் சென்னையில் 3 ரூபாயாக இருந்த புரோட்டா இன்று அதே கடையில் 7 அல்லது 8 ரூபாயை நெருங்கியிருப்பதுதான்.

விலையேற்றமும், பொருளாதார வீழ்ச்சியும் அடுத்தடுத்த குழப்பங்களுக்கு இட்டுச் செல்லலாம். இத்தகைய நெருக்கடியைத் தான் தனது இறுதிக் காலத்தில் சோவியத் சந்தித்தது என்கிறார்கள். ஏற்கெனவே ’லைட்’டா எட்டிப் பார்க்கும் தொப்பை விழுவதற்கான சாத்தியக்கூறுகளை அலசி ஆராய்ந்ததில், மீண்டும் சைக்கிளுக்குத் தாவும் மனநிலைக்கு வந்திருக்கிறேன். அதை பெட்ரோல் விலையுயர்வு அமுலுக்குக் கொண்டுவரும் என்று கருதுகிறேன்.
நேற்று நண்பர் ஒருவர் முகநூலில் எழுதியிருந்தார். “பெட்ரோல் போடாமல், ஒரு வாரம் வண்டிகளை வீட்டில் வைத்துவிட்டு, பேருந்து, மின்சார ரயில் என்று ஏறுங்கள். பிறகு தானாக வந்து, சார் பெட்ரோல் போடலையா? என்று கூவிக் கூவி விற்பார்கள்” என்று! உண்மைதான்.


மிதிவண்டியைத் தட்டிக் கொட்டி, தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam