முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வடக்கின் வசந்தத்தில் வீரமணியா?

ஸ்ரீலங்கா அரசின் கொலைவெறித் தாக்குதல்களுக்குப் பிறகு உலகை ஏமாற்றவும், மீள்கட்டமைப்புப் பணி லாபத்தில் உலகிற்கு பங்கு கொடுக்கவும், உருவாக்கப்பட்டுள்ள வடக்கின் வசந்தம் திட்டத்தை தொடக்கம் முதலே திராவிடர் கழகம் எதிர்த்து வந்திருக்கிறது. போராளிகளுக்கான களமாக, பாசறையாக காடுகள் இருப்பதால் அவற்றையும் அழிக்கும் பணியில் ஈடுபடவுமே இந்தத் திட்டம் என்பதையும் தோலுரித்துவருகிறது.

இந்நிலையில், பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம், தனது மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக ஒப்பந்தம் போட்டுள்ள எண்ணற்ற நிறுவனங்களில் ஒன்றான CIDC -யும், வடக்கின் வசந்தம் திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது என்ற செய்தி வெளியானது. எந்தக் காலத்திலும் தமிழர்களின் நலனுக்கு எதிரான எதனையும் எதிர்க்கத் தயங்காதது திராவிடர் கழகமும், அதன் தலைவர் மானமிகு அய்யா வீரமணி அவர்களும் ஆவார்கள்.

ஆனால் எதை வைத்து இவரை குறை சொல்ல முடியும் என்ற கண்கொண்டு அலையும் கும்பலுக்கு இதெல்லாம் தெரியப்போவதில்லையே... இதோ கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி "விடுதலை" ஞாயிறு மலரில் ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளார் தமிழர் தலைவர் கி.வீரமணி. குதர்க்கம் மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்களுக்காக அல்ல.... உண்மையான அக்கறையுடையோருக்காக இங்கே அந்தக் கேள்வி பதிலை அப்படியே தருகிறோம். படித்துத் தெளியட்டும்!

கேள்வி: இலங்கையில் வடக்கில் வசந்தம் திட்டத்தில் உள்ள இந்தியக் கட்டுமானக் குழுமத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையா?

- தஞ்சை சேகரன்

பதில்: பொதுவான இந்திய தொழில் தேசிய கட்டுமான அமைப்பில் நாடு தழுவிய அளவில் பல நிறுவனங்கள் பல்கலைக் கழகங்களில் (சிவில் கட்டடப் பணிகளுக்குப் பயிற்சி தருவதற்கு) புரிந்-துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதில் நமது பெரியார் _ மணியம்மை பல்கலைக் கழகமும் ஒன்று.

வடக்கில் வசந்தம் என்ற திட்டத்தினை இந்தியக் கட்டுமானக் குழுமம் செய்ய உள்ளது என்பதை அறிந்த நிலையிலேயே நமது துணைவேந்தர், இலங்கையில் தற்போதுள்ள தமிழர்களின் பரிதாப நிலையில், எங்கள் நிறுவனம் பங்கேற்க இயலாது; என்று திட்டவட்டமான பதிலை அந்த குழுமத் தலை-வருக்கே பல நாள்களுக்குமுன்பே அனுப்பி விட்-டார்கள். உலகின் பற்பல நாடுகளிலிருந்து கட்டுமானம் செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் அது என்றாலும்-கூட இலங்கைத் திட்டத்தில் பெரியார் - _ மணியம்மை பல்கலைக் கழகம் ஈடுபடாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

கனவில்கூட ஈழத் தமிழருக்கு எதிரான நிலையை எடுத்திடுமா நமது அமைப்புகள்?

குறிப்பு: ஈரோட்டுக் கண்ணாடி என்பது கூர்ந்த அறிவின் அடையாளம்; நுண்ணோக்குதலுக்கான ஒப்பீடு...

ஈரோட்டில் ஏதோ ஒரு ஆப்டிகல் கடையில் வாங்கி அணியும் கண்ணாடியல்ல... பெயர் வைத்துக் கொள்வது பெரிதல்ல... அதற்கான குறைந்தபட்ச அறிவும், அறிவு நாணயமும் வேண்டும். ஆசிரியர் அவர்களைக் குறைகூறுவதற்கென்றே, வசை பாடுவதற்கென்றே, ஆபாச சொல்லாடல்களால் அர்ச்சனை செய்வதற்கென்றே பிளாக்ஸ்பாட் நடத்துவோருக்கெல்லாம் 'ஈரோட்டுக் கண்ணாடி' என்று சொல்வதற்கு அருகதையே கிடையாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam