நான் அடிக்கடி சொல்வதுண்டு. இன்று புலர்ந்தபோது கூட அருகில் இருந்த தம்பியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இன்னும் "இளமை இதோ இதோ" பாடலை அடித்துக் கொள்ள ஒரு பாட்டு வரவில்லை என்று! அதே போன்று ஒரு தொகுப்பையே பதிவு செய்திருக்கிறார் நண்பர் Muralikannan Rengarajan.
நிறைய முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால், இளமை இதோ... தான் இன்னும் இளமையுடன்! இவ்வளவுக்கும் அப்பாடலின் தொடக்கத்தில் வரும் "ஹாய் எவ்ரி படி... விஷ் யூ ஹேப்பி நியு இயர்" என்ற வரிகளைத் தவிர புத்தாண்டுக்கும் அப்பாடலுக்கும் யாதொரு தொடர்பும் இருக்காது; கமல்ஹாசனின் பெருமை பேசும் பாடலாகத் தான் அது இருக்கும். ஓரிடத்தில் 'இந்தியிலும் பாடுவேன்' என்று எஸ்.பி.பி.யின் பெருமையும் உள்ளே வரும். ஆனாலும் நம் மனதில் அப்பாடல் நின்று நிலைப்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் என்பது சிந்திக்கத்தக்கது.
ராஜாவின் துள்ளலான அதன் இசை அதற்கு முக்கியக் காரணம். பாடல் எங்கும் பாடுபவர் உற்சாகம் கொள்ளத்தக்க பாவனைகள் வெளிப்படும் (யார் பாடினாலும்). பைக், ஸ்கேட்டிங், டார்ஜான் மாதிரி கயிற்றில் தொங்குதல், ஆடுதல், ஒடுதல், தாவுதல் என்று அத்தனை குரங்குச் சேட்டைகளும் பாடலில் இருக்கும். பாடுபவர் தன்னை சகலகலா வல்லவன் என்று கருதிக் கொள்ளும் வாய்ப்பை அப்பாடல் தரும். இன்னும் நிறைய இருக்கு!
வருங்காலம் குறித்த கனவுகளை விதைத்த ஆண்டே நூற்றாண்டே, நல்லோருக்கு வாழ்த்துச் சொன்ன சங்கிலி படப் பாடல்களையெல்லாம் தாண்டி 'இளமை' நிலைப்பதற்கு இதெல்லாமும் காரணம். ஒருமுறை பாட்டோடு சேர்ந்து பாடிப் பாருங்கள்... உங்களுக்கும் புரியும்!!
பின்னிணைப்பு -1
முரளிகண்ணன் பதிவு
https://www.facebook.com/muralikannan6/posts/541416815953760
இந்த ஆண்டும் புத்தாண்டுக்கு இளமை இதோ இதோ தானா என பலர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். சிவாஜி கணேசன் நடித்த சங்கிலி (பிரபுக்கு அறிமுகப் படம்) படத்தில் ஒரு நல்ல நியூ இயர் பாடல் உள்ளது. நமக்காக நன்மைக்காக எனத் தொடங்கும் பாடல். முகவரியில் வரும் ஆண்டே நூற்றாண்டே பாடலில் நூற்றாண்டு வராமல் இருந்தால் அதை உபயோகிக்கலாம்.
முன்பெல்லாம் கல்லூரி பேர்வெல் பார்ட்டிகளில் ரத்தத்திலகத்தில் வரும் பசுமை நிறைந்த நினைவுகளே பாடல் தான் ஒலிக்கும். அதை ரஹ்மானின் முஸ்தபா முறியடித்தது. அதுபோல இளமை இதோ இதோவை முறியடிக்க ரஹ்மான் தான் மனது வைக்க வேண்டும்.
அதேபோல் கல்யாண வீடுகளில் பெண் அழைப்புக்கு மணமகளே மருமகளே வா உன் வலது காலை எடுத்து வைத்து வா என்னும் சாரதா படப் பாடல்தான் ஆட்சி புரிகிறது. தேவர்மகனில் வரும் மணமகளே மருமகளே பாடலுக்கு இன்னும் அங்கீகாரம் கிட்டவில்லை. திருமணம் முடிந்ததும் பணக்காரனில் வரும் நூறு வருஷம் பாட்டே இன்னும் போடப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு கூட மகாநதியின் தை பொங்கலும் பொங்குது பாடலுக்கு அடுத்து ஏதும் வரவில்லை.
இப்போது மதுரை வட்டாரங்களில் முதலாமாண்டு மற்றும் தொடர்ந்த ஆண்டுகளில் கண்ணீர் அஞ்சலிக்கு லோக்கல் கேபிளில் விளம்பரம் கொடுக்கிறார்கள். வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி. தேம்புதய்யா பாவம் தேவர்களின் பூமி என்ற பாடல் பிண்ணனியாக ஒலிக்க.
பின்னிணைப்பு -2
நல்லோர்கள் வாழ்வை...
http://www.youtube.com/watch?v=VvffL2njuCc
நிறைய முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால், இளமை இதோ... தான் இன்னும் இளமையுடன்! இவ்வளவுக்கும் அப்பாடலின் தொடக்கத்தில் வரும் "ஹாய் எவ்ரி படி... விஷ் யூ ஹேப்பி நியு இயர்" என்ற வரிகளைத் தவிர புத்தாண்டுக்கும் அப்பாடலுக்கும் யாதொரு தொடர்பும் இருக்காது; கமல்ஹாசனின் பெருமை பேசும் பாடலாகத் தான் அது இருக்கும். ஓரிடத்தில் 'இந்தியிலும் பாடுவேன்' என்று எஸ்.பி.பி.யின் பெருமையும் உள்ளே வரும். ஆனாலும் நம் மனதில் அப்பாடல் நின்று நிலைப்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் என்பது சிந்திக்கத்தக்கது.
ராஜாவின் துள்ளலான அதன் இசை அதற்கு முக்கியக் காரணம். பாடல் எங்கும் பாடுபவர் உற்சாகம் கொள்ளத்தக்க பாவனைகள் வெளிப்படும் (யார் பாடினாலும்). பைக், ஸ்கேட்டிங், டார்ஜான் மாதிரி கயிற்றில் தொங்குதல், ஆடுதல், ஒடுதல், தாவுதல் என்று அத்தனை குரங்குச் சேட்டைகளும் பாடலில் இருக்கும். பாடுபவர் தன்னை சகலகலா வல்லவன் என்று கருதிக் கொள்ளும் வாய்ப்பை அப்பாடல் தரும். இன்னும் நிறைய இருக்கு!
வருங்காலம் குறித்த கனவுகளை விதைத்த ஆண்டே நூற்றாண்டே, நல்லோருக்கு வாழ்த்துச் சொன்ன சங்கிலி படப் பாடல்களையெல்லாம் தாண்டி 'இளமை' நிலைப்பதற்கு இதெல்லாமும் காரணம். ஒருமுறை பாட்டோடு சேர்ந்து பாடிப் பாருங்கள்... உங்களுக்கும் புரியும்!!
பின்னிணைப்பு -1
முரளிகண்ணன் பதிவு
https://www.facebook.com/muralikannan6/posts/541416815953760
இந்த ஆண்டும் புத்தாண்டுக்கு இளமை இதோ இதோ தானா என பலர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். சிவாஜி கணேசன் நடித்த சங்கிலி (பிரபுக்கு அறிமுகப் படம்) படத்தில் ஒரு நல்ல நியூ இயர் பாடல் உள்ளது. நமக்காக நன்மைக்காக எனத் தொடங்கும் பாடல். முகவரியில் வரும் ஆண்டே நூற்றாண்டே பாடலில் நூற்றாண்டு வராமல் இருந்தால் அதை உபயோகிக்கலாம்.
முன்பெல்லாம் கல்லூரி பேர்வெல் பார்ட்டிகளில் ரத்தத்திலகத்தில் வரும் பசுமை நிறைந்த நினைவுகளே பாடல் தான் ஒலிக்கும். அதை ரஹ்மானின் முஸ்தபா முறியடித்தது. அதுபோல இளமை இதோ இதோவை முறியடிக்க ரஹ்மான் தான் மனது வைக்க வேண்டும்.
அதேபோல் கல்யாண வீடுகளில் பெண் அழைப்புக்கு மணமகளே மருமகளே வா உன் வலது காலை எடுத்து வைத்து வா என்னும் சாரதா படப் பாடல்தான் ஆட்சி புரிகிறது. தேவர்மகனில் வரும் மணமகளே மருமகளே பாடலுக்கு இன்னும் அங்கீகாரம் கிட்டவில்லை. திருமணம் முடிந்ததும் பணக்காரனில் வரும் நூறு வருஷம் பாட்டே இன்னும் போடப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு கூட மகாநதியின் தை பொங்கலும் பொங்குது பாடலுக்கு அடுத்து ஏதும் வரவில்லை.
இப்போது மதுரை வட்டாரங்களில் முதலாமாண்டு மற்றும் தொடர்ந்த ஆண்டுகளில் கண்ணீர் அஞ்சலிக்கு லோக்கல் கேபிளில் விளம்பரம் கொடுக்கிறார்கள். வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி. தேம்புதய்யா பாவம் தேவர்களின் பூமி என்ற பாடல் பிண்ணனியாக ஒலிக்க.
பின்னிணைப்பு -2
நல்லோர்கள் வாழ்வை...
http://www.youtube.com/watch?v=VvffL2njuCc
கருத்துகள்
'இந்தியிலும் பாடுவேன்' என்ற வரிகூட ஒருவகையில் கமலின் பெருமை தான்... அடுத்த வரியில் ஏக் துஜே கேலியே என்று வருகிறதே...
தேவர்மகனில் வரும் மணமகளே மருமகளே பாடல் கொஞ்சம் சோக இசை கலந்திருக்கும் என்பதால் அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கிறேன்...