முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதிதாக 'புத்தகம் வெளியிட விரும்புவோர்' கவனத்துக்குச் சில...

புதிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள் பலர் எழுத்தாற்றல் மிகுதியினாலும், எழுத்தார்வம் மிகுதியினாலும், புகழ் ஆசை மிகுதியினாலும் கூட புத்தகம் போடுவதைப் பார்க்கிறோம். ஏராளமான கவிதைப் புத்தகங்கள், தன் வரலாற்றுப் புத்தகங்கள், தங்களுக்குத் தோன்றிய, இதுவரை எவரும் சொல்லாத (என்று தாங்களே கருதிக் கொள்ளும்) 'அரிய' கருத்துகளை எழுதியே தீருவேன் என்று அடம்பிடிப்போர் எழுதும் புத்தகங்கள் போன்றவற்றையும் கண்டு வருகிறோம். இவற்றுக்கு மத்தியில் நல்ல கருத்துகளடங்கிய புத்தகங்களும் அரிதாக வரக் காண்கிறோம். நண்பர்கள், தெரிந்தோர் என்பதற்காக வாங்கிவிடுவோம் - படிப்போமா என்பது தெரியாது. எப்படியாயினும் எந்தக் கருத்தையும் வெளியிடுவதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. காலப் போக்கில் அப்படி எழுதுவோரில் பலர் நன்கு தேறி வரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, முதல் சில முயற்சிகளை, அவர்களுக்கான பயிற்சியாக நாம் கருதலாம், தவறில்லை. கடந்த பல்லாண்டுகளாகவே என் பள்ளித் தோழர்கள் தொடங்கி, இணையத் தோழர்கள், தந்தையின் நண்பர்கள் வரை தங்கள் எழுத்துகளைப் புத்தகமாக்க வேண்டும் என்ற ஆர்வமுடையோர் பலரும், தொடர்ந்து வாசிக்க விரும்புபவ

உனைத் துளைத்த குண்டுகள்...

உலகப் போராளியாக   சே உருவான நாளின்   பொன் விழா இன்று! ஒடுக்கப்பட்டோருக்கான குரலில் அடக்குமுறைக்கு எதிரான உணர்வில் விடுதலைக்கான பெரு விருப்பத்தில் என்றும் நீ வாழ்கிறாய் சே! அமெரிக்கா   தனக்குத் தானே   வைத்துக் கொண்ட தற்கொலைக் குண்டு   நீ! உனைத் துளைத்த குண்டுகள்   பலவாய்ப் பெருகி ஆதிக்கத்தின்   அடிப்பீடத்தைத்   தகர்க்கும்! உன் போராட்ட   இருப்பை அன்றைய தகர்ப்பு நிகர்க்கும்!