முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனமான நடிகருக்கு வீரவணக்கம்!!

”எருமைக்குப் பிறந்திருக்கும் கன்றும் கூட இனத்திற்கோர் இடர் வந்தால் எம்பிப் பாயும் எறும்பொன்றை அறியாமல் நாம் மிதித்தால் இறப்புக்கும் அஞ்சாமல் அது கடிக்கும் - அந்த எருமைக்கும் எறும்புக்கும் கூட உள்ள இனமானம் தன்மானம் உனக்கேன் இல்லை... தமிழா! இன உணர்வு கொள்!” என்ற நிறைவு வரிகளோடு தன் இரண்டு மணிநேரப் பேச்சை அவர் முடிக்கும் போது, ஒட்டுமொத்தக் கூட்டமும் பெறும் உணர்வு எழுச்சியானது. கரகரப்பான அந்தக் குரல் ‘இனமான நடிகர்’ அய்யா எம்.ஏ.கிரிதரன் அவர்களுடையது! மேடைப் பேச்சாளராகவும், குடுகுடுப்பைக்காரராகவும், மந்திரமா?தந்திரமா? நிகழ்த்துநராகவும், நாடகக் கலைஞராகவும் இயக்கத்தின் முனைப்பான பரப்புரையாளராக ஆர்வமுடன் பணியாற்றியவர். மேடை நாடகங்களைத் தயாரித்தும், நாடகங்களுக்கான போட்டியை நடத்தியும், திராவிடர் கழகக் கலைத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். தன் சொந்தக் காசைப் போட்டு கூட்டம் நடத்துபவர்களைப் பார்த்திருப்போம். ஒரு பிரச்சாகராகவும் வந்து, கூட்டம் நடத்துவதற்கான உதவியையும் செய்து, தற்புகழ்ச்சி இல்லாமல் பிரச்சாரம் செய்தவர் அய்யா கிரிதரன். தமிழர் தலைவர் ஆசிரியர் மீது மாறா பற்றுக் க