முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய தலைமுறையா? பா.ஜ.க. விளம்பரப் படையா?

புதிய தலைமுறையின் முகநூல் பக்கத்தில் கீழ்க்காணும் ”விளம்பரம்” ஒன்று வெளியாகிருந்தது. (இது பெய்டு நியூசா? இல்லை கூட்டணி நியூசா?ன்னு தெரியல)

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, 
தமிழக மீனவர்கள் மீது,
இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு
நடத்தி, ஒரு மீனவர் கொல்லப்பட்டார்.
உடனே, அன்றைய இலங்கை பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கேயை,
வாஜ்பாய் தொலைபேசியில்
அழைத்தார்.
“இனி ஒரு துப்பாக்கி தோட்டா,
இந்திய மீனவர்கள் மீது பாயுமானால்,
இலங்கைக்கான
அனைத்து பொருளாதார
உதவிகளையும் உடனடியாக
நிறுத்துவோம்’ என எச்சரித்தார்.
விளைவு, வாஜ்பாய் பிரதமராக
இருந்த வரை, தமிழக
மீனவர்களை தொட்டு பார்க்கும்
தைரியம்,
இலங்கை கடற்படைக்கு இல்லாமல்
இருந்தது.
(https://www.facebook.com/Puthiyathalaimurai.tv/posts/620858547975925:0)

வாஜ்பாய் போன் பண்ணி ரனிலை மிரட்டினாராம். ரனில் சொல்லி, உடனே இலங்கை கடற்படைக்காரனுகள்லாம் துப்பாக்கியைத் தூக்கி பேண்டுக்குள்ள சொருகிக்கிட்டாய்ங்களாம்... என்னங்கப்பா... APCO worldwide கம்பெனியோட கூட்டு எதுவும் வச்சுக்கிட்டிங்களா? அள்ளிவிடுறதில உங்களுக்கு அளவேயில்லையா?

சரி, அன்னாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு எதிர்த் திசையில் தான் இலங்கை கடற்படை துப்பாக்கியைப் பிடிச்சுக்கிட்டிருந்ததா? 

13 நாள், 13 மாதம், அப்புறம் 1999-2004 ல ஒரு 5 ஆண்டுகள் ஆட்சி செய்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் (ரனிலும் இலங்கையில் ஆட்சியிலிருந்த 2001-2004 காலத்தில்) நடந்தவற்றில் எடுத்துக்காட்டுக்கு சில சூடுகள்:

2001 மே 24 - துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயம் 
2002 ஜனவரி 24 - வேதரண்யம் மீனவர்கள் மீது ஹெலிகாப்டரில் வந்த இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
2002 மே 1 - 30 படகுகளில் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் 
2003 ஏப்ரல்  3 - நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

இப்ப எல்லாம் வாஜ்பாய் போன் என்ன அவுட் ஆஃப் ஆர்டர்-ல இருந்ததா? இல்லை... ஒரு வேளை 2004-ல ரெண்டு பேரும் தேர்தல் ல தோற்றதும் போன் பண்ணி மிர(ண்)ட்டியிருப்பாங்களோ? 

இந்த வாஜ்பாய் ஆட்சி நடந்தப்போ தான், வெற்றியின் விளிம்பில் நின்ற விடுதலைப் புலிகள் பிடித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான சிங்களப் படையினரை விடுவிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இந்தியா களத்தில் இறங்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது. சிங்களப் படையின் மிகப்பெரிய அழிவைத் தடுத்து, புலிகளின் வெற்றியில் பின்னடைவை ஏற்படுத்தியதும் இந்த உத்தமத் திலகம் வாஜ்பாய் காலத்தில் தான்.

என்னவோ, பா.ஜ.க. வந்தால் தமிழீழத்தை கேக் மாதிரி  வெட்டி கையில கொடுத்துருவாய்ங்கன்னு கிளப்புற புரளிக்கு இப்போ புதிய தலைமுறை புதுசா ஒரு கதை கட்டுது... அவ்ளோதான்! 

கருத்துகள்

MUTHU இவ்வாறு கூறியுள்ளார்…
இணையத்தை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் இன்று இணையம் அரசியல் வாதிகளை பற்றி பொய்யான கற்பனை செய்திகளை மக்கள் நம்பும் படி கூறவே பயன்படுகின்றது. எத்தனை பேர் அதில் உள்ள உண்மைகளை கண்டுகொள்கிறார்கள். இணையத்திலே பாத்தேன் உண்மையாகத்தான் இருக்கும் என்று பொய்யை நம்பி நம் ஓட்டையும் அநியாயமாக ஏமாந்து தந்துவிட்டுவிடுகிறோம்.
MUTHU இவ்வாறு கூறியுள்ளார்…
இணையத்தை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் இன்று இணையம் அரசியல் வாதிகளை பற்றி பொய்யான கற்பனை செய்திகளை மக்கள் நம்பும் படி கூறவே பயன்படுகின்றது. எத்தனை பேர் அதில் உள்ள உண்மைகளை கண்டுகொள்கிறார்கள். இணையத்திலே பாத்தேன் உண்மையாகத்தான் இருக்கும் என்று பொய்யை நம்பி நம் ஓட்டையும் அநியாயமாக ஏமாந்து தந்துவிட்டுவிடுகிறோம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டாரா பெரியார்? உண்மை என்ன?

இதைத் தான் அயோக்கியத்தனம் என்கிறோம். எதை? குறளை பெரியார் மலத்துடன் ஒப்பிட்டார்... இதோ ஆதாரம் என்றார்கள்.  எது? இது தான் அது!  "வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா என்று பதில் கூறுவேன்."  பார்த்தியா... பார்த்தியா... இதைத்தான் சொன்னோம்னு குதிச்ச கூமுட்டைகள், கூமுட்டைகள் சொல்லுக்குக் குட்டிக்கரணம் போட்ட கூறுகெட்டதுகள் எல்லோரையும் நாம் கேட்டுக் கொள்வது, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள் என்பது தான். அவ்வளவு வேண்டாம்... அதற்கு முன்னேபின்னே என்ன சொல்லியிருக்கிறார்.. அதைப் படித்தாலே புரியும் அவரது நேர்மைத் திறம்கொண்ட பார்வை!  பெரியாருக்குப் பொழிப்புரை, தெளிவுரையெல்லாம் தேவையில்லை. இதோ பெரியார் பேசுகிறார்... கேளுங்கள்! "மக்களுக்கும் நான் குறள் பற்றி பேசுவது மிகுந்த ஆச்சரியமாய் இருக்க...