இதைத் தான் அயோக்கியத்தனம் என்கிறோம். எதை?
குறளை பெரியார் மலத்துடன் ஒப்பிட்டார்... இதோ ஆதாரம் என்றார்கள்.
எது?
இது தான் அது!
"வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா என்று பதில் கூறுவேன்."
பார்த்தியா... பார்த்தியா... இதைத்தான் சொன்னோம்னு குதிச்ச கூமுட்டைகள், கூமுட்டைகள் சொல்லுக்குக் குட்டிக்கரணம் போட்ட கூறுகெட்டதுகள் எல்லோரையும் நாம் கேட்டுக் கொள்வது, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள் என்பது தான். அவ்வளவு வேண்டாம்... அதற்கு முன்னேபின்னே என்ன சொல்லியிருக்கிறார்.. அதைப் படித்தாலே புரியும் அவரது நேர்மைத் திறம்கொண்ட பார்வை! பெரியாருக்குப் பொழிப்புரை, தெளிவுரையெல்லாம் தேவையில்லை. இதோ பெரியார் பேசுகிறார்... கேளுங்கள்!
"மக்களுக்கும் நான் குறள் பற்றி பேசுவது மிகுந்த ஆச்சரியமாய் இருக்கிறது. நானும் எந்தப் புராணங்களைக் கொண்டு வந்தாலும், மதக் கருத்துக்களைச் சொன்னாலும் அவைகளையெல்லாம் தயவு தாட்சண்யம் இல்லாமல் இதுவரை கண்டித்தே வந்திருக்கிறேன். அது எனக்குப் பழக்கம். 10, 20 வருடங்களாகத்தான் இவைகள் நமக்கு, திராவிடர்களுக்கு விரோதமான நூல்கள், திராவிட மக்களை இழிவுபடுத்தும், அவர்களை நாலாஞ்ஜாதி மக்களாய், சூத்திரர்களாய் என்றென்றும் வைத்திருப்பதற்கு ஆக ஏற்படுத்தப்பட்டிருக்கும் நூல்கள் என்று கூறி எல்லா நூல்களையும், கண்டித்து வருகிறேன். அதற்கு முன்னும் நான் இந்த புண்ணிய நூல்கள் என்று நம் மக்கள் கருதும் நூல்களையெல்லாம் கண்டித்து குறை கூறிவந்தேன். அப்போதெல்லாம் திராவிட மக்களை இழிவுபடுத்தும் நூல்கள் என்று கருதி கூறாவிட்டாலும், அறிவுக்கு ஒவ்வாத சங்கதிகளை உடையதாக இருக்கிறது என்று கண்டித்து வந்தேன்.
வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா என்று பதில் கூறுவேன்.
ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக் கூடாது என்று கருதி அந்தப்படியாகவே பிரச்சாரம் புரிந்து வந்தேன். பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு அறிவாளிகள் என்றால் பண்டிதர்களோடு அல்ல பொது அறிவு மக்களோடு திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குறளின் மேன்மைபற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள். நான் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே என்று கேட்டேன். அது பரிமேலழகரின் உரை, அது குறளாசிரியர் கருத்தல்ல என்று எடுத்துக்கூறி உண்மை உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாஸ்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக்காட்டினார்கள்.
அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றி பேசுகிறேன்.
அதுவும் அதையே ஆதாரமாக, அத்தாரிடேவ் எடுத்துக் கொண்டு அல்ல; நான் சொல்லுகிற கருத்து அதிலும் இருக்கிறது பார் என்று கூறிவந்தேன். சிறிது குறை இருந்தாலும் இப்போதைக்கு இது இருக்கட்டும் என்று கருதினேன்.
புராணக் கருத்துக்களிலும், மூடநம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் நம் மக்களுக்குப் பகுத்தறிவு வளர்ந்தபின், மூடக்கருத்துகள் ஆட்டங்கண்ட பின்தான் குறளின் பொருளை உணரும் அறிவு மக்களுக்கு உண்டாகும் என்று கருதி முதலில் மூடக் கருத்துகளை அகற்றும் பணியில் பிரச்சாரம் புரிந்து வந்தேன். இன்று மக்களுக்கு கொஞ்சம் அறிவுத் தெளிவு, பகுத்தறிவுத் தன்மை வளர்ந்து இருக்கிறதால் இன்று குறளைப்பற்றி பேசுகிறேன்.
குறளில் இப்படியிருக்கிறதே! நீ ஏன் இப்படி நடக்கிறாய் என்று கேட்காதீர்கள்; நான் சொல்லுவது அதில் இருக்கிறது என்ற அளவில் தான் நான் குறளை ஆதரிக்கிறேன் அதை அப்படியே முழுவதையும் ஒத்துக்கொள்ள மாட்டேன்.
உதாரணமாக, மாமிச உணவு உண்பதை வள்ளுவர் மிக வன்மையாகக் கண்டிக்கிறார். கொல்லாமையின் உயர்வு குறித்து வெகுவாக எழுதியிருக்கிறார். குறளிலேயே அப்படி சொல்லப் பட்டிருக்கிறதே என்பதற்கு ஆக நான் மாமிச உணவு கொள்ளாமல் இருக்க முடியுமா? மக்களுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் குறள்தான் ஆதாரம் என்று சொல்லவில்லை.
குறளிலிருந்து உங்களுக்கு வேண்டியதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேண்டாததைத் தள்ளிவிடுங்கள் என்றுதான் கூறுகிறேன்."
23.5.1950-இல் பெங்களூர் திருவள்ளுவர் கழக ஆண்டு விழாவில் தந்தை பெரியார் பேசியது இது!
சங்கிகள், இந்துத்துவவாதிகள், வலதுசாரிகள், பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்றாலே அயோக்கியர்கள், புரட்டர்கள், பொய்யர்கள், அவதூறுப் பேர்வழிகள், அழிச்சாட்டியக்காரர்கள், அறிவு நாணயமற்றவர்கள், எச்சச்ச எச்சச்ச, கச்சச்ச கச்சச்ச என்பதைப் புரிந்துகொள்ள இன்னுமொரு வாய்ப்புதான் இந்த அவதூறும்!
கருத்துகள்