முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வரட்டும் கலைஞருக்கு கைது ஆணை!

கொம்பு முளைத்த உச்சநீதிமன்றம், மக்கள் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழினத் தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
நூற்றண்டு கால தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை, பாதி பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மத நம்பிக்கை என்னும் புரட்டைச் சொல்லி தடுக்க நினைப்பவர்களுக்கு உச்சநீதிமன்றம் அடைக்கலம் கொடுக்குமாம்; இதைப் பார்த்துக் கொண்டு இன உணர்வாளர்கள் சும்மா இருக்க வேண்டுமாம். உச்சிக்குடுமி நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தலையாட்டிக் கொண்டிருக்க வேண்டுமாம்.

அப்படி இல்லாமல், சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து முடிக்கக்கோரி அமைதியான வழியில், சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வழியில் பந்த் அறிவித்தால் அதை இரவுக்கிரவே கூடித் தடுக்குமாம் உச்ச நீதிமன்றம்.
சரி, உச்சநீதிமன்றத்திற்கு மதிப்புக் கொடுத்து உண்ணாநிலைப் போராட்டம் என்று அதை மாற்றிக் கொண்டு, உரிய நேரத்தில் அலுவலகத்துக்கு சென்று கையொப்பமிட்டு பணியை மேற்கொண்டார் கலைஞர்.
பார்த்துக்கொண்டிருந்த தமிழக மக்கள் தன்னெழுச்சியாக 'பந்த்' நடத்தி, உச்ச நீதிமன்றத்தின் முகத்தில் கரியைப் பூசினர். அதைத் துடைத்துக் கொண்டு, தனது அவமானத்திற்கு பழிவாங்கத் துடிக்கிறது உச்சிக் குடுமி நீதிமன்றம்.

இதோ இன்று கலைஞருக்கு அது விடுத்துள்ள எச்சரிக்கையில் "தலைமைச் செயலரின் அறிக்கையைத் தனது அறிக்கையாக ஏற்றுக்கொள்ள முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், விரைவில் முதல்வர் பதிலளிக்காவிட்டால் அவருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

பிறப்பிக்கட்டும்! பிறப்பிக்கட்டும்!! அப்போது தான் கனன்று கொண்டிருக்கும் தமிழின உணர்வு கொழுந்துவிட்டெரியும்!
இந்தியா என்னும் மாயையில் சிக்கித் தவிக்கும் எம் தமிழினம் மீண்டு வரும்! உச்சிக் குடுமி நீதிமன்றமே உன் ஆணவ ஆணையை அனுப்பு!
தமிழினத்திடமிருந்து மீண்டும் கிடைக்கும் உனக்கு ஆப்பு!

முந்தைய பதிவுகள்:
உச்சநீதி மன்றத்திற்கு மக்கள் தந்த செருப்படி!
எவன் மசுர புடுங்கப் போனீங்க!
பெஞ்சுகளைச் சுத்தப்படுத்துவோம் வாருங்கள்!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....
கலைக்கட்டும் கலைஞர் அரசை!

கருத்துகள்

ஜோ/Joe இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் ! நீதி மன்ற உத்தரவுகளை குப்பைத் தொட்டியில் போட்ட மற்ற மாநில அரசுகளை தட்டிக்கேட்க வக்கில்லாத நீதித் துறை இதற்கு மட்டும் வரம்பு மீறி வார்த்தைகளை விடுவது ஏன் ?
Jackiesekar இவ்வாறு கூறியுள்ளார்…
nice post, keep it up
ஜோசப் பால்ராஜ் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் பதிவுக்கு பின்னூட்டமிட எண்ணி எழுதியதே ஒரு பதிவானது.

http://maraneri.blogspot.com/2008/08/blog-post_04.html

படித்துவிட்டு சொல்லுங்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஈழம் அழிந்தாலும் பரவாய் இல்லை ஆனால் உன் தலைவனுக்கு உச்ச நீதிமன்றம் கைது ஆணை பிறபித்தால் தமிழர்கள் கொந்தளிப்பார்களா ?? உன்ன மாதிரி தமிழ் உணர்வு இருந்தா போதும் உருபட்டடும் இந்த இனம் இதுக்கு மேல சொல்ல விரும்பல .........................................
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஈழம் அழிந்தாலும் பரவாய் இல்லை ஆனால் உன் தலைவனுக்கு உச்ச நீதிமன்றம் கைது ஆணை பிறபித்தால் தமிழர்கள் கொந்தளிப்பார்களா ?? உன்ன மாதிரி தமிழ் உணர்வு இருந்தா போதும் உருபட்டடும் இந்த இனம் இதுக்கு மேல சொல்ல விரும்பல .........................................
சுமைதாங்கி ... இவ்வாறு கூறியுள்ளார்…
ஈழம் அழிந்தாலும் பரவாய் இல்லை ஆனால் உன் தலைவனுக்கு உச்ச நீதிமன்றம் கைது ஆணை பிறபித்தால் தமிழர்கள் கொந்தளிப்பார்களா ?? உன்ன மாதிரி தமிழ் உணர்வு இருந்தா போதும் உருபட்டடும் இந்த இனம் இதுக்கு மேல சொல்ல விரும்பல .........................................

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!