முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பக்குரித்தல்


எனக்கு
விழுப்புண் பட்டு
நீண்ட நாட்களாகிறது.

விழுந்து புண் பட்டதுதான்
விழுப்புண் என்பதாகும்.

சேற்றிலாட முடியாமல்
வளர்ந்ததால்
சிரங்கு வரும் வாய்ப்பில்லை!

செருப்பில்லாமல் நடந்ததில்லை
என்பதால்
சேற்றுப்புண்ணுக்கும் வழியில்லை!

மிதிவண்டி பழகியதில்
தொடங்குகிறது எனது
விழுப்புண் வரலாறு!

வாடகைக்கு எடுத்த
வண்டியில் விழுந்தபோதும்
விருந்தினர் கொணர்ந்த
வண்டி ஓட்டி விழுந்தபோதும்

என் சிராய்ப்புகளுக்கு
மருந்து போடுகையில்
'புதுப்புது மொழிகளை
உருவாக்கி உளறியதாய்'
அண்ணன் சொல்லிச்
சிரித்தபோது
ஆறிவந்த தடத்தின்
பக்குகளை உரித்தபடி
பொருமிக் கொண்டிருந்திருக்கிறேன்.

ஜான்டிரோட்ஸ் போல
பாய்ந்து பிடிக்கிறேன் என
ஆர்வக்கோளாறில்
விழுந்து எழுந்தபோது
வழிந்த குருதி துடைத்தபடி
வீடு நோக்கி நடந்திருக்கிறேன்.

காயம்பட்ட இடத்தில்
களிம்பு தடவிப்பின்
காத்திருந்து தடவிப் பார்க்கையில்
இடறுகின்ற பக்குகளை
மெதுவாய் உரிப்பதொரு...
சுகம்!

வெங்காயத் தோல்களாய்
விரியும் அடுக்குகளுக்குள்
வடுக்களாய் ஒளிந்திருக்கிறது
காலம்!

காயாத பகுதிவரை
கிழிப்பதில் வேண்டும்
தனிக்கவனம்!

விழுப்புண்கள்
குழிப்புண்கள் ஆகிவிடாதிருக்க
தேவை எச்சரிக்கை!

உதடுகளின் உலர்ந்த
தோலை
உரிப்பதிலிருந்து...
பிறந்த குழந்தைத் தலையில்
மெல்லிய சீப்பால் சீவி
பக்குரிப்பது வரை
காயம்படாமல்
உரிப்பது ஒரு கலை...

விளையாட்டு ஓய்ந்த பிறகும்
வண்டி ஓட்டத் தெரிந்த பிறகும்
விழுப்புண்கள் வருவதில்லை!
வெகுநீண்ட காலத்துக்குப் பிறகு
விழுப்புண் பெறும் வாய்ப்பு
அண்மையில்!

புதிய விழுப்புண்களை
வரவேற்றன
பழையவை!

விரைவில்
வடுவாகிவிடுவாய் என
ஆறுதல் சொல்லின!

எண்ணிப் பார்த்தேன்..
தொண்ணூற்றாறு விழுப்புண் பெற்ற
விஜயாலனை விஞ்ச
இன்னும்
முப்பத்தாறு பாக்கியிருக்கிறது!

கருத்துகள்

cheena (சீனா) இவ்வாறு கூறியுள்ளார்…
அறுபது விழுப்புண்களா ?? சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டதிலும், ஓட்டுவதிலுமாகவா ?? ம்ம்ம். புண்களைட்ஷ் தடவித் தடவி உதிர்ந்த தோல்களை ( பக்குகளை ??) உரிப்பதில் உள்ள சுகம் சிறு வயதில் வேறு கிடையாது. அச்சுகத்தைச் சொல்கையிலே ஒரு அருமையான தத்துவமும் கூடவே வருகிறது.

//வெங்காயத் தோல்களாய்
விரியும் அடுக்குகளுக்குள்
வடுக்களாய் ஒளிந்திருக்கிறது
காலம்!//

அருமை அருமை. வாழ்த்துகள்
குசும்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையாக இருக்கிறது!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சீனா & குசும்பன்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!