முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Copy cat-ஆ பெரியார்?

”பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலைத் தான், தமிழில் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்று காப்பியடித்தாரா பெரியார்?


”பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலைத் தான், தமிழில் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்ற பெயரில் காப்பியடித்தார் பெரியார் என்று ஓர் அரைவேக்காடு எழுதியிருக்கிறது. அதை எப்படியும் நாளை காலைக்குள் ஆயிரக்கணக்கான முட்டாள்கள் பகிரப் போகிறார்கள். சங் பரிவாரின் காலைநக்கும் கும்பல் அதை மீம்சாக்கி பரப்பப் போகிறார்கள். போர்டு தாஸ் மாதிரியான கூலிகள் வீடியோவும் போடுவார்கள்.
நாம் சொல்ல வேண்டிய உண்மையைச் சொல்லி வைப்போம்.
“பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூலில் உள்ள கருத்துகள் பெரியாருக்குத் திடீரென்று ஒரே நாளில் தோன்றி எழுதப்பட்ட சிந்தனைகள் அல்ல.
தந்தை பெரியார் தன் குடும்பத்தில் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே மறுமணம் செய்துகாட்டியதில் தொடங்கி, பெண்ணுரிமை பற்றிய சிந்தனைகள் ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கு எப்படி பரிணமித்து வந்திருக்கின்றன என்பதைப் பெரியாரைப் படிப்பவர்கள், படித்தவர்கள் உணர முடியும்.
அதெல்லாம் தெரியாமல், வன்மத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு திரியும் இந்த ஸோம்பிகள், 'தான் திருடி பிறரை நம்பாது’ என்பதைப் போல பெரியார் மீதும் திருட்டுப் பட்டம் சுமத்துகிறார்கள். (ஒரு போட்டோவை வைத்துக் கொண்டே ஒரு மாமாங்கமாக பொழப்பை ஓட்டும் கும்பல் அல்லவா?)
தந்தை பெரியார் தன்னுடைய கருத்தை, அதற்கு எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அதைத் தன்னுடையது என்று சொல்லும் துணிவு கொண்டவர். இதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.
அதேபோல் தன் சிந்தனைக்கு ஒத்துவரும் அடுத்தவர் கருத்தை வரவேற்று, அதை அவர்கள் பெயரிலேயே வெளியிட்டுப் பரப்பியவர். மேனாட்டு அறிஞர்கள் முதல் தன் பத்திரிகையில் பணியாற்றியவர் வரை அவரவர் பெயரிலேயே குறைந்த விலையில் வெளியிட்டுப் பரப்பிய கொள்கை - அறிவு நாணயத்திற்குச் சொந்தக்காரர்.
இங்கர்சால், ஜீன் மெஸ்லியர், அண்ணல் அம்பேத்கர், பகத்சிங், பாதிரியார் சென்னிகியூ, லெனின், ஜோசப் மெக்காபி, சார்ல்ஸ் டீகோர்ம், மொழிபெயர்ப்பாளர்களான குருசாமி, ஜீவா, எழுத்தாளர்களான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், பண்டிதர் இ.மு.சு, என அனைவரின் படைப்புகளையும் பதிப்பாளராக இருந்து வெளியிட்டவர்.
இவர்கள் எடுத்துக்காட்டும் சிந்தனையாளர் பெட்ரண்ட் ரஸலின் மற்றொரு நூலான Why i am not a Christian நூலைத் தமிழில் “நான் ஏன் கிறிஸ்துவன் அல்ல?” என்று வெளியிட்டிருக்கிறார். இவர்கள் சொல்கிறபடி காப்பி அடிக்கலாம் என்றால், இதே நூலை ”கிறிஸ்துவ மத ஆராய்ச்சி” என்ற பெயரில் தமிழில் வெளியிட்டுத் தன் பெயரைப் போட்டுக் கொள்ள முடியாதா பெரியாரால்? எத்தனையோ புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிட்ட பெரியாருக்கு இதை மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியமென்ன?
ஒன்றா, இரண்டா எத்தனை மொழிபெயர்ப்பு நூல்கள் - அதுவும் பெரும் தொடர்பு வளர்ந்திராத 1920-30களில்! தமிழில் இந்த முற்போக்கு நூல்களெல்லாம் வெளிவந்து அதைப் படித்து தமிழன் உருப்பட்டுவிடமாட்டானா என்ற ஆசைதானே பெரியாருக்கு?
பெரியார் ஒரு சுயசிந்தனையாளர் - Original Thinker. படித்து அறிவை வளர்த்துக் கொண்டவரல்லர்.. கேள்விகளால், பட்டறிவால், பகுத்தறிவால் கூர்மைப்பட்டவர். அந்தக் கருத்துகளை வெளிப்படுத்தியதால், தன் வாழ்நாள் முழுக்க நட்டத்தை, எதிர்ப்பைக் கண்டவரே ஒழிய பாராட்டுகளையும், லாபத்தையும் பெற்றவரல்லர்.
சரி, பெண் ஏன் அடிமையானாள் நூலுக்கு வருவோம்.
’கற்பு’ என்ற தமிழ்ச் சொல் பற்றிய ஆய்வுடன் தொடங்குகிறது பெரியாரின் கட்டுரை. அடுத்த கட்டுரை திருக்குறளும் கற்பும் பற்றி விமர்சிக்கிறது.
பெண் ஏன் அடிமையானாள் நூலைப் படித்தவர்களுக்குத் தெரியும், அதன் context முழுக்கவுமே இந்திய/ தமிழகச் சூழல் சார்ந்தது. இதெல்லாம் பெட்ரண்ட் ரஸல் எழுதியதாமா? படித்தால் தானே விளங்கும். படத்தையும், தலைப்பையும் வைத்துக் கதை கட்டினால் எப்படி விளங்கும்?
விரிவாக விலாவாரியாக வரிக்கு வரி இந்த மடையர்களின் உளறல்களை மறுக்கலாம். ஆனால், மிக எளிமையாக ஒரே வாதத்தில் இவர்களின் பொய்யை அம்பலப்படுத்த வேண்டுமா? இதோ சொல்கிறேன்.
பெட்ரண்ட் ரஸலின் Marriages and Morals வெளியிடப்பட்ட ஆண்டு 1929.
’பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் இடம்பெற்றுள்ள முதல் கட்டுரையான கற்பு - 8.1.1928 அன்று வெளியானது. அடுத்த கட்டுரையான வள்ளுவரும் கற்பும் 12.2.1928 அன்று வெளியானது. 7-ஆவதாக இடம்பெற்றுள்ள விதவைகள் நிலைமை பற்றிய கட்டுரை 22.8.1926-இல் வெளியானது. பத்தாவது கட்டுரை 1928 ஆகஸ்டில் வெளியானது.

இப்படி 1926-இல் தொடங்கி 1931 வரை எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு தான் "பெண் ஏன் அடிமையானாள்?” என்னும் நூல்.
உண்மை இப்படி இருக்க, பெட்ரண்ட் ரசலில் நூலைத் தான் அப்படியே தமிழில் மாற்றி எழுதி தன் பெயரைப் போட்டுக் கொண்டார் பெரியார் என்று இந்த புரட்டர்கள், பொய்யர்கள் கூறுகின்றனர் என்றால் எத்தனை கேடுகெட்ட மானமற்ற அயோக்கியர்களுடன் நாம் போராட வேண்டியிருக்கிறது பாருங்கள்.
ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இத்தகைய சிந்தனை மலர்ந்திருக்கிறது பெரியாருக்கும் ரசலுக்கும் என்று ஓர் ஒப்புமையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதியிருக்கிறார். ஆசிரியர் கி.வீரமணியின் ஒப்புமை அறிவு வளர்ச்சி பற்றிய மகிழ்ச்சி வெளிப்பாடு. அதை வைத்துக் கொண்டு அளந்து கொட்டியிருக்கிறது ஓர் அரைவேக்காடு.
1929இல் வெளியான Marriages and Morals நூலை 1926-லிருந்தே காப்பி அடித்தாரா பெரியார்? இவர்கள் சொல்லும்படி பார்த்தால், ஒரு வேளை புரூப் பார்ப்பதற்காக பெரியாருக்கு அனுப்பிவைத்திருப்பாரோ பெட்ரண்ட் ரசல்? பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருத்தமாத்தான் சொல்லுங்களேன்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam