முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெட்டிலிங்க மரமும் பாவாடை அணிந்த சிறுமியும்

கணிதத்தின் அடிப்படையைப் புரிய வைக்க முயலாமல் கணக்கு போடுவதற்கு எளிய முறை என்று பல வழிமுறைகளை பயிற்றுவிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?

எங்கள் சிறு வயதில்... பள்ளிக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் வருவார்கள். அவரவர் முயற்சியில் பல புதிய விசயங்களை அறிமுகப்படுத்துவார்கள். உண்மையில் அப்படிப்பட்ட அறிமுகங்கள் ஆர்வத்தை விதைத்தன என்பதை மறுப்பதற்கில்லை. மேஜிக் செய்பவர், அறிவியல் விளக்கங்கள் சொல்பவர், எளியமுறை கணிதம் என்று கணித விளக்கம் சொல்பவர், தாளை நறுக்கி அதில் பல்வேறு வேலைப்பாடுகள் செய்பவர், ஓவியத்தில் பூ வேலைப்பாடுகள் கற்றுத் தருபவர், குட்டிக் குட்டித் தையல்கள், பந்து-கூடைகள் நெய்யக் கற்றுத் தருபவர், விதவிதமான பேனா பென்சிகள் விற்பவர், பெட்ரோலைச் சேமிக்கும் புதிய வகை கார்ப்பரேட்டர் விற்பவர் என்று ஏராளமாக வருவார்கள்.

அவர்களில் சிலர் தங்கள் திறமைக்கு டிக்கெட் பணம் போல இரண்டு ரூபாய், அய்ந்து ரூபாய் வாங்கிக் கொள்வார்கள். சிலர் 8 பக்கத்திலோ, 16 பக்கத்திலோ ஏறத்தாழ சாம்பலைத் தாண்டி கருப்புக்கு நெருக்கமான நிறத்திலான சாணித் தாளிலும், அதே தரத்தில் மிக மெல்லிய காகிதக் கொடி தடிமனிலான வண்ண மேல்தாளிலும் தாங்கள் போட்ட புத்தகங்களுக்கு 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் வாங்கிக் கொள்வார்கள். அதை விற்கவரும் நபரின் முகமும், பேப்பரையொத்த கனத்தில் அவர் உருவமும் இன்னும் நினைவிருக்கிறது.

அவர்களின் வரவு இன்னொரு மகிழ்ச்சி. கடைசி இரண்டு வகுப்புகள் இருக்காது. வாய்ப்பு இருந்தால் இன்னொரு கிளாசும் சுவாஹா. ஒட்டுமொத்த பள்ளி மாணவர்களும் கூட்டமாக அமர்ந்து களிக்க... திருவிழா மனநிலைதான்.

எதுவாக இருந்தாலும், மறுநாள் பணம் கொடுத்துவிடுவதாகச் சொல்லி பசங்கள் வாங்கிக் கொள்வார்கள். டீச்சர்களிடம் பணம் கட்டுவதற்கு மறுநாள் போவதற்கு முன்னால், அந்த 5ரூபாய்க்கோ, 10 ரூபாய்க்கோ பல பாட்டுகள் வாங்கிவிட்டு பள்ளிக்குச் செல்ல வேண்டும். எனக்கும் தங்கைக்கும் அந்தப் பிரச்சினை இல்லை. மாலையில் அழைக்க வரும் அய்யாவிடம் என்ன வேண்டுமோ கைகாட்டினால் பணம் வந்துவிடும். என்ன அடுத்த ஆண்டும் அதே போல் ஒரு சில பக்கங்கள் மாற்றியமைக்கப்பட்டு, வேறு வண்ண மேல்தாள் கொண்ட புத்தகத்தைக் கேட்கும்போது தான், “அதுதான் வீட்டிலேயே இருக்கேய்யா... ம்ம்ம் சரி!” என்ற மெலிதான குரல் வரும். (இதெல்லாம் எழுதும்போது ஒரு துளி கண்ணீர் துளிர்த்து, ‘லவ் யூ அய்யா’ போட்டுக் கொள்ளத் தோன்றுகிறது இப்போது!)

இரவு விளக்குக்கான கூண்டு, நெட்டிலிங்க மரம், பாவாடை அணிந்து கைதூக்கியபடி நிற்கும் பெண் பொம்மைகள் என்று எளிமையாகக் கைகூடும் வடிவங்களோடு, ’இதெல்லாம் அவங்களுக்குத்தான் வரும்!’ என்று சொல்லி கைவிட்டுச் செல்லும் அளவிலான சில அரிய வடிவங்களுடன் இருக்கும் அந்தப் புத்தகம்.

அப்புறம் என்ன, வீட்டில் ஒரே குப்பை தான் பிறகு! கத்திரிக்கோலும் கையுமாக கண்ணில் படும் பேப்பர்களையெல்லாம் பொளந்துகட்ட வேண்டியது தான். அந்த பழைய பேப்பர் கிராப்ட் புத்தகங்கள் யார் கண்ணிலாவது பட்டால் பதிவிடுங்கள். என் பழைய தொகுப்புகளில் நான் தேடிப் பார்க்க வேண்டும். ஒன்றிரண்டு நாள்களில் ஹோம்வொர்க் மிகுந்ததும், அவை விளையாட்டுக் கட்டுகளின் அடியில் போய்விடும். மீண்டும் அரையாண்டு, ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் சில நாட்கள் உயிர்பெற்றிருக்கும். அதிலும் அந்த நெட்டிலிங்க மரம் வெட்டுவதற்கு முயன்றால் கத்திரிக்கோலின் அழுத்தத்தில் கையெல்லாம் வலிக்கும்.

இன்று அவைதான் ஆரிகமி, கிரிகமி, பேப்பர் கிராப்ட் என்று பல்வேறு பெயர்களால் நம் பிள்ளைகள் கைகளில் இருக்கின்றன.

அதே போல், பல ஓட்டைகள் கொண்ட வட்டவடிவ கண்ணாடித் துண்டுகளும் அவற்றை நடுவில் வைத்து வரைவதற்கேற்ற ஒரு பெரிய வட்டவடிவ பட்டையும் கொண்ட பூவேலைப்பாடு தரும்... தொட்டால் ஒடிந்துவிடும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருளும் (அதற்குப் பெயர் Spirograph-ஆம்... இப்போதுதான் பார்த்தேன்) பழைய ரஃப் நோட்டுகளையெல்லாம் பதம் பார்த்திருக்கின்றன. அடடா... நான் எழுத வந்தது என்ன? வேறு எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன். அதிலும் பல சிறுகதை, கவிதைக்கான ’நாட்’டுகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்.

விடுங்க... அடுத்த பதிவில் அந்தக் கணக்கு மேட்டரைப் பார்ப்போம்.

#Nostalgia #SchoolDays #PaperCraft #EasyMaths #SpiroGraph #SVNS #SMSVHSS #Karaikudi

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam