ஒரே நாடு... ஒரே மொழி... ஒரே தேர்வு... ஒரே கல்வி முறை... இப்போ ஒரே தேர்தல்?
அதிக செலவு, ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆசிரியர்களைப் பயன்படுத்துவது, அடுத்தடுத்து தேர்தல் போன்ற காரணங்களால் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்த முன்புபேச்சு எழுந்தது. நிதி ஆயோக் அதன் அடுத்த கட்டத்திற்கு நடந்திருக்கிறது.
2019-க்குப் பதில் 2018-லேயே தேர்தல் நடத்தலாமா என்று யோசிக்கிறதாம் மோடி அரசு.
என்ன செய்ய? மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக தேர்தலையே தியாகம் செய்துவிடலாம் என்று கூட நிதி ஆயோக் பரிந்துரைத்திருக்கும்... 2018-இல் தேர்தல் நடந்து மீண்டும் ஆர்.எஸ்.எஸ். வந்தால் நிலைமை அது தான்.
”ஆமாங்க... எதுக்கு இவ்வளவு தேர்தல்? எப்படியும் இவய்ங்க கொள்ளை அடிக்கத் தான் போறாய்ங்க... எதுக்கு நாட்டுக்கு செலவு? எவனோ ஒருத்தன் இருந்துட்டுப் போறான்” என்பதாக தாங்களின் மக்களின் பிரதிநிதிகள் என்று கருதிக் கொண்டு மாமாக்கள், மாமிகள், அவர்களின் பாதந்தாங்கிகள் உள்ளிட்ட ”மட சாம்பிராணிகள்” கருத்து பரப்ப ஆரம்பிப்பார்கள்.
ஆயிரம் கெட்ட வார்த்தைகள் மனதில் தோன்றினாலும், அவற்றை அடக்கிக் கொண்டுதான் அடுத்து எழுத வேண்டியிருக்கிறது.
அப்படி என்ன இழவுக்கு நாங்கள் தேர்ந்தெடுக்கும் மாநில அரசைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும். ஒரே தேர்தல் நடத்துவதற்காக இரண்டாண்டுகள், மூன்றாண்டுகளில் மாநில ஆட்சிகள் முடித்துவைக்கப்படுமா?
இப்போது தமிழ்நாட்டில் நடப்பது போல தொங்கு சட்டமன்றம் உருவாகி, ஆட்சி தன் நம்பிக்கையை சட்டமன்றத்தில் இழக்க நேரிட்டால், எதற்கு உடனே தேர்தல் என்று மிச்ச காலத்தை ஆளுநரைக் கொண்டோ, குடியரசுத் தலைவரைக் கொண்டோ, அதிகாரிகளைக் கொண்டோ மத்திய அரசு நடத்துவதற்கான மிக மோசமான நிலையை நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்காதா?
சரி, 13 நாட்களிலும் 13 மாதத்திலும் கவிழ்ந்த வாஜ்பேயியின் பாஜக ஆட்சிபோலவோ, அல்லது 11 மாதத்தில் பா.ஜ.க.வால் கவிழ்க்கப்பட்ட வி.பி.சிங் ஆட்சி போலவோ, ஜனதா, ஜனதாதளம், தேசிய முன்னணி, அய்க்கிய முன்னணி போலவோ ஆட்சிகள் அமைந்து குறுகிய காலத்தில் நாடாளுமன்றம் செயலிழந்தால், அப்போது நாட்டின் எல்லா மாநிலங்களுக்கும் மீண்டும் தேர்தல் நடக்குமா? அல்லது 5 ஆண்டுகள் நிறையும் வரை, மக்களின் ஆதரவு இல்லாத, அரசியல் சட்டப்படி வலு இல்லாத ஓர் ஆட்சி காபந்து அரசாக தொடருமா?
அதிகாரிகளின் கொட்டம் நடக்குமா? என்பது உள்ளிட்ட இந்திய அரசியல் சட்டத்தையும், மாநில அதிகாரங்களையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் கேலிக்குள்ளாக்கும் இந்த யோசனை முற்றுமுழுதாக சர்வாதிகாரத்திற்கான மூஸ்தீபு!
எச்சரிக்கை... எச்சரிக்கை... எச்சரிக்கை!
முகநூலில்...
அதிக செலவு, ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆசிரியர்களைப் பயன்படுத்துவது, அடுத்தடுத்து தேர்தல் போன்ற காரணங்களால் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்த முன்புபேச்சு எழுந்தது. நிதி ஆயோக் அதன் அடுத்த கட்டத்திற்கு நடந்திருக்கிறது.
2019-க்குப் பதில் 2018-லேயே தேர்தல் நடத்தலாமா என்று யோசிக்கிறதாம் மோடி அரசு.
என்ன செய்ய? மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக தேர்தலையே தியாகம் செய்துவிடலாம் என்று கூட நிதி ஆயோக் பரிந்துரைத்திருக்கும்... 2018-இல் தேர்தல் நடந்து மீண்டும் ஆர்.எஸ்.எஸ். வந்தால் நிலைமை அது தான்.
”ஆமாங்க... எதுக்கு இவ்வளவு தேர்தல்? எப்படியும் இவய்ங்க கொள்ளை அடிக்கத் தான் போறாய்ங்க... எதுக்கு நாட்டுக்கு செலவு? எவனோ ஒருத்தன் இருந்துட்டுப் போறான்” என்பதாக தாங்களின் மக்களின் பிரதிநிதிகள் என்று கருதிக் கொண்டு மாமாக்கள், மாமிகள், அவர்களின் பாதந்தாங்கிகள் உள்ளிட்ட ”மட சாம்பிராணிகள்” கருத்து பரப்ப ஆரம்பிப்பார்கள்.
ஆயிரம் கெட்ட வார்த்தைகள் மனதில் தோன்றினாலும், அவற்றை அடக்கிக் கொண்டுதான் அடுத்து எழுத வேண்டியிருக்கிறது.
அப்படி என்ன இழவுக்கு நாங்கள் தேர்ந்தெடுக்கும் மாநில அரசைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும். ஒரே தேர்தல் நடத்துவதற்காக இரண்டாண்டுகள், மூன்றாண்டுகளில் மாநில ஆட்சிகள் முடித்துவைக்கப்படுமா?
இப்போது தமிழ்நாட்டில் நடப்பது போல தொங்கு சட்டமன்றம் உருவாகி, ஆட்சி தன் நம்பிக்கையை சட்டமன்றத்தில் இழக்க நேரிட்டால், எதற்கு உடனே தேர்தல் என்று மிச்ச காலத்தை ஆளுநரைக் கொண்டோ, குடியரசுத் தலைவரைக் கொண்டோ, அதிகாரிகளைக் கொண்டோ மத்திய அரசு நடத்துவதற்கான மிக மோசமான நிலையை நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்காதா?
சரி, 13 நாட்களிலும் 13 மாதத்திலும் கவிழ்ந்த வாஜ்பேயியின் பாஜக ஆட்சிபோலவோ, அல்லது 11 மாதத்தில் பா.ஜ.க.வால் கவிழ்க்கப்பட்ட வி.பி.சிங் ஆட்சி போலவோ, ஜனதா, ஜனதாதளம், தேசிய முன்னணி, அய்க்கிய முன்னணி போலவோ ஆட்சிகள் அமைந்து குறுகிய காலத்தில் நாடாளுமன்றம் செயலிழந்தால், அப்போது நாட்டின் எல்லா மாநிலங்களுக்கும் மீண்டும் தேர்தல் நடக்குமா? அல்லது 5 ஆண்டுகள் நிறையும் வரை, மக்களின் ஆதரவு இல்லாத, அரசியல் சட்டப்படி வலு இல்லாத ஓர் ஆட்சி காபந்து அரசாக தொடருமா?
அதிகாரிகளின் கொட்டம் நடக்குமா? என்பது உள்ளிட்ட இந்திய அரசியல் சட்டத்தையும், மாநில அதிகாரங்களையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் கேலிக்குள்ளாக்கும் இந்த யோசனை முற்றுமுழுதாக சர்வாதிகாரத்திற்கான மூஸ்தீபு!
எச்சரிக்கை... எச்சரிக்கை... எச்சரிக்கை!
முகநூலில்...
கருத்துகள்