முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாத்தா ரெட்டமலை சீனிவாசன்: மீசையா, மீசையில்லாமலா?

திவான் பகதூர் தாத்தா ரெட்டமலை சீனிவாசனாரின் பிறந்தநாள் இன்று (ஜூலை 7)!

இந்நாள் நினைவுக்கு வந்ததும், உடன் நினைவுக்கு வந்த மற்றொன்று அம்பேத்கர் திரைப்படம். தமிழில் அம்பேத்கர் திரைப்படத்தைப் பார்த்தபோதிலிருந்தே இதை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 
திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன்
முதல் இரண்டு வட்ட மேசை மாநாடுகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அண்ணல் அம்பேத்கருடன் பங்கேற்றவர் ராவ்பகதூர் ரெட்டமலை சீனிவாசன் (திரைபடத்தில் அப்படித்தான் குறிக்கப்பட்டிருக்கிறது). ஜாபர் பட்டேலின் ”டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர்” படத்தில் வரும் வட்ட மேசை மாநாட்டுக் காட்சியைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

முதல் வட்டமேசை மாநாட்டுக் காட்சி (அம்பேத்கரின் வலப்புறம் ராவ்பகதூர் சீனிவாசன்)

முறுக்கு மீசையுடன் நாம் பார்த்துப் பழகிய ரெட்டமலை சீனிவாசனை அங்கு காணோம். மாறாக தலையில் முண்டாசுடன் மீசையில்லாத ஒரு பார்ப்பனரைப் போலவே காட்டப்பட்டிருப்பார். ராவ்பகதூர் சீனிவாசன் என்ற பெயரைப் பார்த்ததும், ஜாபர் பட்டேலின் (சீனிவாச அய்யங்கார்கள் மாதிரி) மனதில் அப்படியோர் பிம்பம் தோன்றியிருக்குமோ என்னமோ? அம்பேத்கர் படத்தில் வரும் (https://youtu.be/hScBhoGOJZc?t=1h36m33s) இந்த இணைப்பையொட்டிய காட்சிகளைப் பாருங்கள். 

முதல் வட்டமேசை மாநாட்டுக் காட்சி (அம்பேத்கரின் வலப்புறம் ராவ்பகதூர் சீனிவாசன்)

உண்மையான வட்டமேசை மாநாட்டுப் புகைப்படம் இதோ. (அண்ணல் அம்பேத்கருக்கு வலப்புறம் கம்பீரமாக ரெட்டமலை சீனிவாசன் அமர்ந்திருப்பார்)

ரலாற்றுத் திரைப்பட உருவாக்கத்தில் நடக்கக்கூடிய பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று. அந்த குறிப்பிட்ட வரலாற்றோடு தொடர்புடைய, படத்தின் மையக்கருவை ஒட்டி வரும் அத்தனைப் பேரையும் சரியாக அவர்களின் வடிவத்திலேயே காட்ட வேண்டும். 

ஏனெனில், ஒரு பார்வையாளனாக நமக்குத் தெரிந்தவர்களைப் பற்றிய குறிப்பு இருக்கிறதா? அதுவும் சரியாக இருக்கிறதா? என்று கவனிப்பது மனித இயல்பு. அப்படி தந்தை பெரியாரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் அம்பேத்கர் படத்தில் இடம்பெறவில்லை என்பது சட்டென உறைத்தது. ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் காந்தி திரைப்படத்தில் அம்பேத்கர் இல்லை; தாகூர் இல்லை. ஜாபர் பட்டேலின் அம்பேத்கர் படத்தில் பெரியார் இல்லை; இன்னும் பல முக்கியமானவர்களும் (பெரியார் உள்பட இத்தகைய வரலாற்றுப் படங்களில்) விடுபட்டுப் போயிருக்கலாம். 

ஆனால், அப்படத்தின் பல்வேறு அத்தியாயங்களுள் வட்டமேசை மாநாடு - பூனா ஒப்பந்தம் தொடர்பான அத்தியாயம் மிக முக்கியமான ஒன்று. அந்த அத்தியாயத்தில் வரக்கூடிய முக்கியமான இரு பாத்திரங்கள் தான் தந்தை பெரியாரும், ராவ்பகதூர் ரெட்டமலை சீனிவாசன் அவர்களும். காந்தியின் உயிரை விட, பல கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் தான் முக்கியம் என்று அம்பேத்கருக்கு ஆதரவான குரலாக ஒலித்தது தந்தை பெரியார் தான். ஆனாலும், அந்தப் பதிவு எப்படியோ விட்டுப் போய்விட்டது. 

இரண்டாவது வட்டமேசை மாநாட்டுக் காட்சி
அதே போலவே, ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் உருவமும் மாறிப் போயிருந்தது. ஆனால், இதைப் பற்றி யாரும் குறிப்பிட்டு எழுதியதாக நினைவில்லை. எனவே, அம்பேத்கர் படத்தில் ரெட்டமலை சீனிவாசன் உருவம் குறித்து பதிவு செய்து வைத்துவிடுவோமே என்பதற்காக இதை எழுதுகிறேன். அவ்வளவே!

இணைப்பு:
இன்றைய விடுதலையின் ஒற்றைப்பத்தியில் இரட்டைமலை சீனிவாசன் பற்றிய மயிலாடன் குறிப்பு!

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
விடுதல் - ஏன் மறந்தார்கள்.... எதற்காக என்றும் புரியவில்லை...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

சரத்குமாருக்கு மட்டுமல்ல... மானமற்ற மடையர்கள் அனைவருக்கும்!

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 ) இது தினமணியில் வந்த செய்தி. அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்கூடாது." என்று. இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது; இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒர...