முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

’இராம’ராஜ்யம்


நீண்டுபோய்க் கிடந்த
கரடு முரடான குறுகிய பாதை!
இரு பக்கமும் பார்த்தேன்.

ஒரு புறம்...
‘மவுத்’ஆக்கப்பட்ட
முகமதியர் கபர்ஸ்தானம்!
மறுபுறம்...
மரிக்கும்படி செய்யப்பட்ட
’மாதா’ புதல்வர்களின் கல்லறை!

’ராமராஜ்யம்’ எனும்
நாமத்தை உச்சரித்தபடி
ஒரு கூட்டம்
எதையோ
தூக்கிச் சென்றது.

என்னவென்று பார்த்தேன்!
என்னென்று சொல்வேன்?
பெயர் மட்டும்
சொல்லிக் கொண்டிருந்த
இந்திய ‘மதச் சார்பின்மைக்கு’
காவி சுற்றப்பட்ட
வசதியான
அருமையான பாடை!

கண் திறந்தது.
கனவு தான்... ஆயினும்
நனவாவதற்கு
சாத்தியக் கூறுள்ள கனவு!

ஒரு வேளை...
கனவு நனவாகி
இராம இராஜ்யம் வந்தால்...?

மாளப்போவது
மதச்சார்பின்மை மட்டுமல்ல
மிச்சமீதியிருந்த
மனிதநேயமும் தான்.

சாகப்போவது
சிறுபான்மையோரல்ல...
பெரும்பான்மையோர்

ஆம்..
தப்பித் தவறி
இப்போது தான் படிக்கும்
நம் காதுகளில் தேனாய்பாய
காய்ச்சப்பட்ட ஈயம்
அணியமாய் இருக்கும்!

நம்மை
சம்புகவதம் செய்ய
கொடுவாள் தயாராகி
ராமனார் கையில்
கொடுத்தனுப்பப்படும்!
கல்லூரிகளெல்லாம்
கல்லுடைப்புத் தளங்களாகும்!

’சதி’யை நம்பாத
‘பதி’யின் ஆட்சியில்
அக்கினி குண்டங்கள் கட்ட
அக்கர(ம) சேவகர்கள் உண்டு!

இராமராஜ்யம் அமைக்க
அவர்கள் தயார்!
நீங்கள் - தயாரா?

(சுமார் பத்து ஆண்டுகளுக்குமுன் அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு கவிதைப் போட்டியின் தலைப்பு ‘ராமராஜ்யம்’ என்பது! யார் நடத்தினார்கள்? நான் எழுதியதை அனுப்பினேனா- இல்லையா என்பதெல்லாம் நினைவில்லை. இந்தச் சூழலுக்குப் பொருந்துவதால் இங்கே!) 

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான கவிதை...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான கவிதை...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

சரத்குமாருக்கு மட்டுமல்ல... மானமற்ற மடையர்கள் அனைவருக்கும்!

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 ) இது தினமணியில் வந்த செய்தி. அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்கூடாது." என்று. இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது; இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒர...