முகநூலில் தோழர் அபுராயன் எழுதிய பதிவு
//சிந்திக்க மட்டும்...!!!
நேற்று விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்த சையத் சுபஹானிடம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என விஜய் டிவி தொகுப்பாளர் கேட்டதற்கு அவர் " எல்லா புகழும் இறைவனுக்கே" என்றார்.
அவரின் தாயாரிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் " என் மகனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தலைவணங்குகிறேன்" என்று கூறி தலையை சற்று தாழ்த்தினார்...
பிள்ளைகளைவிட பெற்றோர்களுக்கே இஸ்லாமிய மார்க்கம் குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைபடுகிறது... என்பதனை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தியது...
# இறைவனை தவிர எதற்கும் எவனுக்கும் தலைவனங்குவது மாபெரும் குற்றமாகும்...!!! - @அபு ரயான்//
அபுராயன் அவர்களின் பதிவில் தோழர் மதி மதி அவர்களின் கருத்து:
//மகன் ஒரு பாடகராகத் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்; வெற்றி பெறும் அளவுக்கு தம் திறமையை வளர்த்து, தம் உழைப்பால் வெற்றிக்கனியைப் பறித்து விட்டார்;
ஆனால், இதில் எந்த தொடர்புமில்லாத 'இறைவனுக்கு' நன்றி கூறுகிறார்!
அறிவின் மீது நம்பிக்கையின்றி!
ஆனால், அவரின் தாயாரோ அறிவைப் பயன்படுத்தியுள்ளார்!
வெற்றிக்குத் துணையாயிருந்தோர்க்கு நன்றி கூறியுள்ளார்!
தாயாரைப் பாராட்டுவோம்! - @mathi mathi//
அது குறித்த என் பதிவு:
”கடவுளை மற! மனிதனை நினை!!” என்றார் தந்தை பெரியார். அது எத்தனை சரியானது பாருங்கள்! மகனின் வெற்றிக்கு உடன் நின்றோருக்கு நன்றி சொல்லுவது என்பது மனித மாண்பு! அதற்குக் கூட மதம் தடையாக இருக்கிறது. இஸ்லாத்தின் இறுக்கம் என்பதன் அடித்தளம் இருப்பது இங்கே தான். இஸ்லாத்தை உருவாக்கியவர்களின், நெறிப்படுத்தியவர்களின் சூட்சுமம் இருப்பதும் இங்கே தான். இதைத் தான் இணை வைத்தல் என்று பயங்கரமான பாவச் செயலாகப் பார்க்கிறார்கள்.
ஆம், சரி தான். இணை வைத்தல் கூடாது தான். எவரோடும் ஒப்பிட முடியாத நல்ல மனித மனங்களை, அவ்ர்தம் ஆற்றலை, அன்பை, உயர்வை, வேட்கையை, பண்பை, எதற்குமே பயன்படாத - இல்லாத - கற்பனையின் உச்சமான கடவுளுக்கு இணையாக வைத்தல் கூடாது தான் தோழர்களே! ஆஸ்கர் விருது வாங்கியதும் மேடையில் ரஹ்மான் சொன்னதைப் ’போலச் செய்த’ தம்பி சையத் சுபஹானை விட, தன் உணர்வை உண்மையாக வெளிக்காட்டிய, நன்றியை வெளிக்காட்டிய அவரது தாயார் தான் உயர்ந்தவர்.
மார்க்கம் குறித்து யார் பாடம் கற்க வேண்டும் என்பதற்கு முன், மனிதம் குறித்து பாடம் கற்க விரும்புவோர் அந்த தாயிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்!
மீண்டும் அழுத்திச் சொல்லுகிறோம்.
பின் குறிப்பு:
1. இவ்வளவுக்கும் சையதின் தாய் இறைவன் என்று அவர் கருதுவதற்கு/ கருதுபவர்க்கு நிகராக, தான் தலைவணங்குவதாகச் சொன்னவர்களை கருதியிருக்கவும் மாட்டார் - அப்படி சொல்லவும் இல்லை.
2. தலை தாழ்த்தி ஒருவரை வணங்கவேண்டும் என்றும் நான் சொல்லவில்லை; அது சரி என்றும் நான் வாதிடவில்லை. வணங்குதல் என்பதை வழிபடுதல் என்ற பொருளில் கொண்டால் அதை நான் ஏற்பதுமில்லை. மரியாதையைத் தெரிவிப்பதைத் தான் வணங்குதல் என்ற பொருளில் பயன்படுத்துகிறேன். காலில் விழுதல் என்பதை (யார் காலிலும் விழுவதை- அதன் தத்துவ விளக்கத்தை) சுயமரியாதைக்கு இழுக்கு என்று சொல்பவர்கள் நாங்கள். ஆனால், தன் உணர்வை எளிமையான தலை தாழ்த்தலின் மூலம் உணர்த்தியதக் கூட மாபெரும் குற்றம் என்று சொல்லுவதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
//சிந்திக்க மட்டும்...!!!
நேற்று விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்த சையத் சுபஹானிடம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என விஜய் டிவி தொகுப்பாளர் கேட்டதற்கு அவர் " எல்லா புகழும் இறைவனுக்கே" என்றார்.
அவரின் தாயாரிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் " என் மகனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தலைவணங்குகிறேன்" என்று கூறி தலையை சற்று தாழ்த்தினார்...
பிள்ளைகளைவிட பெற்றோர்களுக்கே இஸ்லாமிய மார்க்கம் குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைபடுகிறது... என்பதனை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தியது...
# இறைவனை தவிர எதற்கும் எவனுக்கும் தலைவனங்குவது மாபெரும் குற்றமாகும்...!!! - @அபு ரயான்//
அபுராயன் அவர்களின் பதிவில் தோழர் மதி மதி அவர்களின் கருத்து:
//மகன் ஒரு பாடகராகத் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்; வெற்றி பெறும் அளவுக்கு தம் திறமையை வளர்த்து, தம் உழைப்பால் வெற்றிக்கனியைப் பறித்து விட்டார்;
ஆனால், இதில் எந்த தொடர்புமில்லாத 'இறைவனுக்கு' நன்றி கூறுகிறார்!
அறிவின் மீது நம்பிக்கையின்றி!
ஆனால், அவரின் தாயாரோ அறிவைப் பயன்படுத்தியுள்ளார்!
வெற்றிக்குத் துணையாயிருந்தோர்க்கு நன்றி கூறியுள்ளார்!
தாயாரைப் பாராட்டுவோம்! - @mathi mathi//
அது குறித்த என் பதிவு:
”கடவுளை மற! மனிதனை நினை!!” என்றார் தந்தை பெரியார். அது எத்தனை சரியானது பாருங்கள்! மகனின் வெற்றிக்கு உடன் நின்றோருக்கு நன்றி சொல்லுவது என்பது மனித மாண்பு! அதற்குக் கூட மதம் தடையாக இருக்கிறது. இஸ்லாத்தின் இறுக்கம் என்பதன் அடித்தளம் இருப்பது இங்கே தான். இஸ்லாத்தை உருவாக்கியவர்களின், நெறிப்படுத்தியவர்களின் சூட்சுமம் இருப்பதும் இங்கே தான். இதைத் தான் இணை வைத்தல் என்று பயங்கரமான பாவச் செயலாகப் பார்க்கிறார்கள்.
ஆம், சரி தான். இணை வைத்தல் கூடாது தான். எவரோடும் ஒப்பிட முடியாத நல்ல மனித மனங்களை, அவ்ர்தம் ஆற்றலை, அன்பை, உயர்வை, வேட்கையை, பண்பை, எதற்குமே பயன்படாத - இல்லாத - கற்பனையின் உச்சமான கடவுளுக்கு இணையாக வைத்தல் கூடாது தான் தோழர்களே! ஆஸ்கர் விருது வாங்கியதும் மேடையில் ரஹ்மான் சொன்னதைப் ’போலச் செய்த’ தம்பி சையத் சுபஹானை விட, தன் உணர்வை உண்மையாக வெளிக்காட்டிய, நன்றியை வெளிக்காட்டிய அவரது தாயார் தான் உயர்ந்தவர்.
மார்க்கம் குறித்து யார் பாடம் கற்க வேண்டும் என்பதற்கு முன், மனிதம் குறித்து பாடம் கற்க விரும்புவோர் அந்த தாயிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்!
மீண்டும் அழுத்திச் சொல்லுகிறோம்.
”கடவுளை மற! மனிதனை நினை!!”
பின் குறிப்பு:
1. இவ்வளவுக்கும் சையதின் தாய் இறைவன் என்று அவர் கருதுவதற்கு/ கருதுபவர்க்கு நிகராக, தான் தலைவணங்குவதாகச் சொன்னவர்களை கருதியிருக்கவும் மாட்டார் - அப்படி சொல்லவும் இல்லை.
2. தலை தாழ்த்தி ஒருவரை வணங்கவேண்டும் என்றும் நான் சொல்லவில்லை; அது சரி என்றும் நான் வாதிடவில்லை. வணங்குதல் என்பதை வழிபடுதல் என்ற பொருளில் கொண்டால் அதை நான் ஏற்பதுமில்லை. மரியாதையைத் தெரிவிப்பதைத் தான் வணங்குதல் என்ற பொருளில் பயன்படுத்துகிறேன். காலில் விழுதல் என்பதை (யார் காலிலும் விழுவதை- அதன் தத்துவ விளக்கத்தை) சுயமரியாதைக்கு இழுக்கு என்று சொல்பவர்கள் நாங்கள். ஆனால், தன் உணர்வை எளிமையான தலை தாழ்த்தலின் மூலம் உணர்த்தியதக் கூட மாபெரும் குற்றம் என்று சொல்லுவதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கருத்துகள்
பாராட்டுகள்.