திருமணம் அல்லது மகிழ்வான நிகழ்வு என்ற தகவலைச் சொல்வதற்கானதாக மட்டுமின்றி, தங்களின் பணக்காரத்தன்மையை, ஆடம்பத்தை, படாடோபத்தைக் காட்டுவதற்காகவும் சர்வ சாதாரணமாக ஓர் அழைப்பிதழ் ரூ.50 முதல் 500, 1000 வரைக்கும் செலவு செய்கிறார்கள். சிலர் திறந்தால் பேசும் அழைப்பிதழ் தருகிறார்கள். அதன் மூலமே குரலால் அழைக்கிறார்கள். இன்னும் சிலர் சிடி தந்து பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால், அழைப்பிதழ் வாங்கும்போதே எங்கு,என்று, யாருக்கு என்ற விவரத்தைத் தெரிந்துகொண்ட பிறகு அதை போட்டுப் பார்க்கப் போவதில்லை. (அவனவன் கல்யாண வீடியோவையே திரும்பப் பார்க்கிறதில்லை.)
அதையும் தாண்டி, யாரும் அந்த அழைப்பிதழை எடுத்து கண்ணாடிக்குள் அடைத்து வைத்துப் பாதுகாக்கப் போவதில்லை. திருமணம் முடிந்த பின்னோ, முடியும் முன்னோ குப்பைக் கூடைக்குப் போகப் போகிறது. ஆனாலும் அப்படி செலவு செய்வதற்கும் அழகு படுத்துவதற்கும் பின்னால், இதை யாராவது வைத்திருக்க மாட்டார்களா என்ற நப்பாசையும் சிலருக்கு இருக்கும். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் ஏதாவது இருக்குமா? ’இதெல்லாம் நடக்கிற காரியமாடா மண்டையா?’ என்று குப்பைக் கூடையில் போடுவதற்குச் சிரமமாக இருக்கும் அழைப்பிதழ்கள் கிழித்துக் குப்பைக்கு அனுப்பப்படும். இதெல்லாம் கேட்டால் அப்படி அழைப்பிதழ் அடிக்கும் நண்பர்களுக்கு வருத்தமாகக் கூட இருக்கும். ஆனால் உண்மை அது தான். மேலும் ஓர் அழைப்பிதழ் உருவாக்க எத்தனை மரத்துண்டுகள் தேவை என்பதையும் கணக்கில் கொண்டால், உயர்தரமான அழைப்பிதழ் என்று சொல்லப்படும் ஒன்றை உருவாக்க சூழலையும் நாம் கெடுப்பது புரியும்.
இந்த வரிசையிலிருந்து வேறுபட்டவர் அருமைத் தம்பி பிரகாஷ் செல்வராசு. கடந்த ஆண்டு நடைபெற்ற அவரது தங்கை திருமணத்திற்கு ஓர் ஆண்டின் நாள்காட்டியை வடிவமைத்து அதையே அழைப்பிதழாக்கி பயன்படுத்த வைத்தார். கடந்த வாரம் நடைபெற்ற வரது திருமணத்திற்கான அழைப்பிதழை பயன்முடிந்ததும் தூக்கி மண்ணில் போடுங்கள் என்கிறார். அது உரமாவதற்கு அல்ல - விதையாவதற்கு! ஆம். அவர் தந்த அழைப்பிதழுக்குள்ளேயே விதைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவை விதைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட கைத் தயாரிப்பு காகித அட்டைகள். நீங்கள் மண்ணில் தூக்கிவீசுவதோடு மட்டுமல்லாமல், அதை நீரூற்றி வளர்த்தால், அடுத்த தலைமுறைக்கு நம் பரிசாகவும் அல்லவா இருக்கும்!
இத்தகைய பயனுடைய முயற்சிக்கு அவர் மட்டுமல்லாது நண்பா அறக்கட்டளையில்அவருடன் இருக்கும் ராதா கிருஷ்ணன், சாரதா, கார்த்திகேயன் மற்றும் தோழர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். தம்பி பிரகாசுக்கும், அவர் தன் வாழ்விணையர் அம்பிகா பிரியதர்ஷினிக்கும் இனிய வாழ்த்துகள்!!
அதையும் தாண்டி, யாரும் அந்த அழைப்பிதழை எடுத்து கண்ணாடிக்குள் அடைத்து வைத்துப் பாதுகாக்கப் போவதில்லை. திருமணம் முடிந்த பின்னோ, முடியும் முன்னோ குப்பைக் கூடைக்குப் போகப் போகிறது. ஆனாலும் அப்படி செலவு செய்வதற்கும் அழகு படுத்துவதற்கும் பின்னால், இதை யாராவது வைத்திருக்க மாட்டார்களா என்ற நப்பாசையும் சிலருக்கு இருக்கும். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் ஏதாவது இருக்குமா? ’இதெல்லாம் நடக்கிற காரியமாடா மண்டையா?’ என்று குப்பைக் கூடையில் போடுவதற்குச் சிரமமாக இருக்கும் அழைப்பிதழ்கள் கிழித்துக் குப்பைக்கு அனுப்பப்படும். இதெல்லாம் கேட்டால் அப்படி அழைப்பிதழ் அடிக்கும் நண்பர்களுக்கு வருத்தமாகக் கூட இருக்கும். ஆனால் உண்மை அது தான். மேலும் ஓர் அழைப்பிதழ் உருவாக்க எத்தனை மரத்துண்டுகள் தேவை என்பதையும் கணக்கில் கொண்டால், உயர்தரமான அழைப்பிதழ் என்று சொல்லப்படும் ஒன்றை உருவாக்க சூழலையும் நாம் கெடுப்பது புரியும்.
இந்த வரிசையிலிருந்து வேறுபட்டவர் அருமைத் தம்பி பிரகாஷ் செல்வராசு. கடந்த ஆண்டு நடைபெற்ற அவரது தங்கை திருமணத்திற்கு ஓர் ஆண்டின் நாள்காட்டியை வடிவமைத்து அதையே அழைப்பிதழாக்கி பயன்படுத்த வைத்தார். கடந்த வாரம் நடைபெற்ற வரது திருமணத்திற்கான அழைப்பிதழை பயன்முடிந்ததும் தூக்கி மண்ணில் போடுங்கள் என்கிறார். அது உரமாவதற்கு அல்ல - விதையாவதற்கு! ஆம். அவர் தந்த அழைப்பிதழுக்குள்ளேயே விதைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவை விதைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட கைத் தயாரிப்பு காகித அட்டைகள். நீங்கள் மண்ணில் தூக்கிவீசுவதோடு மட்டுமல்லாமல், அதை நீரூற்றி வளர்த்தால், அடுத்த தலைமுறைக்கு நம் பரிசாகவும் அல்லவா இருக்கும்!
இத்தகைய பயனுடைய முயற்சிக்கு அவர் மட்டுமல்லாது நண்பா அறக்கட்டளையில்அவருடன் இருக்கும் ராதா கிருஷ்ணன், சாரதா, கார்த்திகேயன் மற்றும் தோழர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். தம்பி பிரகாசுக்கும், அவர் தன் வாழ்விணையர் அம்பிகா பிரியதர்ஷினிக்கும் இனிய வாழ்த்துகள்!!
கருத்துகள்