ஆளாளுக்கு ரைம் (Rhym) கவிதை(!?) எழுதியிருக்கிறார்களே என்று நானும் அவ்வப்போது எழுதுவது உண்டு! (என்ன கொடுமையடா).
எழுதுவது என்றால் எழுதுவது அல்ல; பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்வது... அவர்கள் சிரித்தால், மகிழ்ந்தால் 10 மறுமொழி வந்த மகிழ்ச்சி! (நம்ம அளவு அவ்வளவு தான்!)
அப்படி சொல்வதற்கு யாருமே பக்கத்தில் இல்லாமல், வாகனத்தில் சென்று கொண்டிருந்த நேரத்தில் ஒரு 'ரையும் கவிதை' உதித்துத் தொலைந்ததால், செல்பேசியில் பதிவு செய்துகொண்டு வந்து பின்னர் இங்கேயும் பதிவிடுகிறேன்.
"தாரில் போட்ட ரோடானாலும் ஒரு நாள் மழையில் கரையும்
அடுத்த முதல்வரை நாங்கள் தேட போதும் வெள்ளித் திரையும்
பண்பாட்டுப் படையெடுப்பால் மறந்தோம் கூத்தும் பறையும்
தோழர் என்று தோளில் கையிட தகுதி டீயும் பொறையும்
முல்லை அணையை உசத்தனுமாமே எந்தா சேட்டா பறையும்?"
(பின்குறிப்பு: ஒவ்வொரு வரியும் ஒரு வரிக் கவிதையாதலால் (!?) கவிதையா எனக் கேட்பவர்கள் மீது கவிதை பாதுகாப்புச் சட்டம் பாயும்!)
எழுதுவது என்றால் எழுதுவது அல்ல; பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்வது... அவர்கள் சிரித்தால், மகிழ்ந்தால் 10 மறுமொழி வந்த மகிழ்ச்சி! (நம்ம அளவு அவ்வளவு தான்!)
அப்படி சொல்வதற்கு யாருமே பக்கத்தில் இல்லாமல், வாகனத்தில் சென்று கொண்டிருந்த நேரத்தில் ஒரு 'ரையும் கவிதை' உதித்துத் தொலைந்ததால், செல்பேசியில் பதிவு செய்துகொண்டு வந்து பின்னர் இங்கேயும் பதிவிடுகிறேன்.
"தாரில் போட்ட ரோடானாலும் ஒரு நாள் மழையில் கரையும்
அடுத்த முதல்வரை நாங்கள் தேட போதும் வெள்ளித் திரையும்
பண்பாட்டுப் படையெடுப்பால் மறந்தோம் கூத்தும் பறையும்
தோழர் என்று தோளில் கையிட தகுதி டீயும் பொறையும்
முல்லை அணையை உசத்தனுமாமே எந்தா சேட்டா பறையும்?"
(பின்குறிப்பு: ஒவ்வொரு வரியும் ஒரு வரிக் கவிதையாதலால் (!?) கவிதையா எனக் கேட்பவர்கள் மீது கவிதை பாதுகாப்புச் சட்டம் பாயும்!)
கருத்துகள்