முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எல்லை தாண்டிய பயங்கரவாதம்!


சிப்பிகள் பொறுக்க வந்தோம்
சிதைகள் தந்தாய் - எங்கள்
கடல் தமிழர் வாழ்க்கை இன்று
புதை குழி மண்ணாய்!

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் கிடைப்பது கடினம்;
கடல்நீர் நாட்டுள் பயணம் வந்தது
வடிந்தது எங்கள் உதிரம்!

நாட்டுக்குள் பூகம்பம் வந்தது
மக்கள் கடற்கரை சென்றனர்.
கடலுக்குள் பூகம்பம் வந்தது
கடற்கரையே காணாமல் போனது!



உயிரைப் பணயம் வைத்தோர்
உயிருடன் வந்தனர் - தங்கள்
உறவுகள் காவு போனதைக்
கண்டதும் வெந்தனர்!

கடல் என்னும் கந்துவட்டிக்காரன்
பணயப் பொருளை மாற்றி கைக்கொண்டான்!
தடைச் சட்டம் போட ஆளில்லை - கடல்
தடைக்கெல்லாம் தயங்குகிற ஆளில்லை!

இது
மனித குலத்தின் மீது
எல்லை தாண்டிய பயங்கரவாதம்!
இயற்கை
என்ன செய்யும் பாவம்?

ஆழ்துளை போட்டான்
அணுகுண்டு வீசினான்

கடற்கரைக் காடுகள் அழித்து
களியாட்ட விடுதிகள் கட்டினான்

நீரை உறிஞ்சினான்
நிலத்தடியில் வறட்சி..
கோலா பாட்டில் குளிர்ச்சி!

சுற்றுச்சூழலின்
சூத்திரம் மாற்றினான்..
தற்கொலைத் தூதனைத்
தானே தேடினான்!


தன்னை கவனிக்காத
மனிதனைத்
தானும் கவனிக்கவில்லை
இயற்கை!

பயங்கரவாதி இயற்கையா?
இல்லை மனிதன்!

கொலை
செய்தவனை விட
தூண்டியவனுக்கே
தண்டனை அதிகம்!
பெற்றுவிட்டோம்!

பழித்தது போதும்
இயற்கையை!
அது சுவற்றிலடித்த
பந்து!

நன்மையோ
தீமையோ
செய்ததே விளையும்

தீமை தொடர்ந்தால்
மனித இனம் அழியும்

இது
இயற்கையின் விதி!
அறிவியல் சமன்பாடுகளில்
அழியாத விதி!

(27.12.2004 அன்று சுனாமியின் தடங்களை அண்ணா நினைவிடம் தொடங்கி, நொச்சிக்குப்பம், டுமீங்குப்பம், பட்டினப்பாக்கம், சாந்தோம், ஸ்ரீநிவாசபுரம் முடிய வலிகளைச் சுமந்தபடி பார்த்துவிட்டு வந்தேன். பின்னர் ஒரு நாள் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டும் கலை நிகழ்ச்சியில், பரதநாட்டியத்தின் பின்னணியில் வாசிப்பதற்காக எனதருமைத் தோழி தேவி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்டது.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!