முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கழகத் தோழர்கள் பதற்றம் அடையவேண்டாம்! - தமிழர் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள்

துரோகங்களைச் சந்தித்துப் பழக்கப்பட்டவர்கள் நாம்;
அச்சுறுத்தல்கள் நம்மை ஒன்றும் செய்யாது
கழகத் தோழர்கள் பதற்றம் அடையவேண்டாம்!

- தமிழர் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள்


இன்று (2.7.2010) காலை 7.30 மணியளவில் (சேத்துபட் ஆரணி அருகில்) ஒரு மண விழாவை நடத்தி வைக்க நான் வேனில் பயணமாகி, திருமணம் முடிந்தவுடன் புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு சென்னை திரும்பும் வழியில் எனக்கு ஒரு தகவல்: வீட்டில் இருந்த காவலாளியை சுற்றி 3 பேர் தடிகளுடன் நின்றிருக்க, மற்றும் 4 பேர் வீட்டின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த எனது காரை இரும்புத் தடிகளால் அடித்து நொறுக்கி, 'ஒழிக!' என்று கோஷங்கள் போட்டுக்கொண்டிருந்தனராம்.

அதற்கு சற்றுமுன், வீட்டிற்கு வந்த பெரியார் திடல் நிருவாகி சீதாராமன் அவர்கள் எனக்காக காத்திருந்தபோது, வீட்டில் வேலை செய்யும் பெண் மேலே இருந்து பார்த்து, காரை அடித்து நொறுக்குகிறார்கள் என்று கூச்சல் போட்டவுடன், உள்ளே இருந்த குடும்பத்தினர், நிருவாகி சீதாராமன் கீழே இறங்கி வருவதற்குள், அந்தக் கும்பல் ஓடி சாலையின் குறுக்கே கடந்து சென்றுள்ளது.

காவல்துறையினர் விரைந்து வந்து முழு விசாரணையை நடத்துகின்றனர்.
பல வெளிநாடு, வட மாநிலம், தமிழ்நாட்டின் பல ஊர்களிலிருந்து கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், அன்பர்கள், நல விரும்பிகள் மிகுந்த கவலையுடன் (சிலர் தொலைப்பேசி மூலமாகவும்) விசாரித்த வண்ணம் உள்ளனர்.
கழகத் தோழர்கள் பதற்றம் அடையவேண்டாம். ’சட்டம், அதன் கடமையைச் செய்யும்’ என்ற முழு நம்பிக்கை நமக்கு உண்டு. ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்பது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஆத்திரப்பட்டு இறங்கிவிடக் கூடாது.
பொது வாழ்க்கையில் இப்படிப்பட்ட துரோகங்களைச் சந்தித்துப் பழக்கப்பட்டவர்கள் நாம்.

அச்சுறுத்தல்கள் நம்மை ஒன்றும் செய்யாது. சாகத் துணிந்த நமக்கு சமுத்திரம் முழங்கால் கூட அல்ல; கணுக்கால் அளவே.
எனவே, அமைதி காக்கவேண்டும் என்று அன்புடன் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். கலைஞர் அரசினைக் காக்க வேண்டியதே நமது முதற்கடமை என்பதை மறவாதீர்!


(கி. வீரமணி),

தலைவர்,
திராவிடர் கழகம்.

2.07.2010 
சென்னை 

கருத்துகள்

அ.முத்து பிரகாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
//அச்சுறுத்தல்கள் நம்மை ஒன்றும் செய்யாது. சாகத் துணிந்த நமக்கு சமுத்திரம் முழங்கால் கூட அல்ல; கணுக்கால் அளவே...//

ஆசிரியர் அவர்களின் துணிச்சலும் உறுதியும் நம் அனைவரிடமும் பரவட்டும் !வன்முறை பாதையில் இறங்கியதன் மூலம் தனத்தை பெரியாரின் கொள்கைகளை எந்த அளவுக்கு அவர்கள் பின்பற்றுகிறார்கள் என தெளிவாகியுள்ளது -மீண்டுமொருமுறை !

வீரமணியார் மீது தாக்குதல் :பெ'தி.க அறிக்கை
http://neo-periyarist.blogspot.com/2010/07/blog-post.html

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

சரத்குமாருக்கு மட்டுமல்ல... மானமற்ற மடையர்கள் அனைவருக்கும்!

"தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் வழிபடும் ஆலயங்களில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடக்க வேண்டும் என்ற ஆர்வம் தவறில்லை. ஆனாலும், காலகாலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் மனதில் கொண்டே மாற்றங்களை நிகழ்த்த அமைதி வழியில் முயற்சிக்க வேண்டும். அதற்கு இறை நம்பிக்கை கொண்டோரை, ஆன்மீகப் பெரியோர்களை, அறிஞர் பெருமக்களை கொண்ட ஒரு குழு அமைத்து அதன் வழியில் தீர்க்கமான சுமூக முடிவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ***** கூறியுள்ளார்." (தினமணி 4.3.2008 ) இது தினமணியில் வந்த செய்தி. அதே பேட்டியை சன் டி.வி-யும் ஒளிபரப்பியது. அதில் சொன்னார், "கடவுளுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்று ஆகமத்தில் இருக்கிறது அதன்படி தான் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இப்பிரச்சினையில் உள்நுழைந்து குழப்பக்கூடாது." என்று. இப்பேட்டி யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க. 'இலக்கடை' கணேசன் கொடுத்தது என்றுதானே! அதுதான் கிடையாது; இல்லை 'சோ'...ம்ஹூம்... அதுவும் கிடையாது இந்த அரிய பெரிய கருத்தினை தெரிவித்தவர் 2011-ன் தமிழக முதல்வர்களில் ஒர...