முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியில் வருகிறார் 'பெரியார்'!

பெரியார் திரைப்படத்தின் இந்திப் பதிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. மொழி மாற்றம் செய்யப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறார் இந்திப் 'பெரியார்'. வடபுலத்துத் தலைவர்கள் பார்ப்பதற்கு விரைவில் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது. உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவதி விரைவில் பெரியார் படத்தைப் பார்க்கவுள்ளார். இந்தியாவெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகாட்டியாக பெரியார் இன்னும் செல்லவிருக்கிறார் வெகுதூரம்.

தொடர்ந்து பெரியார் டி.வி.டி. இங்கிலீஷ் மற்றும் பிரெஞ்சு மொழிகளின் துணைத் தலைப்புடன் (subtitle) வரவிருக்கிறது.

'பெரியார்' திரைப்படம் இந்தியன் பனரோமா பிரிவில் இடம் பெற்றிருப்பதையொட்டி இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இனமுரசு சத்யராஜ், இயக்குநர் ஞான ராஜசேகரன் ஆகியோரோடு கலந்துகொண்டபோது தமிழர் தலைவர் கி.வீரமணி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

கருத்துகள்

TBCD இவ்வாறு கூறியுள்ளார்…
நடக்கட்டும் நடக்கட்டும்...வட இந்தியாவே அதிரப்போகுதுல்ல...
இதே மாதிரி மற்ற மொழிகளிலே அவர் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் மொழி பெயர்த்தால், பெரியாரின் வீச்சு அதிகரிக்கும்...
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தியாவின் தலைவிதியை(?) மதியால் வெல்லப்பிறந்த தலைவனின் வாழ்க்கை வரலாறு, பேச்சுக்கள், வீரச்செயல்கள் அனைத்துலகிற்கும் பரவட்டும்.

வீரத்திருமகனை பெற்றெடுத்து இவ்வுலகிற்கு கொடுத்திருக்கும் தமிழினத்தை நினைத்து பெருமை கொள்வோம்.

தமிழன் எனச் சொல்லி,
தலை நிமிர்வோம்!

தந்தையின் கொள்கைகளின் கீழ் அனைத்து தமிழினமும் ஒன்று படுவோம்.

கயவர்களின் முகமூடிகளை கழற்றி விரட்டுவோம்.

கலைஞர் தன் அரசியல் வாழ்நாளில் செய்த மிக முக்கியமான செயல் இந்த படத்தை தமிழ் மக்களுக்கு அளித்ததாகத்தான் இருக்க முடியும்.

கலைஞருக்கு நன்றி.
சீனு இவ்வாறு கூறியுள்ளார்…
இது ஒரு நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். கண்டிப்பா ஆச்சரியப் படப்போறாங்க. என்ன? எப்பொழுதும் தென்னிந்தியான்னா இளக்காரம் அவங்களுக்கு. பார்த்து திருந்தட்டும்.
கோவி.கண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
"இந்தியில் வருகிறார் 'பெரியார்'!"//

இந்தி பெரியார் படத்தில் 'இந்தி எதிர்ப்பு' காட்சிகள் இருக்குமா ?

:)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!