முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெஞ்சுகளைச் சுத்தப்படுத்துவோம் வாருங்கள்!

காப்பிக் கறை
டீக்கறைகளைவிட பெரும்
காவிக்கறை
படிந்து கிடக்கிறது
பெஞ்சுகளில்!

காலங்காலமாய் எம்மை
ஏறி மிதித்து நடந்ததில்
காலடியில் ஒட்டிய
எங்கள் ரத்தக் கறையுடன்
கருப்பு அங்கி தரித்து
கால் மேல் கால்போட்டு
கர்வமாய் அமர்ந்திருக்கின்றன
காட்டேரிகள்!

இவை
வகுப்பறைத் தவறுக்காக
ஏறி நிற்கும்
பள்ளிக் கூட
பெஞ்சுகள் அல்ல;
ஒய்யாரமாய்
ஏறி நின்றபடி
குற்றவாளிகள்
தீர்ப்புச் சொல்லும்
பெஞ்சுகள்!

கரன்சிகளின்
எடை காரணமாய்
கையிலிருந்து நழுவுகிறது
நீதியின் தராசு!

ஆணை.. ஆணை... என்று
தட்டப்படும் சுத்திகளின்கீழ்
உடைந்து நொறுங்குகின்றன
சட்டத்தின்
சமத்துவக் கூறுகள்!

மதவாத ஆணிகள்
அறையப்படுகின்றன நேரடியாக
மக்கள் முதுகில்!

சட்டங்களுக்குள்
சிறைப்படாமல்
மனுவின் நீதியிலிருந்து
புறப்படுகின்றன தீர்ப்புகள்!

அதிகாரத்தின் உச்சியில்
நுழைந்ததும்
அக்கிரகாரத்தின்
சுவீகாரப் புத்திரர்களுக்கு
புதிதாய் முளைக்கிறது
பூணூல்!

குடுமி இழந்த தலைகள்
அதிகாரத்தின்
குடுமியைத்
தன் கையில்
பெறத் துடிக்கின்றன.

இந்த மர பெஞ்சுகளின்
அதிகார வேர்கள்
'திலக் மார்க்'கிலிருந்தபடி
'சன்ஷத் பவனி'ன்
அடியைப் பெயர்க்கின்றன!

காப்பிக் கறை
டீக்கறைகளைவிட பெரும்
காவிக்கறை
படிந்து கிடக்கிறது
பெஞ்சுகளில்!

பெஞ்சுகளைச்
சுத்தப்படுத்தவோம்!
வாருங்கள் துடைப்பத்தோடு!

கருத்துகள்

KaniBlog இவ்வாறு கூறியுள்ளார்…
again a good one.. :-)
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தோழி கனி அவர்களே!
வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் இவ்வாறு கூறியுள்ளார்…
வரிகளில் நல்ல வேகமும் உணர்ச்சியும் கொப்பளிக்கிறது... தொடரட்டும் சவுக்கடி கவிதைகள்!
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
கருப்பும் காவியும் கலக்குது

காசுங்கூட காவியுடன் கலக்குது

கலக்குங்கள் காலிகள் கல்ங்கட்டும்

காததூரம் ஓடட்டும் உணரட்டும்.
kiddy ppl இவ்வாறு கூறியுள்ளார்…
ஓவ்வொரு
வார்த்தையும்
சவுக்கடி
தோழர்!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தோழர்கள் கவுதமன், தமிழன், தமிழச்சி!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு விடுபட்ட அடிக்குறிப்பு:
திலக் மார்க்: உச்சநீதிமன்றம் அமைந்திருக்கும் வளாகம்.
சன்ஷத் பவன்: பாராளுமன்ற வளாகம்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
a good one buddy. timely delivered.
With warm Regards,
RVC
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
அதை ஏனய்யா அனானியாய் வந்து சொல்கிறீர்.... சந்திரரே!
kiddy ppl இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!