முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆயித்தில் ஒருவன்!

பழைய திரைப்படங்களை எனக்கு நிறைய போட்டுக்காட்டி, திரைப்படங்களின் மீதான ஆர்வத்தை எனக்கு வளர்த்தது என் அய்யாதான்!(அய்யா என்று குறிப்பிடுவது என் தந்தையை!) வீடியோ வந்த புதிதில் எங்கள் இல்லத்தில் மூன்று, நான்கு வீடியோ டெக்குகள் வாடகைக்கு விடுவதற்காக வைத்திருப்போம். வாடகைக்கு டெக் எடுத்து படம் பார்த்த காலம்.. ஆதலால் அன்றைக்கு(1980-ன் இறுதிப்பகுதிகளில்) அது நல்ல தொழில்!

தனக்குப் பிடித்த தமிழ் திரைப்படங்கள், தன்னை வியக்கவைத்த ஆங்கிலத் திரைப்படங்கள் என தொடர்ந்து தேடி எடுத்து, படங்களை (வீடியோ கேசட்டுகளை) வாங்கிவருவார் என் தந்தை. எனவே தினம் ஒரு திரைப்படம் எங்கள் இல்லத்தில் நிச்சயம். அப்படித்தான் பீம்சிங் படங்கள், நடிகர் திலகம் சிவாஜி நடித்த திரைப்படங்கள், பழம்பெரும் திரைப்படங்கள்(சகஸ்ரநாமம் நடித்த 'போலீஸ்காரன் மகள்' போன்றவை), தேர்ந்தெடுத்த எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் என நிறைய பார்த்துக் குவித்திருக்கிறேன்.

அதிலும் ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை பின்னாட்களில் சன் தொலைக்காட்சியின் துணைகொண்டு நிறைய முறை பார்த்திருக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த எம்.ஜி.ஆர். படங்களில் 'ஆயிரத்தில் ஒருவன்' தலையாயது. எம்.ஜிஆரின் துள்ளல் பாவனைகளாலும், அவரது படங்களில் வரும் தத்துவப் பாடல்களாலும் எம்.ஜி.ஆர். படங்கள் பார்ப்பது என்றால் எனக்கு தனிப்பிரியம். என்னோடு அமர்ந்து ரசித்து, எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் இன்னொரு ரசிகை யாரென்றால், எம்.ஜி.ஆர். இறந்து சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த என் இரண்டாம் தங்கை. அதிலும் இந்தப்படம் அவளுக்கு நிறைய பிடித்த ஒன்று. இன்னும் எம்.ஜி.ஆரின் ஈர்ப்பு நிலைத்திருக்கிறது என்பதற்கு அவளொரு சான்று. அதற்கு அவரது துள்ளல் நடிப்பு முக்கியக் காரணம் என்று கருதுகிறேன். படத்தில் சொன்னதை எல்லாம் நிஜத்தில் செய்தாரா என்ற கேள்வி, அவரது அரசியல் பற்றிப் பேசும் போது எழுப்பப்பட வேண்டியது.

இருக்கட்டும். என்னதான் பலமுறை தொலைக்காட்சியில் பார்த்த படமாக இருந்தாலும், திரையரங்கில் வெளியாகியிருக்கிறது என்றால் பிரம்மாண்டமான ஆயிரத்தில் ஒருவனை பார்க்க மனம் விரும்புவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

முதன்முறையாக எம்.ஜிஆர் படத்தை திரையில் பார்க்கும் வாய்ப்பு கடந்தாண்டு 'நாடோடி மன்னன்' மூலம் கிடைத்தது. இம்சை அரசனின் வெற்றியைத் தொடர்ந்து, நாடோடி மன்னனும், உத்தம புத்திரனும் மீண்டும் திரையப்பட்டன. அதில் நாடோடி மன்னன் படம் வெளியாகி இரண்டு வாரம் முடியப்போன நிலையில், நானும் எனது நண்பர்கள் நால்வரும் ஆல்பர்ட் திரையரங்கில் படம் பார்த்தோம். 'தூங்காதே' பாடலுக்காகவும், எம்.ஜி.ஆர். வெளியிடும் 'உழுபவருக்கே நிலம் சொந்தம்; பிச்சை தடை செய்யப்படுகிறது' உள்ளிட்ட அறிவிப்புகளுக்காகவுமே படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. (அப்போது தான் கலைஞர் அரசு நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் தரிசு நிலம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது.) சிரிப்பு சத்தங்களும், கரவொலிகளும் 'நாடோடி மன்னன்' பழைய படம் என்பதை மறக்கடித்தன.

இந்நிலையில் இவ்வாண்டு வெளியீடாக 'ஆயிரத்தில் ஒருவன்'... 'Pirates of Caribbean' வெளியாகியிருக்கும் சமயத்தில்...

இன்றைய இளம் நாயகன், நாயகி நடித்து வெளிவரும் படங்களுக்கு இணையான வரவேற்பைப் பெற்றிருக்கிறது 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம்! இரண்டு முன்னாள் முதல்வர்கள் நடித்த படமல்லவா?

அதிலும் 'இந்தப் படத்தில் சிறப்பு என்ன தெரியுமா? புர்ச்சித் தலைவரும், தலைவியும் சேர்ந்து நடித்த முதல் படம்' என்றார் ஒரு பெரிசு!

அமைந்தகரையில் அமைந்துள்ள முரளிகிருஷ்ணா திரையரங்கில் சென்று அமர்ந்தோம் ஒரு இரண்டு வாரங்களுக்கு முன்பு! 35 mm படத்தை முழுத்திரையில் திரையிடுவதற்காக பெரிதாக்கியிருக்கிறார்கள். அதை சினிமாஸ்கோப் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதனால் படத்தில் மேலும் கீழும் கொஞ்சம் கட் ஆகியிருந்தது. நாங்கள் போனது செவ்வாய்க்கிழமை; அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர் சென்றிருந்தபோது, மலர் அர்ச்சனை நடந்திருக்கிறது திரைக்கு! (இன்னும் திருந்தலையாடா நீங்க!)

படத்தின் கதையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை; 'கடற்கொள்ளைக்காரன்' என்ற தலைப்பில் சிவாஜிக்குத் தயாரான படம்தான் பின்னாளில் ஆயிரத்தில் ஒருவனாக எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்ததாகப் படித்த நினைவு!

படத்திற்கு என்ன கைதட்டல்! அதுவும் ஜெயலலிதா- எம். ஜி.ஆர். முதல் டூயட் பாட்டுக்கு, நம்பியாரின் அறிமுகத்த்துக்கு, எம்.ஜி.ஆர்-நம்பியார் கத்தி சண்டைக்கு என்று கைதட்டல் விழுந்து கொண்டேயிருக்கிறது என்னுடையதையும் சேர்த்து! எனக்குப் பிடித்த 'ஏனென்ற கேள்வி?' பாடல், 'அதோ அந்த பறவைபோல...'' பாடல் என குதூகல மனப்பான்மையோடு இருந்தேன்.

"நம்பியார்: மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
எம்.ஜி.ஆர்: சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்!"
இந்த வசனத்திற்கெல்லாம் கைதட்டல் பின்னுகிறது.

"என்னம்மா! மருத்துவர்அய்யா நம்ம எண்ணத்தைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்குறார்!" என்றெல்லாம் ஜெயலலிதாவிடம் அவரது தோழி (சேடிப்பெண்) கேட்கும்போது, நிகழ்கால அரசியல் நினைவுக்கு வந்து நகைப்பைத் தோற்றுவித்தது.

எம்.ஜி.ஆரின் காதலுக்காகவும், அவருடனான மணவாழ்க்கைக்கும் ஜெயலலிதா ஏங்கும் காட்சிகளைப் பார்க்கும்போது, ஏனோ ஜெயலலிதாவின் தனி வாழ்க்கையும் நினைவுக்கு வந்து கழிவிரக்கத்தைத் தோற்றுவித்தது. விருப்பமில்லாமல் திரைத்துறையில் நுழைந்து, பல சமயங்களில் தன் விருப்பத்திற்கு விரோதமான வாழ்க்கையில் தள்ளப்பட்ட ஜெயலலிதாவிற்கு இல்வாழ்க்கை அமைந்து மற்ற நடிகைகளைப் போல அமைந்திருந்தால் அவரது வாழ்க்கை வேறு வேறு திசைகளில் திரும்பி இருக்கக்கூடும்! அது சற்றே மனச் சங்கடத்தையும் தந்தது! மக்ழ்ச்சியாய் படம்பார்க்கப் போய் ஆழ்ந்த சிந்தனையுடன் வெளியில் வந்தேன். இந்த முறை படம்பார்த்துவிட்டு வழக்கமான துள்ளல் மனநிலை இல்லை - பூங்கொடியின் முடிவு 'ஜெ'க்கு நடக்காததை நினைத்து!

இணையத்தில் ஆயிரத்தில் ஒருவன் பார்க்க விரும்புவோருக்கு..............................
http://video.google.com/googleplayer.swf?docid=-3470680456641617534
http://video.google.com/googleplayer.swf?docid=-3576299070757933895

கருத்துகள்

PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
naanee.. naaneee.. intha vidumuraiyila vidu pattu pokaama irukka
oru ninaivuuttal!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!