முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முத்துப்பேட்டையில் தந்தை பெரியார் சிலை உடைப்பு - கி.வீரமணி அறிக்கை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தந்தை பெரியார் சிலையினை காலிகள் சிலர் சேதப்படுத்தினர் என்ற செய்தி தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது என்ற செய்தியை அறிந்த ஆத்திரத்தின் மேலீட்டால் இரண்டொரு தோழர்கள் தஞ்சையில் பார்ப்பனர்களின் பூணூலை அறுத்தனர் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது என்பது ஆத்திரத்தை ஊட்டக் கூடியதுதான் என்றபோதிலும் அதற்காக பூணூல் அறுப்பு போன்ற செயல்களில் இறங்க வேண்டாம் என்று தோழர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.தந்தை பெரியார் சிலையைச் சேதப்படுத்திய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கையினை தமிழ்நாடு அரசின் காவல்துறை செய்து வருகிறது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கைகளை உறுதியாக எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று காவல் துறையை வலியுறுத்துகின்றோம்.வேறு சில இடங்களில் தந்தை பெரியார் சிலையை அவமதித்த காரணத்தால் ஏற்கெனவே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழோ குண்டா சட்டத்தின் கீழோ சிறையில் இருப்பவர்களின் பிரச்சினையில் காவல்துறை கவனமாக இருந்து அது தொடர்பான வழக்கினைச் செம்மையாக நடத்தி குற்றவாளிகள் தப்பிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துவது நமது கடமையாகும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம் - சென்னை 22.4.2007

நன்றி: விடுதலை (www.viduthalai.com)

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Police have arrested a muslim and another person involved in this. They dont belong to any hindutva group. Prince can you please write something on the following.

http://www.hindu.com/2007/04/16/stories/2007041608530100.htm