முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெரிஞ்சா சொல்லுங்க

1. ப்ளாக்கரில் பின்னூட்டம் போடப் போனா அந்த சாளரம்(window) திறப்பதற்குள் பத்து பதிவுகள் படித்துவிடலாம் போலிருக்கிறது. அவ்வளவு மெதுவாக window open ஆகிறது. அது ஏன்? எப்படித் தவிர்ப்பது? எனது கணினியில் பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. நல்ல வேகமான கணினிதான்.

2. ப்ளாக்கரில் youtube வீடியோ போட்டாலும், அவர்கள் கொடுக்கும் code-அய் copy செய்து போடும்போது பாதிதான் paste ஆகிறது. மீதி வருவதில்லை ஏன்? இன்னொரு notepad-ல் paste செய்து அதிலிருந்து எடுத்துப் போட்டாலும் வீடியோ வரவில்லை ஏன்?

3. ஒரு முறை ஏற்றப்பட்ட பதிவை/ draft-ல் உள்ள பதிவை மீண்டும் திருத்த edit post கொடுத்து திருத்தி publish செய்தாலும், பழைய வடிவம் தான் மீண்டும் வருகிறது. திருத்த வழியில்லையா?
4. இ-கலப்பை கொண்டு உழுதாலும் மன்னிக்கவும்... எழுதினாலும் எங்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு கணினியில் (windows xp-ல்) ஆங்கிலத்திலும், தமிழிலும் சேர்ந்தே வருகிறது.
எடுத்துக்காட்டுக்கு அந்த கணினியில் தட்டச்சு செய்தவற்றைப் பாருங்கள்.

''tட்hஹ்aஅmம்iஇzழ்''


ie-ல் தட்டச்சும் போதுதான் இப்படி.... தனியாக notepad/wordpad-ல் சரியாக இருக்கிறது.


5..புதிய பதிவு எழுத நுழையும் போது முதலில் இப்படித்தான் வருகிறது.((வடிவமைப்பு செய்யவோ, படங்கள், இணைப்புகள் கொடுக்கவோ வாய்ப்பில்லாமல் இருக்கிறது. அதன்பிறகு refresh கொடுத்தால் மனதுவைத்தால் வருகிறது. இல்லையென்றால் இல்லை.) இதனால் ஆர்வத்தோடு அமரும் பல நேரங்களில் சோர்ந்துபோகச் செய்கிறது.
சரி பிறகாவது படங்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து விட்டுவிட்டால், பிறகு edit post செய்யும்போது வெகு எளிதாகத் திருத்தும் படி இல்லாமல் வெறும் code-களாக வருகிறது. இதனால் படங்களை இணைக்கவோ வடிவமைக்கவோ, வண்ணம் கொடுக்கவோ முடியவில்லை. அது ஏன்?
(இடையிடையே அதிக இங்கிலீஷ் கலந்து எழுதியுள்ளேன். இன்னும் கணினி கலைச் சொற்களில் நான் தேறவில்லை. முடிந்தால் அவற்றுக்கும் நல்ல தமிழ் சொற்களை சொல்லிக் கொடுங்களேன்.)
இன்னும் நிறைய இருக்கு... தெரியாதவற்றை கேட்டுத் தெரிந்துகொள்வதில் எனக்கு வெட்கமில்லை. ஏனெனில் அடுத்த முறை இன்னும் பலருக்கு நான் சொல்லிக் கொடுப்பேன். அதனால் அப்பப்ப கேட்பேன். சுட்டிகளை அனுப்புங்க! இல்லை தெரிஞ்சா சொல்லுங்க!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!