முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விடுதலையை நோக்கி எழும்பும் இசை

தமிழீழ விடுதலையை எதிர்நோக்கும் புதிய தலைமுறை இளைஞர்களின் படைப்பு. பாப் இசை வடிவத்தில்.....
சுஜித்.ஜி, பாடல் வரியில், அவரும், சந்தோஷும் இணைந்து பாடி திரயிலும் தோன்றி
வந்திருக்கிறது இப்பாடல்..

"நோவும் வரும் சாவும் வரும்
ஏதோ ஒரு நாள் விடிவும் வரும்;
கொஞ்சம் பொறு; ஓய்ந்தே இரு
நாளைய நாளில் வரமாய் வரும்."

வலிகளைச் சுமந்து வரும் வரிகளில் விடிவுக்கான ஏக்கமும் தெரிகிறது.
உலகெங்கும் இசை வடிவில் தங்கள் அடிமை சமூகத்தை விடிவுக்கான பாதையில் அழைத்துச் சென்ற இசை மேதைகள் இருந்திருக்கிறார்கள். கருப்பின பாடகர் மைக்கேல் ஜாக்சன் கூட தனது பாடல் வரிகளில் விடுதலைக் குரல்களையும், கருப்பின அடிமைத் தனத்திற்கு எதிரான குரலையும் பதிவு செய்திருக்கிறார் என்று படித்திருக்கிறேன்.
நமது தமிழகத்தில் தான் சமூக விடுதலைக்கும், தங்களுக்கும் சற்றும் தொடர்பில்லாதது போல் நடந்து கொள்ளும் இசை மேதைகளும், மக்களுக்காக பாடுவது வீணானது என்று பேசும் இசைஞானிகளும் இருக்கிறார்கள்.

புரட்சிப்பாடகர் கத்தாரைவிட, இவர்களால் சமூகத்திற்கு ஒன்றும் பயனில்லை. அப்படி எண்ணாமல், தங்கள் இசைத் திறனை விடுதலையை முன்னிறுத்தி வெளிப்படுத்தியிருக்கும் இவ்விளைஞர்கள் பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்கள்.

http://www.youtube.com/watch?v=DVe_zAEQYQc


(வலைப்பதிவில் நேரடியாக 'youtube' தந்த குறிகளை இடமுடியவில்லை.
எனவே இந்த சுட்டியைப் பயன்படுத்திக்கங்கப்பா!)

கருத்துகள்

SurveySan இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்.

சர்வேசன் புகைப்பட போட்டி, புகைப்படம் அனுப்ப கடைசி நாள் Feb 11 2007 11:59 pm IST.
போடோவை surveysan2005 at yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்பிய புகைப்படத்தை போட்டி முடிவுகள் அறிவிக்கும்வரை நீங்கள் வேறு எங்கும் வெளியிடக்கூடாது.

வாக்கெடுப்பு Feb 12 அன்று ஆரம்பிக்கப்படும்.

நன்றிங்கோ!

போட்டி விவரங்கள் இங்கே: போட்டி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!