Tuesday, September 23, 2008

எழுச்சியோடு நடந்த ரயில் மறியல் போராட்டம் - வீடியோ காட்சி


பார்க்க இயலாதவர்கள் இந்த சுட்டியைப் பயன்படுத்திக் கொள்க. http://in.youtube.com/watch?v=tT7Q-UpF0JM


Monday, September 22, 2008

மாபெரும் ரயில் மறியல் போராட்டம்

ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும்,
சிறுபான்மையினர் படுகொலையைக் கண்டித்தும்
திராவிடர் கழகம் சார்பில்
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
மாபெரும் ரயில் மறியல் போராட்டம்.
நாள்: 23-09-08 10:00 pm
தோழர்கள் பெரியார் திடலில் கூடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாழ்த்துரை:
தொல்.திருமாவளவன்,
பாவலர் அறிவுமதி,
அன்புத் தென்னரசன்,
எஸ்றா.சற்குணம்,
பேரா.செல்வநாயகம்,
சையத் சத்தார்
மற்றும் தமிழின உணர்வாளர்கள்.
தமிழனப் பெருமக்களே! ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும், மதவெறிச் சக்திகளின் வன்முறை வெறியாட்டத்தைக் க்ண்டித்தும் ஒன்றிணைவோம்!

Thursday, September 11, 2008

கரும்புலிகள் முகத்தில் தோன்றும் பெருமிதம் பார்!


களப்பலி ஆகப் போகிறோம் என்று தெரிந்தும் - அந்தக்
கரும்புலிகள் முகத்தில் தோன்றும் பெருமிதம் பார்!

"பெரும் புலித் தலைவன் அருகிருந்து எங்கள் விடுதலைப்
பெருங் கனவை வென்றெடுக்க, பாரில் தமிழீழப் புலிக் கொடி
சிறகடிக்க, எதிரி கோட்டையை தூள்தூளாய் சிதறடிப்போம்!
அதில் வெடிகுண்டாய் மாறி எம் உயிர் கொடுப்போம்! - பின்னர்
மாவீரர் தோட்டத்தில் ஓய்வெடுப்போம்" என்று நாட்டுக்காகக்

களப்பலி ஆகப் போகிறோம் என்று தெரிந்தும் - அந்தக்
கரும்புலிகள் முகத்தில் தோன்றும் பெருமிதம் பார்!

போருக்கனுப்பும் தாய் போல தலைவன் முகத்தில் கடமையுணர்வு!
"பாரெங்கள் தலைவனுடன் நாங்கள்" -இது கரும்புலிக் கூட்டத்தின் பெருமையுணர்வு!
தலைவருக்கருகில் அமர்ந்திருக்கும் அந்த இளம்பெண்ணின் பூரிப்பு!
தமிழ் விடுதலையைக் கண்டுவிட்ட பெருஞ்சிரிப்பு! -வீரக்

களப்பலி ஆகப் போகிறோம் என்று தெரிந்தும் - அந்தக்
கரும்புலிகள் முகத்தில் தோன்றும் பெருமிதம் பார்!

-----------------------------------------------------------------------------------
தலைவர் பிரபாகரனுடன் நிழற்படத்தில்...
வவுனியா தாக்குதலில் உயிர் விதைத்த கரும்புலிகள்:
கரும்புலி லெப்டினன்ட் கர்னல் மதியழகன்
கரும்புலி மேஜர் ஆனந்த்
கரும்புலி கேப்டன் கனிமத்
கரும்புலி கேப்டன் முத்து நகன்
கரும்புலி கேப்டன் அறிவுத் தமிழ்
கரும்புலி லெப்டினன்ட் கர்னல் வினோதன்
கரும்புலி மேஜர் நிலாகரன்
கரும்புலி கேப்டன் எழிலகன்
கரும்புலி கேப்டன் அகிலன்
கரும்புலி கேப்டன் நிமலன்

Sunday, September 07, 2008

கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு சத்யராஜ் சவால்!

சென்னை பெரியார் திடலில் நடைபெற்று வரும் முப்பெரும் மாநாடுகளில் ஒன்றான மாநில பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் இன்று (செப்டம்பர் 7-ஆம் தேதி), கலந்துகொண்டு உரையாற்றும் இனமுரசு சத்யராஜ், ஆத்திகர்களுக்கு ஒரு சவால் விடுத்திருக்கிறார்.
"எனக்கோ, அமைச்சர் வேலு போன்ற தலையில் முடி கொட்டிவிட்ட எங்களைப் போன்றவர்களுக்கோ, எந்தக்கடவுளை கும்பிட்டாவது முடி வளருமேயானால், நாங்கள் எங்கள் பகுத்தறிவு வாதங்களையும், கருப்புச் சட்டையயும் கழற்றிவிட்டு உங்களோடு வரத் தயார்...!
ஆத்திகர்கள் தயாரா?" என்று சவால் விடுத்தார்...
என்ன? எப்படி சவுகரியம்.... ஆத்திகர்கள் தயாரா?

_____________________________________________________________
இன்று மாலை தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு "சமூகநீதிக்கான வீரமணி விருது" வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாய்ப்புள்ள தோழர்கள் பெரியார் திடலுக்கு வாருங்கள்! மற்றவர்களுக்காக இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.. அவசியம் பாருங்கள்!
http://periyar.org.in

Friday, September 05, 2008

Symposium on GLOBAL HUMANISM

PERIYAR INTERNATIONAL
CHICAGO, USA

AND
TAMILNADU INTELLECTUAL FORUM
CHENNAI, INDIA
Cordially invite you to participate in the
Symposium
to be held at
Annai Maniammaiyar Hall,
Periyar Thidal, Chennai- 600 007
at 5 pm on 05-09-2008, Friday

The topic for Discussion:
Global Humanism
President:
Dr. K.Veeramani, President, Dravidar Kazhagam
Welcome:
Dr. Soma Elangovan, Periyar International, Chicago
Chief Guest:
Prof. Paul Kurtz, Internationally renowned Humanist
The invitees will exchange their views in the symposium

Vote of thanks:
Dr. V.Sundararajulu, Secretary, TamilNadu Intellectual Forum, Chennai

Related Posts with Thumbnails