முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"அவனாம் - இவனாம்!"

மாநாட்டுச் சிந்தனைகள் - மின்சாரம் எல்லோருக்குமே தெரியும் தந்தை பெரியார் நூல்களை வெளியிடுவதிலோ, பகுத்தறிவு வெளியீடுகளைக் கொண்டு வருவதிலோ திராவிடர் கழகத்தோடு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தோடு போட்டி போட முடியாது என்று அந்தக் குழுவுக்கு மட்டுமா - எல்லோருக்குமே தெரியும். மிக நன்றாகவே தெரியும்! தந்தை பெரியார் கருத்துகளை பகுத்தறிவுச் சிந்தனைகளை யார் எடுத்துச் சொன்னாலும் மானமிகு வீரமணி என்ன சொல்லுகிறார் என்பதுதான் எடுபடும் என்பது அந்தக் குழுவுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே தெரியும். உலகுக்கே தெரியும்! தந்தை பெரியார் கருத்துகளுக்குக் சட்டம் வடிவம் கொடுக்க தேவையான அழுத்தத்தைத் தந்து, சாதிக்கக் கூடிய ஆற்றல் ஆசிரியர் வீரமணிக்குத்தான் உண்டு என்பது அந்தக் குழுவுக்கு மட்டுமல்ல. அகில உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மிக மிக நன்றாகவே தெரியும். யாருக்குத்தான் தெரியாது? தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை எல்லைக் கோடுகளைத் தாண்டி, உலகின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் திறனும், திட்பமும் - அதற்கான அமைப்புகளை உருவாக்கித் தொடர்ந்து செயல்படச் செய்விக்கும் செயல் திறன் சிறு வயது முதலே இயக்கத

மோதல் போக்குதான் நோக்கம்!

மோதல் போக்குதான் நோக்கம்! - மின்சாரம் தந்தை பெரியாரின் நூல்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனதிற்குச் சொந்தமானவை. அவை பதிப்புரிமை பெற்றவை என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஓர் அறிவிப்பினை செய்தாலும் செய்தார்- இது என்ன அநியாயம்! பெரியாரின் சிந்தனைகள் தனி உடைமையா? பெரியாரின் கருத்துகள் மக்களுக்குப் போய்ச் சேரவேண்டாமா? - அதனைத் தடுப்பதா? என்று பெரியார் கொள்கையைப் பரப்புவதற்கென்றே பிறந்தவர்கள்போல் தாம் - தூம் என்று எகிறிக் குதிக்கிறார்கள். கருத்துப் பஞ்சம் ஏற்பட்டு வற்றிப் போய்க்கிடக்கும் சில இதழ்களும், தொலைக்காட்சிகளும் ஆகா - கிடைத்தது ஒரு விஷயம்; அதை வைத்துக் காலட்சேபம் செய்வோம் என்று புறப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இதுதான் சந்தர்ப்பம் என்று பார்ப்பனர் ஒருவர் கூடப் புறப்பட்டு விட்டார் - பெரியார் கருத்துகளைப் பரப்புவதில் அவ்வளவு ஆர்வம் பீறிட்டுக் கிளம்பியிருக்கிறது அவாளுக்கு. தொலைக்காட்சி ஒன்றில் ஒருபட்டி மன்றத்தையே நடத்தினர். பொதுவாக நடுவராகயிருக்கின்றவர் திறந்த மனத்தோடு ஆசனத்தில் அமர்ந்திருக்கவேண்டும். அந்த இலக்கணம் கூடத் தெரிந்து கொள்ளாமலே சில்க் புகழ் வீரர் நடுவராக

ஊன்றிப் படித்து உண்மையை அறிக!

ஊன்றிப் படித்து உண்மையை அறிக! சென்னை மாநாடுகளும் - நமது சிந்தனையும்! - கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம். மதவாதம் இந்தியத் துணைக் கண்டத்தை மட்டுமல்ல - உலகப் பந்தையே உருட்டி மிரட்டிக் கொண்டு இருக்கிறது!வெடிகுண்டுகள் ஒரு பக்கம்; மனிதனே வெடிகுண்டாகி ரத்தத்தைக் குடித்துக் கொண்டு இருக்கிறான் மறுபக்கம்! ஓருயிர் போகட்டும் - அதற்கு விலையாக ஒரு நூறு உயிர்களைக் குடிப்போம் என்கிற குரூரப் புத்தியை மதங்கள் மலிவாக வழங்கிக் கொண்டு இருக்கின்றன.கடவுளிடம் அனுமதி பெற்று ஈராக்கின் மீது போர் தொடுத்தோம் என்று படித்த மனிதன் - அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் விஷம் கக்குகிறார்.ஒரு மதத்துக்கும், இன்னொரு மதத்துக்கும் மட்டுமல்ல - ஒரு மதத்தின் குட்டிகளுக்குள்ளேயே கூட அடிதடி - ரணம் - ரத்த ஆறு!மதம் வழி காட்டியது போதும், போதும்! புது வழியைத் தேடும் - புதுப் பார்வையை நாடும் ஒரு காலகட்டம் இது.இதற்குத் தேவைப்படும் மாமனிதர்தான் தந்தை பெரியார் - மாமருந்துதான் தந்தை பெரியார் என்ற சமூக விஞ்ஞானி கண்டுபிடித்துக் கொடுத்த சுயமரியாதை - சமத்துவ - பகுத்தறிவுச் சித்தாந்தம்!உலகில் இதற்கான ஒரே ஒரு தனித்தன்மை வாய்ந்த இய

வரட்டும் கலைஞருக்கு கைது ஆணை!

கொம்பு முளைத்த உச்சநீதிமன்றம், மக்கள் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழினத் தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. நூற்றண்டு கால தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை, பாதி பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மத நம்பிக்கை என்னும் புரட்டைச் சொல்லி தடுக்க நினைப்பவர்களுக்கு உச்சநீதிமன்றம் அடைக்கலம் கொடுக்குமாம்; இதைப் பார்த்துக் கொண்டு இன உணர்வாளர்கள் சும்மா இருக்க வேண்டுமாம். உச்சிக்குடுமி நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தலையாட்டிக் கொண்டிருக்க வேண்டுமாம். அப்படி இல்லாமல், சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து முடிக்கக்கோரி அமைதியான வழியில், சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வழியில் பந்த் அறிவித்தால் அதை இரவுக்கிரவே கூடித் தடுக்குமாம் உச்ச நீதிமன்றம். சரி, உச்சநீதிமன்றத்திற்கு மதிப்புக் கொடுத்து உண்ணாநிலைப் போராட்டம் என்று அதை மாற்றிக் கொண்டு, உரிய நேரத்தில் அலுவலகத்துக்கு சென்று கையொப்பமிட்டு பணியை மேற்கொண்டார் கலைஞர். பார்த்துக்கொண்டிருந்த தமிழக மக்கள் தன்னெழுச்சியாக 'பந்த்' நடத்தி, உச்ச நீதிமன்றத்த